

சிங்கப்பூரில் வழக்கமாக ஜூலை 4 முதல் 12 வரை நடைபெறும் சர்வதேச தோட்டம் மற்றும் மலர் கண்காட்சியான சிங்கப்பூர் தோட்ட விழாவின் 10வது ஆண்டிற்கான தொடக்க நிகழ்வின் ஒரு பகுதியாக அண்மையில் அதன் தொடக்க நிகழ்ச்சி தக்காஷிமாயா ஸ்குவேர் கீழ்த்தளத்தில் கோலாகலமாக அரங்கேறியது.
தேசியப் பூங்காக் கழகமும் கரையோரப் பூந்தோட்ட கழகமும் இந்த விழாவை இணைந்து நடத்தின.நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஐந்து மீட்டர் உயரமுள்ள ஊஞ்சல் புதிய கின்னஸ் உலகச் சாதனை படைத்தது. ஓர் ஊஞ்சலில் அதிகப் பூக்கள் இருந்ததற்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
ஏறக்குறைய 60 வகையான மலர்கள் ஊஞ்சலை அலங்கரித்தன. மொத்தம் 12,888 மலர்கள் நிரம்பியிருந்த ஊஞ்சல் கலைநயத்தோடு காட்சி தந்தது. இது "ஒரு ஊஞ்சலில் அதிக பூக்கள்" என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.
மேலும் ரோஜாக்கள், கார்னேஷன்கள், அல்லிகள், ஆர்க்கிட்கள் மற்றும் ஹைட்ரேஞ்சாக்கள் போன்ற பூக்கள் இதில் அடங்கும், இது இரண்டு நாட்களில் சுமார் 200 சமூக தோட்டக்காரர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தேசிய பூங்கா வாரிய ஊழியர்களால் உருவாக்கப்பட்டது.
சிங்கப்பூர்த் தோட்ட விழாவின் தொடக்க நிகழ்வின் ஒரு பகுதியாகத் தக்காஷிமாயா ஸ்குவேரில் நிறுவப்பட்ட ஊஞ்சலுக்காக கின்னஸ் உலகச் சாதனைச் சான்றிதழை அதிகாரபூர்வ நடுவர் சோனியா உஷிரோகோச்சி தேசியப் பூங்காக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹுவாங் யு-நிங்கிடம் வழங்கினார்.
தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய பூங்காக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹுவாங் யு-நிங், “பிரம்மாண்டமான இந்த ஊஞ்சல் உண்மையான சமூக உணர்வின் அடையாளமாகத் திகழ்கிறது,” என்று குறிப்பிட்டார். மேலும் விழா கண்டுள்ள வளர்ச்சி சிங்கப்பூரின் “இயற்கையில் ஒரு நகரம்” என்ற தொலைநோக்குப் பார்வையைத் துல்லியமாகப் பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரான்சைச் சேர்ந்த தலைமை நடுவர் திரு பேஸ்கல் கார்ப், “தனித்துவமான வெப்பமண்டலச் சூழலாலும் அரிய மலர் வகைகளாலும் உலகின் தலைசிறந்த மூன்று தோட்ட விழாக்களில் இதுவும் ஒன்றாகத் திகழ்கிறது; இது ஆகச் சிறந்தவற்றுள் ஆகச் சிறந்ததற்கான போட்டியாகும்,” எனப் புகழாரம் சூட்டினார். “இன்றைய மன அழுத்தம் நிறைந்த அவசர உலகில் மலர்கள் ஆழ்ந்த அமைதியையும் புன்னகையையும் தந்துவருகின்றன,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசியப் பூங்காக் கழக நடத்திய. விழாவில் நான்கு நாளும் பொதுமக்கள் பங்கேற்கக்கூடிய பல்வேறு பயிலரங்குகளும் அறிவுப் பகிர்வு அமர்வுகளும் இடம்பெற்றன.
விழாவிற்கான நுழைவுச்சீட்டுகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. தொடக்க விழா நிகழ்ச்சிகளைக் காணச் செல்வோருக்குச் சிறப்பு தள்ளுபடிகளும் வழங்கப்பட்டன. 10வது ஆண்டு நிறைவையொட்டிய முக்கிய நிகழ்ச்சி ஜூலை 4 முதல் 12ஆம் தேதிவரை கரையோரப் பூந்தோட்ட வளாகத்தில் நடைபெறவுள்ளது.