அழகான தலைமுடி... அச்சச்சோ இப்படி கொட்டுதா? கவலை வேண்டாம்... அஸ்வகந்தா இருக்கே!

Hair Fall
Hair Fall
Published on

ஒருவரின் அழகை தலைமுடி தான் நிர்ணயிக்கிறது. நீண்ட தலைமுடி வளர்த்தல் என்பது உலக அளவில் அழகிற்கு ஒரு தகுதியாக உள்ளது. ஆனால் வயதாக ஆக, முடி உதிர்வு பிரச்சனை தொடங்குகிறது. முடி உதிர்தல் பிரச்சனை மன உளைச்சலுக்கு ஆளாக்கும். உச்சந்தலையில் முடி உதிர்தல் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் அது ஒரு கட்டத்தில் வழுக்கையாக மாறும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

முடி உதிர்தலுக்கு முக்கிய காரணம் மன அழுத்தம். ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால் அவருக்கு முடி உதிர்வு அதிகரிக்கிறது. அது நேரடியாக முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இது உச்சந்தலையில் முடியின் வேர்களை பலவீனப்படுத்த வழிவகுக்கிறது. உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் அல்லது தைராய்டு பிரச்சனையின் போது முடி உதிர்வை மிக விரைவாக ஏற்படுத்தும்.

தினசரி உணவில் இரும்பு, துத்தநாகம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருந்தால், அது முடி வேர்களை பலவீனப்படுத்துகிறது. சில சமயங்களில் முடி உதிர்தலுக்கு பரம்பரை காரணங்களும் இருக்கலாம். 

முடி உதிர்தலை தடுக்க, முடியை நன்கு வளர்க்க அஸ்வகந்தா பொடியை சாப்பிடலாம்.

அதில் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது மன அழுத்தத்தை குறைப்பதோடு, உடலில் ஹார்மோன் சமநிலை மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை வழங்குகிறது.

அஸ்வகந்தாவை உட்கொள்வதன் நன்மைகளைப் பார்க்கும்போது, மன அழுத்த ஹார்மோன் கார்டிசோலைக் குறைக்கிறது. ஹார்மோன் சமநிலையை உருவாக்கி நமது உடலின் தைராய்டு ஹார்மோன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் சீராக இருக்க உதவுகிறது. மேலும் உடலின் வளர்ச்சி, சமநிலை மற்றும் நமது சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

அஸ்வகந்தாவில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நம் உச்சந்தலையில் சிறந்த இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது மற்றும் முடியின் வேர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதனால் வேர்கள் வலுவடைகின்றன. அஸ்வகந்தாவை உட்கொள்வது இயற்கையாகவே நம் உடலில் உள்ள அழுத்தத்தை குறைக்கிறது. அதனால் முடியின் வேர்கள் இயற்கையாகவே வலுவடைகின்றன. இதனால் முடி உதிர்தல் தடுக்கப்பட்டு அதன் வளர்ச்சி அதிகரிக்கிறது.

அஸ்வகந்தாவை உட்கொள்வதன் மூலம், நம் உச்சந்தலையில் இரத்த ஓட்டம் மேம்படுகிறது. இயற்கையாகவே, நம் முடி நன்றாக வளரும் மற்றும் முடி குறைவாக இருக்கும் பகுதிகளில் முடி மீண்டும் வளரும். அஸ்வகந்தாவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது நமது உச்சந்தலையில் ஏற்படும் அரிப்புகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொடுகு மற்றும் முடி உதிர்தலையும் குறைக்கிறது.

அஸ்வகந்தாவை ஹேர் மாஸ்க்காகப் பயன்படுத்துவதால், உச்சந்தலைக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, முடியின் வேர்களும் வலுப்பெறுகின்றன.

இதற்கு அஸ்வகந்தாவை தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் கலந்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கி அதனை உச்சந்தலையில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் குளிக்கவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com