-ஜெயா சம்பத்
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும், சந்தனமும் அரைத்து முகத்தில் தடவினால் தோலின் நிறம் பொலிவு பெறும்.
பசும்பால், கடலைமாவு, மஞ்சள், சந்தனம் அனைத்தையும் குழைத்து முகம், கழுத்து, கைகளில் தடவிக் குளித்தால் சருமம் பளப்பளப்பாகவும் மிருதுவாகவும் மாறி விடும்.
வெள்ளரிச் சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து, இரவில் முகத்தில் தடவிக் கொண்டு, அரை மணி நேரம் கழித்துக் குளிர்ந்த நீரால் அலம்பி விடுங்கள். முகத்தில் சருமச் சுருக்கங்கள் ஏற்படாமல் ஜொலிக்கும்.