

இந்தியா எப்படி ஒரு பழமை வாய்ந்த தேசமோ அதே மாதிரி புராதன தேசமாக்கம் கிரீஸ் . இன்று கிரீஸ் இருக்கிற இடம் தெரியாமல் இருக்கலாம் ஆனால் இலக்கியம் ஆன்மீக கருத்துக்கள் என்று வந்தால் இன்றும் அது முன்னிலையில் நிற்கிறது.
கிரேக்க இலக்கியத்திற்குமேற்கத்திய பல்கலை கழகங்களில் தனி முக்கியத்துவம் தரப்படுகிறது. காரணம், அது உலகிலேயே மிகவும் பழமையானது. செல்வந்த ரோமானியர்கள், தங்கள் குழந்தைகளுக்குக் குழந்தைப்பருவத்திலிருந்தே கிரேக்க மொழியைக் கற்பிப்பதற்காக, கிரேக்க அடிமைகளை பனி அமர்த்தினார் ஒரு இளம் ரோமானிய உயர்குடிமகன், லத்தீன் மொழியில் சரளமாகப் பேசும் முன்பே, பெரும்பாலும் கிரேக்க மொழியைப் பேசவும் படிக்கவும் கற்றுக்கொண்டான்.
இன்றைக்கு கூட எனக்கு கிரீக் தெரியும் என்று சொல்பவருக்கு தனி மதிப்புதான். கிமு 1000 ஆம் ஆண்டு முதல் கிபி 3 ஆம் நூற்றாண்டு வரையிலான அதன் நீண்ட வரலாறு முக்கியமாக மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.
தொன்மையான காலம் (Archaic Period: கிமு 800 – கிமு 479) இந்தக் காலகட்டத்தின் இலக்கியங்கள் பெரும்பாலும் வாய்மொழி மரபையும், தொன்மங்களையும் (Myths) அடிப்படையாகக் கொண்டவை. [1, 2]
காவியங்கள்:
ஹோமர் (Homer) எழுதிய புகழ்பெற்ற இலியட் (Iliad) மற்றும் ஒடிசி (Odyssey) காப்பியங்கள் இந்த காலத்தைச் சேர்ந்தவை. இவை வீரர்களின் சாகசங்களையும் கிரேக்கக் கடவுள்களின் கதைகளையும் விவரிக்கின்றன.
புராணக் கவிதைகள்:
ஹெசியோடு (Hesiod) எழுதிய 'தியோகோனி' (Theogony) கடவுள்களின் பிறப்பைப் பற்றிப் பேசுகிறது.
பாடல் வரிகள் (Lyric Poetry):
லெஸ்போஸ் தீவைச் சேர்ந்த பெண் கவிஞரான சப்போ (Sappho) தீவிரமான தனிமனித உணர்வுகளையும் காதலையும் கவிதைகளாக வடித்தார்.
செம்மொழி அல்லது பொற்காலம் (Classical Period: கிமு 500 – கிமு 323
ஏதென்ஸ் நகரம் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக வலுப்பெற்ற இந்த காலம் கிரேக்க நாடகம் மற்றும் தத்துவத்தின் உச்சமாக கருதப்படுகிறது.
துயர நாடகங்கள் (Tragedy):
ஏஸ்கிலஸ் (Aeschylus), சோஃபோகிள்ஸ் (Sophocles), மற்றும் யூரிபிடிஸ் (Euripides) ஆகியோர் மனித விதி மற்றும் கடவுள்களுடனான போரை மையமாகக் கொண்டு உலகத்தரம் வாய்ந்த துயர நாடகங்களை எழுதினர்.
நகைச்சுவை நாடகங்கள் (Comedy):
அரிஸ்டோபன்ஸ் (Aristophanes) அரசியல்வாதிகளையும் சமூகத்தையும் நையாண்டி செய்து முதன்முதலில் நகைச்சுவை நாடக வடிவத்தை உருவாக்கினார்.
தத்துவம் (Philosophy):
சாக்ரடீஸ், அவருடைய மாணவர் பிளேட்டோ மற்றும் பிளேட்டோவின் மாணவர் அரிஸ்டாட்டில் ஆகியோர் மேற்கத்திய சிந்தனை உலகையே மாற்றியமைத்த தத்துவ நூல்களை உரைநடையில் எழுதினர்.
வரலாறு (History):
வரலாற்றின் தந்தை' என்று அழைக்கப்படும் ஹெரோடோடஸ் மற்றும் துசிடிடிஸ் ஆகியோர் போர்களையும் நிகழ்வுகளையும் ஆவணப்படுத்தும் வரலாற்று எழுத்து முறையைத் தொடங்கினர்.
ஹெலனிஸ்டிக் மற்றும் ரோமானிய காலம் (Hellenistic & Roman Period: கிமு 323 – கிபி 284)
அலெக்சாண்டரின் படையெடுப்புகளுக்குப் பிறகு கிரேக்க கலாச்சாரம் மத்திய தரைக்கடல் பகுதி முழுவதும் பரவியது.ஏதென்ஸிலிருந்து இலக்கிய மையம் எகிப்தின் அலெக்சாந்திரியா நகருக்கு மாறியது.இக்காலத்தில் அறிவியல், கணிதம் (ஆர்க்கிமிடிஸ், யூக்ளிட்), மருத்துவம் (கலென்) மற்றும் புவியியல் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் அதிகளவில் எழுதப்பட்டன. புளூடார்க் (Plutarch) போன்ற எழுத்தாளர்கள் புகழ்பெற்ற மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதினர்.
முடிவாக தமிழ் இலக்கியத்திற்கும் கிரேக்க இலக்கியத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது அவற்றை கீழே அட்டவணை படுத்தி தந்துள்ளேன்.
வாய்மொழி மரபு
பண்டைய கிரேக்க இலக்கியம் - 'ஆடியோடோய்' (Aoidoi) எனப்படும் நாடோடிப் பாடகர்கள் யாழ் போன்ற இசைக்கருவியை மீட்டிப் பாடினர்.
தமிழ் சங்க இலக்கியம் - பாணர்கள் மற்றும் விறலியர்கள் யாழ் மீட்டி ஊர் ஊராகச் சென்று பாடினர்.
திணைப் பாகுபாடு
பண்டைய கிரேக்க இலக்கியம் - தியோகிரிட்டஸ் போன்றோர் 'பாஸ்டோரல்' (Pastoral) எனப்படும் முல்லை நிலப் பாடல்களை எழுதினர்
தமிழ் சங்க இலக்கியம் -அகம் மற்றும் புறம் என வாழ்வியலை நிலத்தின் அடிப்படையில் பிரித்துப் பாடினர்.
வீரயுகக் கவிதை
பண்டைய கிரேக்க இலக்கியம் -போர்க்கள வீரர்களையும் அவர்களது சாகசங்களையும் போற்றிப் பாடும் காவியங்கள்.
தமிழ் சங்க இலக்கியம் -அரசர்களின் கொடை மற்றும் வீரத்தைப் போற்றிப் பாடும் புறநானூற்றுப் பாடல்கள்.