இந்தியாவின் அறியப்படாத பாரம்பரிய கலைகள்!

கலைகளுக்கும் கலாசாரத்துக்கும் புகழ் பெற்றது நமது இந்திய நாடு. இந்தியாவில் அதிகம் பலராலும் அறியப்படாத சில கலைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
Unknown Classical Arts of India
Unknown Classical Arts of India

1. டோக்ரா:

Dhokra_Art
Dhokra_Art

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட கலைகளில் ஒன்று இது. மரத்தாலான பேனல்களில் முக்கியமான இந்துக் கடவுள்கள் மற்றும் தெய்வங்கள்  செதுக்கப்பட்டு வகைப்படுத்தப்படுகின்றன. தெய்வ உருவத்தை ஒரு மரக்கட்டையில் கவனமாக உளித்து எடுத்துக்கொண்டு சிக்கலான பூக்கள் மற்றும் துணிகள் சிறந்த படைப்பாக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு இக்கலை பரவலாக இருந்துள்ளது.

2. பிச்வாய்:

Pichwai_Art
Pichwai_Art

17ம் நூற்றாண்டு முதல் பிரபலமானதாக இக்கலை வடிவம் இருந்துள்ளது. இந்து புராணங்களின் காட்சிகளை சித்தரிக்கும் பிரகாசமான வண்ணங்கள் மற்றும் சிக்கலான விரிவான ஓவியங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. தெய்வீகத்தின் சாரத்தை அதன் துடிப்பான வண்ணங்கள் மற்றும் விரிவான கலைத்திறன் மூலம் படம் பிடிக்கும் திறனில்தான் பிச்வாய் உள்ளது. இக்கலை வடிவம்  பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கோயில்கள் மற்றும் வீடுகளை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டது. அதன் புகழ் இன்னும் வலுவாக உள்ளது.

3. மதுபானி கலை:

Madhubani_Art
Madhubani_Art

பழங்கால கலை வடிவமான இது, இந்துக் கடவுள்கள், தெய்வங்கள் மற்றும் புராண காட்சிகள் பிரகாசமான, வண்ண மற்றும் சிக்கலான விரிவான ஓவியங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. சிக்கலான வடிவங்களுடன் இந்திய கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த கலை வடிவம் மிளிர்கிறது. இவ்வகை கலை வடிவம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வீடுகளையும் கோயில்களையும் அலங்கரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

4. கோண்ட் கலை:

Gond_Art
Gond_Art

பல நூற்றாண்டுகள் பழைமையான இக்கலை, கர்நாடகாவில் தோன்றியது. இதன் சிக்கலான வடிவமைப்பிற்கு பெயர் பெற்றது. களிமண் மற்றும் கல் பரப்புகளில் இயற்கை நிறமிகள் மற்றும் சாயங்களைக் கொண்டு ஓவியம் வரையப்படுகிறது. பெரும்பாலும் இதன் வடிவமைப்புகள் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கு மற்றும் சமச்சீர் உணர்வைக் கொண்டது. இக்கலை பிரபஞ்சத்தின் உள் செயல்பாட்டுகளைக் குறிக்கிறது. வீட்டு அலங்காரத்திற்கு தேர்வாக அமைகிறது.

5. வார்லி:

warli_Art
warli_Art

இது ராஜஸ்தானின் கலை வடிவமாகும்.12ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. வடிவங்கள் வெள்ளை மற்றும் கருமை நிறங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. பெரும்பாலும் விலங்குகள், தாவரங்கள் மற்றும் இயற்கையை குறிக்கிறது. கதைகள் மற்றும் நிகழ்வுகளை சித்தரிக்கப் பயன்படுகிறது. திருவிழா, திருமணங்கள், கோயில், வீடுகளை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

6. ஐபன் கலை:

Aipan_Art
Aipan_Art

இது உத்தர்கண்ட் பழங்குடியினரின் ஓவியக்கலை. கடவுள், இயற்கைக்காட்சிகள் வரையப்படுகின்றன. இக்கலை வெள்ளை, மஞ்சள், காவி நிறங்களில் உருவாக்கப்படுகின்றன. வீடுகள் கோயில்கள் அலங்கரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அமைதி மற்றும் நல்லிணக்க உணர்வை உருவாக்க வடிவமைப்பு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com