வாழ்வை திசைமாற்றிய ஒப்பனை! மேக்கப் பால் நின்று போன திருமணம்!
ஒரு திருமணத்துக்கு எது அவசியமோ இல்லையோ மணப்பெண்ணுக்கு மேக்கப் மிக மிக அவசியமாகி விட்டது இன்று. சாப்பாட்டு விசயத்தில் கூட அசால்ட்டாக இருப்பவர்கள் மேக்கப் விசயத்தில் பெண்ணின் விருப்பத்தை அறிந்து பார்த்து பார்த்து செய்கிறார்கள் . திருமணத்துக்கு வருபவர்களும் மணப்பெண்ணின் உடைகளையும் அவர் அணிந்திருக்கும் நகைகளையும் போட்டிருக்கும் ஒப்பனையையும் பார்த்து மகிழ்கிறார்கள். இதனால் பரவலாக பெண்களிடையே மேக்கப் கலையை கற்று வாழ்வாதாரத்துக்கும் உதவுவதை மறுக்க முடியாது. ஆனால் தரமற்ற மேக்கப்பால் ஒரு திருமணமே நின்று போனதை என்னவென்று சொல்வது? இதோ விபரம்.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிகெரேவை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. கடந்த வாரம் அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவர்களின் திருமணம் இரண்டாம் தேதி அரிசிகெரேயில் நடக்க இருந்த நிலையில் திருமணத்துக்கு சில தினங்களுக்கு முன்பாக மணப்பெண்ணான இளம் பெண் மேக்கப் போட முடிவு செய்து வீட்டுக்கு அருகில் உள்ள கங்கா என்பவருக்கு சொந்தமான அழகு நிலையத்திற்கு சென்றார். அங்கு மணப்பெண்ணுக்கு முகத்திற்கு கங்கா அழகு சாதனங்கள் கொண்டு ப்ளீச் செய்து அழகு படுத்தினார்.
இந்த நிலையில் திருமணத்துக்கு சில நாட்கள் இருப்பதால் முகப்பொலிவு நிலைத்து நிற்க அவர் வெந்நீரில் ஆவி பிடித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வெந்நீர் பட்டதால் இளம் பெண்ணின் முகம் கருமை நிறமாக மாறியது மேலும். முகம் முழுவதும் கொப்புளங்கள் வந்தன கண்கள் மற்றும் கன்னமும் வீங்கியது. இதனால் அதிர்ச்சி அடைத்தனர் இளம் பெண்ணின் குடும்பத்தினர் செய்வதறியமல் திகைத்தனர்.
இந்த நிலையில் மேக்கப் போட்ட மணப்பெண் முகம் அழகிழந்து கருமை நிறமாக மாறியதால் நேற்று முன்தினம் நடக்க இருந்த திருமணத்தை மணமகன் நிறுத்தினார் இதனால் மணப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர் இந்த நிலையில் மணமகளின் குடும்பத்தினர் அழகு நிலைய உரிமையாளர் கங்கா மீது அரிசிகெரே காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் அதன் பெயரில் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் மேக்கப் போட்டதினால் பெண்ணின் முகம் கருமை நிறமாக மாறியதால் திருமணமே நின்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இனி ஒவ்வொரு மணப்பெண்களும் மேக்கப் போடசெல்லும் முன் அந்த அழகுகலை நிலையம் தரமானதா என்று அறிந்த பின்னே செல்ல வேண்டும். அழகு முக்கியம்தான், ஆனால் அதை விட முக்கியம் வாழ்க்கை.