ஸ்தூல பஞ்சாட்சரமும்; சூட்சும பஞ்சாட்சரமும்!.'நமசிவாய' என்பது ஸ்தூல பஞ்சாட்சரம், 'சிவாயநம' என்பது சூட்சும பஞ்சாட்சரம். 'ஸ்தூல' என்றால் கண்களால் காணக்கூடியது. 'சூட்சுமம்' என்றால் கண்களால் காண முடியாதது. அதாவது, 'நமசிவாய' என்று தெளிவாக உச்சரித்து வழிபட்டால், ஈசன் நம் கண்களுக்குப் புலப்படுவார். 'சிவாயநம' என்று மனதிற்குள் சொல்லி தியானித்தால், ஈசன் நம் மனதிலேயே உறைவார்..திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொற்பொழிவிலிருந்து….தடை; அதை உடை!.ஆன்மிக வாழ்க்கையில் தடைகளைச் சேர்த்துக்கொள்ளாதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக தேவைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். தியாக மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு, உங்களால் இயன்றவரை பிறருக்குத் தொண்டு செய்யுங்கள். இதனால் தடைகளும் துன்பங்களும் தங்களை நெருங்காது..ஒவ்வொருவரும் மன மகிழ்ச்சியுடன் இருக்கவே ஆவல் கொண்டுள்ளனர். அத்துடன் குறைவாகப் பணி செய்து, அதிகமான பலன் பெற்றிட விரும்புகின்றனர்; குறைவாகக் கொடுத்து, அதிக லாபம் பெற விரும்புகின்றனர். இந்த ஒவ்வொரு விருப்பமும் எதார்த்தத்தைத் தடை செய்து விடும். இடையூறாக, நம் பாதத்தையும் பின்னோக்கி இழுத்துவிடும்..பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அருளுரையிலிருந்து….வாழ்க்கை ஒரு போர்!.தனக்கென விதிக்கப்பட்ட குடும்பக் கடமைகளை சம்பந்தப்பட்டவகள் பரிபூரணமாகச் செய்ய வேண்டும். கடமைகளுக்கு பயந்து வாழ்க்கையைத் துறந்து ஓடுவது கோழைத்தனம். இந்த உலகத்தின் சிக்கல்களுக்கு நடுவே இருந்தபடி, குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுத்து, இறைவனை நினைத்தபடி வாழ வேண்டும். வாழ்க்கையின் கடமைகளைச் செய்யாமல் ஓடுகிறவர்கள் ஆன்மிக வாழ்க்கைக்குத் தகுதி அற்றவர்கள். அதனால்தான் பகவான் கிருஷ்ணர் போர்க்களத்திலிருந்து அர்ஜுனனைப் பின்வாங்க அனுமதிக்கவில்லை. வாழ்க்கை ஒரு போர். அது தவிர்க்கப்பட வேண்டியதோ, ஒதுக்கப்பட வேண்டியதோ இல்லை..மாதா அமிர்தானந்தமயி அருளுரையிலிருந்து….நாராயண வெளிப்பாடு!.ராமாயணத்திலே ஸ்ரீராமபிரான் இரு முறை, தான் கடவுள் என்பதை வெளிப்படுத்துகிறார். ஜடாயு மற்றும் சபரி ஆகிய இரு பக்தர்களின் அபரிமிதமான அன்பினால் அவர்களுக்கு, 'வைகுண்ட பதவி' அளிப்பதாக உறுதி அளிக்கும்போது தானே நாராயணன் எனத் தெரியப்படுத்தினான்..இளம்பிறை மணிமாறன் சொற்பெழிவிலிருந்து….– தொகுப்பு : கே.பிரபாவதி, மேலக்கிருஷ்ணன்புதூர்
ஸ்தூல பஞ்சாட்சரமும்; சூட்சும பஞ்சாட்சரமும்!.'நமசிவாய' என்பது ஸ்தூல பஞ்சாட்சரம், 'சிவாயநம' என்பது சூட்சும பஞ்சாட்சரம். 'ஸ்தூல' என்றால் கண்களால் காணக்கூடியது. 'சூட்சுமம்' என்றால் கண்களால் காண முடியாதது. அதாவது, 'நமசிவாய' என்று தெளிவாக உச்சரித்து வழிபட்டால், ஈசன் நம் கண்களுக்குப் புலப்படுவார். 'சிவாயநம' என்று மனதிற்குள் சொல்லி தியானித்தால், ஈசன் நம் மனதிலேயே உறைவார்..திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொற்பொழிவிலிருந்து….தடை; அதை உடை!.ஆன்மிக வாழ்க்கையில் தடைகளைச் சேர்த்துக்கொள்ளாதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக தேவைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். தியாக மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு, உங்களால் இயன்றவரை பிறருக்குத் தொண்டு செய்யுங்கள். இதனால் தடைகளும் துன்பங்களும் தங்களை நெருங்காது..ஒவ்வொருவரும் மன மகிழ்ச்சியுடன் இருக்கவே ஆவல் கொண்டுள்ளனர். அத்துடன் குறைவாகப் பணி செய்து, அதிகமான பலன் பெற்றிட விரும்புகின்றனர்; குறைவாகக் கொடுத்து, அதிக லாபம் பெற விரும்புகின்றனர். இந்த ஒவ்வொரு விருப்பமும் எதார்த்தத்தைத் தடை செய்து விடும். இடையூறாக, நம் பாதத்தையும் பின்னோக்கி இழுத்துவிடும்..பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அருளுரையிலிருந்து….வாழ்க்கை ஒரு போர்!.தனக்கென விதிக்கப்பட்ட குடும்பக் கடமைகளை சம்பந்தப்பட்டவகள் பரிபூரணமாகச் செய்ய வேண்டும். கடமைகளுக்கு பயந்து வாழ்க்கையைத் துறந்து ஓடுவது கோழைத்தனம். இந்த உலகத்தின் சிக்கல்களுக்கு நடுவே இருந்தபடி, குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுத்து, இறைவனை நினைத்தபடி வாழ வேண்டும். வாழ்க்கையின் கடமைகளைச் செய்யாமல் ஓடுகிறவர்கள் ஆன்மிக வாழ்க்கைக்குத் தகுதி அற்றவர்கள். அதனால்தான் பகவான் கிருஷ்ணர் போர்க்களத்திலிருந்து அர்ஜுனனைப் பின்வாங்க அனுமதிக்கவில்லை. வாழ்க்கை ஒரு போர். அது தவிர்க்கப்பட வேண்டியதோ, ஒதுக்கப்பட வேண்டியதோ இல்லை..மாதா அமிர்தானந்தமயி அருளுரையிலிருந்து….நாராயண வெளிப்பாடு!.ராமாயணத்திலே ஸ்ரீராமபிரான் இரு முறை, தான் கடவுள் என்பதை வெளிப்படுத்துகிறார். ஜடாயு மற்றும் சபரி ஆகிய இரு பக்தர்களின் அபரிமிதமான அன்பினால் அவர்களுக்கு, 'வைகுண்ட பதவி' அளிப்பதாக உறுதி அளிக்கும்போது தானே நாராயணன் எனத் தெரியப்படுத்தினான்..இளம்பிறை மணிமாறன் சொற்பெழிவிலிருந்து….– தொகுப்பு : கே.பிரபாவதி, மேலக்கிருஷ்ணன்புதூர்