கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலை கோயிலில் இன்று கொடியேற்றம்!

கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலை கோயிலில் இன்று கொடியேற்றம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, இன்று கொடியேற்றம் நடைபெற்றது. கோயிலின் 3-ம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ள தங்கக்கொடி மரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெறது. இந்த விழாவில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக, பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப் படவில்லை. இதுகுறித்து கோயில் அதிகாரிகள் தெரிவித்ததாவது:

திருவண்ணாமகை அண்னாமலையார் ஆலயத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் கலந்து கொள்ள ஏற்கனவே ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மற்றும் அடையாள அட்டை பெற்ற உள்ளூர் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். அந்த வகையில் வருகிற 19-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி எதிரில் பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக 3,500 கிலோ நெய், ஆயிரம் மீட்டர் திரி பயன்படுத்தப்படும்.

இவ்வாறு கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com