– எம்.கோதண்டபாணி.காசி திருத்தலம் சென்று கங்கையில் நீராடும் பெரும் பேறு அனைவருக்கும் வாய்ப்பதில்லை. அக்குறையைப் போக்கும் விதமாக, தமிழகத்தில் அமைந்த திருவிசநல்லூர் திருத்தலத்தில் உள்ள ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் இருக்கும் கிணற்றில் வருடத்துக்கு ஒருமுறை, அதாவது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று கங்கா தேவி பிரவேசிக்கிறாள். அன்று ஏராளமான பக்தர்கள் இந்த கிணற்றில் நீராடி பாவம் போக்கி, புண்ணியம் பெறுகின்றனர்..அன்பர்களின் குறை போக்கி அருளும் அம்மையப்பனாம் சிவபெருமானிடத்தில் அளவற்ற பக்தி கொண்டிருந்தார் ஸ்ரீதர அய்யாவாள். இவர் மைசூர் சமஸ்தானத்தில் திவானாகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். சிவ பக்தியின் மிகுதியால் தாம் செய்து வந்த பணியை விடுத்து, நாடெங்கிலும் உள்ள சிவத் தலங்களை தரிசிப்பதிலும், சிவ நாமத்தை உச்சரிப்பதிலும் தம்மை முழுமையாகவே ஈடுபடுத்திக்கொண்டார். .அப்படியான தமது புனிதப் பயணத்தில், காவிரிக் கரையோர சிவத் தலங்களை தரிசித்தபடி திருவிடைமருதூர் திருத்தலத்துக்கு வருகை தந்தார். அங்கே அமைந்த அருள்மிகு மகாலிங்க சுவாமியின் தரிசனம் கண்டு பரவசமானார். அதோடு, தினமும் மகாலிங்க சுவாமியின் தரிசனம் காண வேண்டுமென்ற தீராத ஆசை அவரது மனதில் தோன்ற, அருகிலுள்ள திருவிசநல்லூர் எனும் பதியில் அமைந்த ஒரு வீட்டில் தங்கிவிட்டார்..அய்யாவாள் அப்பதியில் தங்கியிருந்த காலத்தில் அவரது தந்தை லிங்கார்யர் அவர்களுக்கு திதி கொடுக்கும் நாள் வந்தது. தந்தைக்கு சிராத்தம் கொடுக்க வேண்டுமென்பதால், அந்தணர்களை அழைத்து சிராத்தப் பணிகளைச் செய்தார். அய்யாவாள் கொண்டசிவ பக்தியின் மேன்மையை உலகுக்கு உணர்த்த திருவுளம் கொண்டார் ஈசன். சிராத்த வேலைகள் முடிந்ததும் காவிரியில் நீராட சென்ற அய்யாவாளின் எதிரே பரம தரித்திரனாக வேடம் பூண்டு சிவபெருமான் தோன்றினார்..வந்தவர், "ஐயா… பசிக்கிறது. சாப்பிட உணவு கொஞ்சம் தாருங்கள்" என்று யாசகம் கேட்டார். அவர் மீது இரக்கம் கொண்ட அய்யாவாள், அவரை தமது வீட்டுக்கு அழைத்துச் சென்று சிராத்தம் கொடுக்கும் முன்பு, அந்தணர்கள் உண்ண வைத்திருந்த உணவில் ஒரு பகுதியைக் கொடுத்து அந்த ஏழையின் பசியைப் போக்கினார். திதி கொடுத்த பின்பு அந்தணர்கள்தான் முதலில் உணவு ஏற்க வேண்டும். அதன் பின்பு பசுக்களுக்கு உணவு தர வேண்டும் என்பது நியதி. இந்த நியதியைக் கடைபிடிக்காத அய்யாவாள், தமது கருணை உள்ளத்தால் முதலில் அந்த ஏழையின் பசியைப் போக்கினார். இதனால் கோபம் கொண்ட அந்தணர்கள், சிராத்தத்தை செய்து வைக்காமல் அய்யாவாள் வீட்டை விட்டு வெளியேறியதோடு, "அந்தணர் ஏற்கும் உணவை அடுத்தவருக்குக் கொடுத்ததால் உனக்குத் தீட்டு ஏற்பட்டுவிட்டது. நீ காசிக்குச் சென்று கங்கையில் நீராடி, உனக்கு ஏற்பட்ட பாவத்தைப் போக்கிக்கொண்டு வந்தால்தான் திதி கொடுப்போம்" என்று கூறிச் சென்று விட்டனர்..'ஒரே நாளில் காசிக்குச் சென்று நீராடி விட்டு, திரும்பி வந்து எப்போது சிராத்தம் கொடுப்பது?' என்ற குழப்பத்தில் ஆழ்ந்த அய்யாவாள், சற்று நேரத்தில் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டார். அப்போது அவரது கனவில் தோன்றிய சிவபெருமான், "பக்தனே, கவலை வேண்டாம். உனது வீட்டுக் கிணற்றிலேயே கங்கையை பிரவேசிக்கச் செய்கிறேன்" எனக் கூறி மறைந்து விட்டார். அன்று கார்த்திகை மாத அமாவாசை தினம். தம் வீட்டுக் கிணற்றில் கங்கை பிரசன்னம் ஆகப் போகிறாள் என்ற மகிழ்ச்சியில் அய்யாவாள் கிணற்றின் அருகே அமர்ந்து கங்காஷ்டகம் பாடத் தொடங்கினார். இதையறிந்த ஊர் மக்கள் அனைவரும் அங்கே கூடி விட்டனர்..