பாதம் முதல் கூந்தல் வரை 7 - 'கண்ணழகி' ஆக என்ன செய்யலாம்?

அதிக செலவில்லாமல் உங்களை அழகியாக்கும் அடடே தொடர் - ராஜம் முரளி
Eye - Patham muthal koonthal varai
Eye - Patham muthal koonthal varai
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

ஒரு பெண்ணின் முழு அழகும் முகத்தில் தெரியும் ; அந்த முகத்தின் முழு அழகும் கண்களில்தான் தெரியும். கண்ணழகி ஆக என்ன செய்யலாம்?

* ஆலிவ் ஆயில் + விளக்கெண்ணெய் எடுத்து, புள்ளிப் புள்ளியாக புருவம் 'ஷேப்'பிலேயே வைத்துத் தடவி வர, அடர்த்தியான, 'வில்' போன்ற வளைந்த புருவங்கள் காண்போர் மனத்தைக் கவரும்.

* நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் கரிசலாங்கண்ணித் தைலம், மல்லிப்பூ தைலத்தைத் தடவி வந்தாலும் கண் இமை, புருவ முடிகள் நீண்டு அழகாக வளரும்.

* இந்தக் காலத்து இளம் பெண்கள் நிறைய படிக்கிறார்கள். கம்ப்யூட்டரில் வேலை செய்கிறார்கள். எனவே இவர்கள் கண்கள் வறண்டு டயர்டாகி விடும். கைப்பிடி அளவு குண்டுமல்லிப் பூவை, வெந்நீரில் போட்டு, தட்டால் மூடிவிடவும். நன்கு ஆறியதும் பூவைக் கசக்கி, வடிகட்டி, அந்த நீரால் கண்களைக் கழுவி வர, கண்கள் ஃப்ரெஷ்ஷாகப் பளபளக்கும்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com