அழிந்த கலைகள்; அழியாப் பெருமைகள் - 1: எக்காளக்கூத்து!

முனைவர் அ.கா. பெருமாள் - நாட்டுப்புற கலைகள் ஆய்வாளர்
Ekkalakoothu
Ekkalakoothu
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மங்கையர் மலர் இதழில், 2016 ஆம் ஆண்டு, 'அழிந்த கலைகள்; அழியாப் பெருமைகள்!’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...

தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.

சந்தா செலுத்த...

முனைவர் அ.கா.பெருமாள், பல்வேறு நாட்டுப்புறக் கலைகளை ஆய்வுசெய்து இதுவரை நாட்டுப்புறவியல் தொடர்பாக மட்டும் 57 புத்தகங்கள் எழுதியுள்ளார். இவர் ஆய்வு செய்துள்ள கலைகள் 103. அவற்றில் தற்போது வழக்கத்தில் இல்லாத சில கலைகள் பற்றிய அரிய தகவல்களை நமக்கு அளிக்கிறார்...

எக்காளம் எருமைக் கொம்பால் செய்யப்பட்ட ஊதுகுழல் போன்ற இசைக்கருவி. இது சப்தமாக ஒலிக்கும். நாயக்கர் சமூகத்தின் ஒரு பிரிவினராகிய தொட்டியம்பட்டு நாயக்கருக்குரியது. நாயக்கர் வாழ்வுடன் தொடர்புடையது. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இந்த நாயக்கர், வேளாண் தொழிலையும் மேய்ச்சல் தொழிலையும் செய்பவர்கள் என்றாலும் வேட்டையாடுவதை முக்கியமாகக்கொண்டிருந்தனர்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com