அழிந்த கலைகள்; அழியாப் பெருமைகள் - 2: களமெழுத்துப் பாட்டு!

முனைவர் அ.கா. பெருமாள் - நாட்டுப்புற கலைகள் ஆய்வாளர்
Kalameluththu Pattu
Kalameluththu Pattu
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மங்கையர் மலர் இதழில், 2016 ஆம் ஆண்டு, 'அழிந்த கலைகள்; அழியாப் பெருமைகள்!’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...

தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.

சந்தா செலுத்த...

தெய்வம் வீற்றிருக்கும் கோயிலின் முன் உள்ள வளாகத்தில் பரந்த இடத்தில் (களம்) தெய்வத்தின் உருவத்தை வண்ணப் பொடிகளால் வரைவதும் அத் தெய்வத்தைப் போற்றிப் பாடுவதும் ஆகிய இரு கூறுகளைக்கொண்டது இக்கலை. கேரளத்தில் பரவலாக வளர்ந்த இக்கலை கன்னியாகுமரி மாவட்டத்திலும் பரவியது. ஆனால், இப்போது அபூர்வமாகிவிட்டது.

காளி, துர்க்கை, சாஸ்தா, வேட்டைக்காரன், அய்யப்பன், நாகம் ஆகிய தெய்வங்களின் கோயில்களில் நேர்ச்சைக் கலையாக இது நிகழ்த்தப்படும். இக்கலை நிகழ்வில் படம் வரைவதும், பாடுவதும் முக்கியம். படத்தின் பரப்பளவை பொறுத்து இக்கலை நிகழ்த்தும் நேரம் அமையும்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com