குளிர்கால ஒலிம்பிக்ஸை புறக்கணித்தால் நல்லுறவு பாதிக்கப்படும்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

குளிர்கால ஒலிம்பிக்ஸை புறக்கணித்தால் நல்லுறவு பாதிக்கப்படும்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்ஸை அமெரிக்கா புறக்கணித்தால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நல்லுறவு பாதிக்கப்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்னும் 2 மாதங்களில் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளை புறக்கணிக்கப் போவதாக அமெரிக்க அரசு அறிவிப்பு வெளியிட்டது பரபரப்பைக் கிளப்பியது. இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் தெரிவித்ததாவது:

சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் அமெரிக்க வீரர், வீராங்கனைகள் பங்கேற்பர்கள். ஆனால் இப்போட்டிக்கான கொண்டாட்டங்கள், விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் அதிகாரிகள் யாரும் கலந்துக்கொள்ள மாட்டார்கள். சீனாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

இவ்வாறு அமெரிக்க செய்தித்துறை அதிகாரி தெரிவித்ததற்கு, சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவோ லிஜியன் தெரிவித்ததாவது:

அமெரிக்கா ஒலிம்பிக் விளையாட்டில் அரசியல் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும். அமெரிக்காவின் இந்த முடிவு ஒலிம்பிக் கொள்கைகளுக்கு எதிரானது. உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த வீரர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களின் நிலைப்பாட்டிற்கு எதிரான இந்த கொள்கையை அமெரிக்கா எடுத்துள்ளது.இதன் மூலம் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நல்லுறவு பாதிக்கபடும்.

இவ்வாறு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com