ஊர் மக்கள் அய்யாவாள் பாடிய கங்காஷ்டகத்தில் லயித்திருக்க, சற்று நேரத்தில் கங்கை அந்தக் கிணற்றில் வெள்ளமென ஆர்ப்பரித்துப் பொங்கி எழுந்தது. கிணற்றிலிருந்து வெளிப்பட்ட கங்கை, சற்று நேரத்துக்கெல்லாம் ஊரையே வெள்ளக்காடாக மாற்றியது. இன்னும் சற்று நேரம் பொறுத்தால் அந்த ஊரே கங்கை பிரவாகத்தில் மூழ்கி விடும் என்ற நிலை ஏற்பட்டது..அதைக் கண்ட சிராத்தம் கொடுக்க வந்த அந்தணர்கள், தங்களை மன்னிக்கும்படியும், வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்தும்படியும் அய்யாவாளிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டனர். அதன்படி அய்யாவாள் இறைவனிடம் கங்கையின் பிரவாகத்தை கட்டுப்படுத்தும்படி வேண்ட, கிணற்றில் பொங்கிய கங்கையின் பிரவாகம் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அய்யாவாள் கொண்ட சிவ பக்தியின் மேன்மையை அறிந்த அந்தணர்கள், அவரது தந்தையின் சிராத்தத்தை முழுமையாக நடத்திக் கொடுத்தனர்..இந்த நிகழ்வைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை (4.12.2021) பக்தர்கள் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். அன்று அய்யாவாளின் சிவ பக்தியை உலகுக்கு உணர்த்த கங்கா தேவி வெளிப்பட்ட அந்தக் கிணறு, இன்றும் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் உள்ளது. அதோடு, ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இந்தக் கிணற்றில் கங்கை நீர் பொங்கி வருவதும் ஐதீகமாக கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தில் அந்தக் கிணற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுவதும் ஒவ்வொரு வருடமும் பக்திப் பரவசமாய் நடைபெற்று வரும் நிகழ்வாக உள்ளது.
– எம்.கோதண்டபாணி.காசி திருத்தலம் சென்று கங்கையில் நீராடும் பெரும் பேறு அனைவருக்கும் வாய்ப்பதில்லை. அக்குறையைப் போக்கும் விதமாக, தமிழகத்தில் அமைந்த திருவிசநல்லூர் திருத்தலத்தில் உள்ள ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் இருக்கும் கிணற்றில் வருடத்துக்கு ஒருமுறை, அதாவது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று கங்கா தேவி பிரவேசிக்கிறாள். அன்று ஏராளமான பக்தர்கள் இந்த கிணற்றில் நீராடி பாவம் போக்கி, புண்ணியம் பெறுகின்றனர்..அன்பர்களின் குறை போக்கி அருளும் அம்மையப்பனாம் சிவபெருமானிடத்தில் அளவற்ற பக்தி கொண்டிருந்தார் ஸ்ரீதர அய்யாவாள். இவர் மைசூர் சமஸ்தானத்தில் திவானாகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். சிவ பக்தியின் மிகுதியால் தாம் செய்து வந்த பணியை விடுத்து, நாடெங்கிலும் உள்ள சிவத் தலங்களை தரிசிப்பதிலும், சிவ நாமத்தை உச்சரிப்பதிலும் தம்மை முழுமையாகவே ஈடுபடுத்திக்கொண்டார். .அப்படியான தமது புனிதப் பயணத்தில், காவிரிக் கரையோர சிவத் தலங்களை தரிசித்தபடி திருவிடைமருதூர் திருத்தலத்துக்கு வருகை தந்தார். அங்கே அமைந்த அருள்மிகு மகாலிங்க சுவாமியின் தரிசனம் கண்டு பரவசமானார். அதோடு, தினமும் மகாலிங்க சுவாமியின் தரிசனம் காண வேண்டுமென்ற தீராத ஆசை அவரது மனதில் தோன்ற, அருகிலுள்ள திருவிசநல்லூர் எனும் பதியில் அமைந்த ஒரு வீட்டில் தங்கிவிட்டார்..அய்யாவாள் அப்பதியில் தங்கியிருந்த காலத்தில் அவரது தந்தை லிங்கார்யர் அவர்களுக்கு திதி கொடுக்கும் நாள் வந்தது. தந்தைக்கு சிராத்தம் கொடுக்க வேண்டுமென்பதால், அந்தணர்களை அழைத்து சிராத்தப் பணிகளைச் செய்தார். அய்யாவாள் கொண்டசிவ பக்தியின் மேன்மையை உலகுக்கு உணர்த்த திருவுளம் கொண்டார் ஈசன். சிராத்த வேலைகள் முடிந்ததும் காவிரியில் நீராட சென்ற அய்யாவாளின் எதிரே பரம தரித்திரனாக வேடம் பூண்டு சிவபெருமான் தோன்றினார்..