ரோஸ் வாட்டர் இருக்கா? அதை வைத்து என்னென்ன செய்யலாம் பாருங்களேன்...!

ரோஸ் வாட்டர் இருக்கா? அதை வைத்து என்னென்ன செய்யலாம் பாருங்களேன்...!

ஒரு பாட்டில் ரோஸ் வாட்டர் இருந்தா போதுமே..! அதை வைத்து எத்தனை அழகு செய்து விடலாம் தெரியுமா

பளபளப்பான முகம் வேண்டுமா...

முகம் எப்போதும் ஃப்ரெஷ்ஷா ஆக இருக்க ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு காட்டன் வைத்து முகத்தில் அப்ளை செய்து விடுங்கள்.

ரோஸ் வாட்டரை ஒரு ஸ்பிரேபாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு, அதை அவ்வப்போது உங்கள் முகத்தில் ஸ்பிரே செய்து ஒரு காட்டன் துணியை வைத்து துடைத்தாலே போதும்.

அதே போல் நீராவி பிடிக்கும் போது நம் சருமத்தில் உள்ள துளைகள் எல்லாம்திறந்து அழுக்குகள் வெளியேறும். அந்த நீரிலும் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்தால் உங்கள் முகத்தின் நிறமும் அதிகமாகும். அது மட்டுமில்லாமல் முகம் எப்போது புத்துணர்வுடன் இருக்கும்.

முகம் எப்போதும் பளபளப்பாக இருக்க காலை, இரவு இரண்டு வேளையும் ரோஸ்வாட்டரை உங்கள் முகத்தில் அப்ளை செய்து வந்தாலே போதும். முகத்திற்கு நல்ல நிறம் கூடி விடும்.

ரோஸ் வாட்டரை ஸ்பீரே செய்து இரவு முழுவதும் உங்கள் முகத்தில் இது அப்படியே விட்டுவிட மறுநாள் காலை முகத்தை கழுவினால் உங்கள் முகம்ஃப்ரெஷ் ஆக இருக்கும்.

ஆயில் ஸ்கின் உள்ளவரா?

ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை போக்குவதற்கு இந்த ரோஸ் வாட்டர் ஒன்றே போதும். இதற்காக வேறு எந்தசெலவும் மெனக்கெட்டு செய்ய தேவையில்லை.

ரோஸ் வாட்டர் உடன் இரண்டு கற்பூரத்தை தூள் செய்து போட்டு அதையும் ஒரு நாளைக்கு இரண்டு முறை முகத்தில் ஒரு காட்டன் துணி வைத்து ஒற்றி எடுத்த பிறகு துடைத்தாலே போதும் எண்ணெய் வடிவது பெரும் அளவில் குறைந்து விடும்

ஃபேஸ் பேக்காகவும் போடலாமே...

நீங்கள் முகத்திற்கு இதை ஒரு ஃபேஸ் பேக்காகவும் போடலாம்.

பயித்தமாவு ஒரு ஸ்பூன், ரோஜா இதழ் பொடி ஒரு ஸ்பூன், ரோஸ் வாட்டர் மூன்றையும் நன்றாக கலந்து உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை அலம்பினால் போதும். உங்கள் முகம் மாசு மாறு இன்றி அத்தனை அழகாக இருக்கும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்தாலே போதும்.

ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிராம்புத்தூள் ஒரு ஸ்பூன், இரண்டையும் ஒன்றாக கலந்து உங்கள் முகத்தில் உள்ள முகப்பருக்களின் மேல்இரவு தூங்கும் முன் வைத்து விடுங்கள். இரவு அப்படியே இருக்கட்டும் அடுத்த நாள்காலை முகத்தை கழுவி விடுங்கள். இதை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகத்தில் உள்ள பருக்கள் விரைவில் சரியாகி விடும்.

மேக்கப் ரிமூவ் செய்வதற்கு:

இந்த ரோஸ் வாட்டர் மேக்கப் போடுவதற்கு மட்டுமல்லாமல் போட்ட மேக்கப் ரிமூவ் செய்வதற்கும் இந்த ரோஸ் வாட்டர் உபயோகிக்கலாம்.

ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து உங்கள் மேக்கப் போட்டு முகத்தில் மீது தடவி அதன் பிறகு சுத்தம் செய்தால் போட்டு மேக் அப் விரைவில் அழிவதுடன் முகத்திற்கு ஒரு மிருதுவான தன்மையும் கிடைக்கும்

.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com