Kalaripayattu
Kalaripayattu

ஆங்கிலேயர்களை அதிரவைத்த கம்பீரமான களரிப்பயட்டின் வரலாறு தெரியுமா?

Published on

ளரி என்று அழைக்கப்படும் கம்பீரமான களரிப்பயட்டு இந்தியாவின் கேரளாவில் இருந்து வந்த ஒரு பழங்கால தற்காப்பு கலை மற்றும் குணப்படுத்தும் முறையாகும். இது உலகின் மிகப் பமையான தற்காப்பு கலைகளில் ஒன்றாகும். அதன் வளமான வரலாறு, தனித்துவமான நுட்பங்கள் மற்றும் முழுமையான அணுகுமுறை ஆகியவை இந்திய கலாசாரத்தின் மதிப்புமிக்க பகுதியாகவும், உலகளவில் விரும்பப்படும் நடைமுறையாகவும் உள்ளன.

பண்டைய தோற்றம்: களரியின் வரலாறு வேத காலத்தில் இருந்து சுமார் 5000 ஆண்டுகளுக்கு  முந்தையது.11ம் நூற்றாண்டில் இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள கேரளாவில் தோன்றியது. களரியின் புரவலர் தெய்வமாக கருதப்படும் சிவபெருமானின் வழிபாட்டுடன் இந்த கலை நெருக்கமாக பிணைந்துள்ளது. மகாபாரதத்தில் களரியை கேரளாவில் போர் வீரர்களால் கடைப்பிடிக்கப்பட்ட ஒரு தற்காப்புக் கலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புராணத்தின்படி, பரசுராம அவதாரத்தில் பரசுராமர் சிவபெருமானிடம் இருந்து இந்த கலையைக் கற்றுக்கொண்டதாகவும், உலகை கடல் தளத்திலிருந்து மேலே கொண்டு வந்த சிறிது நேரத்திலேயே அங்கு குடியேறியவர்களுக்கு அதை கற்றுக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

பரிணாமம் மற்றும் பரவல்: காலப்போக்கில் களரி கேரளா முழுவதும் பரவியது. அங்கு இதை கற்பிக்க பள்ளிகள் தோன்றின. களரி கற்றுத்தரும் மாஸ்டர்கள் இந்தியா முழுவதும் பயணம் செய்து தங்கள் அறிவு மற்றும் நுட்பங்களை நாடு முழுவதும் பரப்பினர்.

முகலாய மற்றும் பிரிட்டிஷ் செல்வாக்கு: முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் காலத்தில் களரி குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டது. காலனித்துவ ஆட்சியாளர்களால் இந்தக் கலை ஒடுக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் களரி கலையை தங்கள் அதிகாரத்திற்கு விடப்படும் அச்சுறுத்தலாக கருதினர். பல களரிப் பள்ளிகள் அழிக்கப்பட்டன. இருப்பினும் ஒருசில அர்ப்பணிப்பு உணர்வுள்ள மாஸ்டர்களால் ரகசியமாக களரி பயிற்சி கற்றுத் தரப்பட்டது.

மறுமலர்ச்சி மற்றும் நவீனமயமாக்கல்: இருபதாம் நூற்றாண்டில் களரியை புதுப்பிக்கவும் நவீனப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய அரசாங்கம் களரியை 1990ம் ஆண்டு தேசிய பாரம்பரிய கலை வடிவமாக அங்கீகரித்தது. இன்று கேரளாவில் நூற்றுக்கும் அதிகமான அங்கீகரிக்கப்பட்ட களரி பள்ளிகள் உள்ளன. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பயிற்சியாளர்கள் உள்ளனர். வடக்கன் களரி, தெக்கன் களரி என இரு வகைப்படும் இந்தக் கலை தற்போது கேரளா மற்றும் தமிழகத்தின் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் பயிற்றுவிக்கப்படுகிறது.

களரியின் முக்கிய அம்சங்களும் பலன்களும்: அடித்தல், உதைத்தல், கொழுவி பிடித்தல், தொடர் தாக்குதல், நகர்வுகள், ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் ஆகியவற்றையும், உடன் பிடித்தல், மூலிகைகள் போன்ற மருத்துவ நுணுக்கங்களையும் உள்ளடக்கிய ஒரு கலை ஆகும். களரி என்பது உடல் அசைவுகள், தியானம் மற்றும் ஆன்மிக நடைமுறைகளை ஒருங்கிணைக்கும் ஒரு முழுமையான அமைப்பாகும். இதில் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?
Kalaripayattu

ஆசனங்கள்: இவை நெகிழ்வுத்தன்மை, வலிமை மற்றும் உடலின் சமநிலையை ஊக்குவிக்கும் உடல் நிலைகளில் தொடர்.

வின்யாசா: ஆசனங்களை இணைக்கும் இயக்கங்களின் பாயும் வரிசை.

முத்திரைகள்: கை மற்றும் விரல் சைகைகள், உடலின் ஆற்றலை செதுக்குகின்றன மற்றும் குணப்படுத்துவதை ஊக்குவிக்கின்றன.

பிராணாயாமா: உடலின் ஆற்றலை சமநிலைப்படுத்தும் சுவாச நுட்பங்கள் இதில் உள்ளன.

கிரியாக்கள்: உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தும் சடங்குகள்.

வர்மா: சிகிச்சை முறை மற்றும் தற்காப்புக்காக பயன்படுத்தப்படும் அழுத்த புள்ளிகளின் அமைப்பு.

ஆரோக்கிய நன்மைகள்: களரி ஒரு தற்காப்பு கலை மட்டுமல்ல, முழுமையான குணப்படுத்தும் முறையும் கூட. இந்தப் பயிற்சியை செய்வதால் உடலுக்கு மேம்படுத்தப்பட்ட நெகிழ்வுத்தன்மை மற்றும் வலிமை, குறைக்கப்பட்ட மன அழுத்தம் மற்றும் பதற்றம், மேம்படுத்தப்பட்ட இருதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு செயல்பாடு மேம்பாடு அதிகரிப்பு, ஆற்றல் மற்றும் உயிர் சக்தி கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com