அழிந்த கலைகள்; அழியாப் பெருமைகள் - 5: கல்யாணச் சாமி!

முனைவர் அ.கா. பெருமாள் - நாட்டுப்புற கலைகள் ஆய்வாளர்
Kalyana Sami
Kalyana Sami
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மங்கையர் மலர் இதழில், 2016 ஆம் ஆண்டு, 'அழிந்த கலைகள்; அழியாப் பெருமைகள்!’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...

தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.

சந்தா செலுத்த...

கரகாட்டத்தின் இடை நிகழ்ச்சியாகவும், பொழுதுபோக்கு விழாக்களில் தனி நிகழ்ச்சியாகவும் நிகழ்த்தப்பட்ட கலை இது. பாடல், உரையாடல், நடிப்பு என அமைந்தது. கோயில் வாகனம் வீதியில் வலம் வரும்போது ஒரு புறம் நிகழ்வது. பெரும்பாலும் பின்னிரவில் நிகழும். இந்தச் சிறு நிகழ்வில் ஒரு பெண், முதியவர் ஒருவர், கோமாளி, இளைஞராக வேடமிட்டவர் என நான்கு பேர் பங்குகொள்கின்றனர். இவர்கள் கரகாட்டக் குழுவிலுள்ள கலைஞர்களாக இருப்பர் . இந்த நிகழ்விற்கு ஒரு தவில், ஒரு நாதஸ்வரம் இரண்டும் பின்னணியாக இருக்கும்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com