வந்தவர், "ஐயா… பசிக்கிறது. சாப்பிட உணவு கொஞ்சம் தாருங்கள்" என்று யாசகம் கேட்டார். அவர் மீது இரக்கம் கொண்ட அய்யாவாள், அவரை தமது வீட்டுக்கு அழைத்துச் சென்று சிராத்தம் கொடுக்கும் முன்பு, அந்தணர்கள் உண்ண வைத்திருந்த உணவில் ஒரு பகுதியைக் கொடுத்து அந்த ஏழையின் பசியைப் போக்கினார். திதி கொடுத்த பின்பு அந்தணர்கள்தான் முதலில் உணவு ஏற்க வேண்டும். அதன் பின்பு பசுக்களுக்கு உணவு தர வேண்டும் என்பது நியதி. இந்த நியதியைக் கடைபிடிக்காத அய்யாவாள், தமது கருணை உள்ளத்தால் முதலில் அந்த ஏழையின் பசியைப் போக்கினார். இதனால் கோபம் கொண்ட அந்தணர்கள், சிராத்தத்தை செய்து வைக்காமல் அய்யாவாள் வீட்டை விட்டு வெளியேறியதோடு, "அந்தணர் ஏற்கும் உணவை அடுத்தவருக்குக் கொடுத்ததால் உனக்குத் தீட்டு ஏற்பட்டுவிட்டது. நீ காசிக்குச் சென்று கங்கையில் நீராடி, உனக்கு ஏற்பட்ட பாவத்தைப் போக்கிக்கொண்டு வந்தால்தான் திதி கொடுப்போம்" என்று கூறிச் சென்று விட்டனர்..'ஒரே நாளில் காசிக்குச் சென்று நீராடி விட்டு, திரும்பி வந்து எப்போது சிராத்தம் கொடுப்பது?' என்ற குழப்பத்தில் ஆழ்ந்த அய்யாவாள், சற்று நேரத்தில் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டார். அப்போது அவரது கனவில் தோன்றிய சிவபெருமான், "பக்தனே, கவலை வேண்டாம். உனது வீட்டுக் கிணற்றிலேயே கங்கையை பிரவேசிக்கச் செய்கிறேன்" எனக் கூறி மறைந்து விட்டார். அன்று கார்த்திகை மாத அமாவாசை தினம். தம் வீட்டுக் கிணற்றில் கங்கை பிரசன்னம் ஆகப் போகிறாள் என்ற மகிழ்ச்சியில் அய்யாவாள் கிணற்றின் அருகே அமர்ந்து கங்காஷ்டகம் பாடத் தொடங்கினார். இதையறிந்த ஊர் மக்கள் அனைவரும் அங்கே கூடி விட்டனர்..ஊர் மக்கள் அய்யாவாள் பாடிய கங்காஷ்டகத்தில் லயித்திருக்க, சற்று நேரத்தில் கங்கை அந்தக் கிணற்றில் வெள்ளமென ஆர்ப்பரித்துப் பொங்கி எழுந்தது. கிணற்றிலிருந்து வெளிப்பட்ட கங்கை, சற்று நேரத்துக்கெல்லாம் ஊரையே வெள்ளக்காடாக மாற்றியது. இன்னும் சற்று நேரம் பொறுத்தால் அந்த ஊரே கங்கை பிரவாகத்தில் மூழ்கி விடும் என்ற நிலை ஏற்பட்டது..அதைக் கண்ட சிராத்தம் கொடுக்க வந்த அந்தணர்கள், தங்களை மன்னிக்கும்படியும், வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்தும்படியும் அய்யாவாளிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டனர். அதன்படி அய்யாவாள் இறைவனிடம் கங்கையின் பிரவாகத்தை கட்டுப்படுத்தும்படி வேண்ட, கிணற்றில் பொங்கிய கங்கையின் பிரவாகம் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அய்யாவாள் கொண்ட சிவ பக்தியின் மேன்மையை அறிந்த அந்தணர்கள், அவரது தந்தையின் சிராத்தத்தை முழுமையாக நடத்திக் கொடுத்தனர்..இந்த நிகழ்வைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை (4.12.2021) பக்தர்கள் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். அன்று அய்யாவாளின் சிவ பக்தியை உலகுக்கு உணர்த்த கங்கா தேவி வெளிப்பட்ட அந்தக் கிணறு, இன்றும் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் உள்ளது. அதோடு, ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இந்தக் கிணற்றில் கங்கை நீர் பொங்கி வருவதும் ஐதீகமாக கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தில் அந்தக் கிணற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுவதும் ஒவ்வொரு வருடமும் பக்திப் பரவசமாய் நடைபெற்று வரும் நிகழ்வாக உள்ளது.