3 நாட்கள் போதும்.. வீட்டில் உள்ள இந்த பொருட்களால் முகத்தை பளபளனு மாற்றலாம்!

மாதிரி படம்
மாதிரி படம்Intel
Published on

பொதுவாகவே முகத்தை பளபளவென்று வைக்க வேண்டும் என பலரும் ஆசைப்படுவார்கள். இதற்காக பல வைத்தியங்கள், எண்ணற்ற க்ரீம்கள் என அனைத்துமே உபயோகிப்பார்கள். என்னதான் செய்தாலும் யாருக்கும் உடனடி தீர்வு கிடைக்காது.

இதோ 3 நாட்களில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து முகத்தை வெள்ளையாக்கும் வைத்தியத்தை பார்க்கலாம்.

தயிர்

தயிர் சருமத்ஹை மேம்படுத்த உதவும். மேலும் முகத்திற்கு நிறத்தை அளித்து சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது. இதில் உள்ள கூறுகள் சருமத்தை ஆழமாக சுத்தம் செய்து முகத்தை வெள்ளையாக்குகின்றன.

கற்றாழை

கற்றாழையில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு ஊட்டமளிக்க உதவுகிறது. கற்றாழை சருமத்தின் வறட்சியை குறைக்க பயன்படுகிறது. இதன்மூலம் முகம் பொலிவு பெறுகிறது.

சிறந்த ஃபேஸ்பேக்

ஒரு பாத்திரத்தில் சுமார் 2 டீஸ்பூன் தயிர் மற்றும் தேவையான அளவு கற்றாழை ஜெல் சேர்ந்து அதனுடன் அரைத்த வெள்ளரிக்காய் விழுது சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.

இந்த ஃபேஸ்பேக்கை முகத்தில் தடவி சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு குளிர்ந்த நீரில் முகத்தை சுத்தம் செய்யவும். ரோஸ்வாட்டரில் கழுவினால் இன்னும் சிறப்பு.

இந்த பேஸ்பேக்கை வாரத்திற்கு 2 முதல் 3 முறை பயன்படுத்தலாம். 3 நாட்கள் சருமத்தின் நிறம் வெள்ளையாகி ஒருவித பொலிவையும் உணர்வீர்கள். நிச்சயம் ட்ரை பண்ணி பாருங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com