பாதங்கள் பளபளக்க... பட்டான பத்து டிப்ஸ்!

பாதங்கள் பளபளக்க... பட்டான பத்து டிப்ஸ்!

* வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசினால் கால் வெடிப்பு குணமாகும். தினமும் சொரசொரப்பான கல்லில் காலை வைத்துத் தேய்த்தாலும், கால் வெடிப்பு மறையும்.

* இரவில் கைபொறுக்கும் சூட்டில் வெந்நீரில் எலுமிச்சைச் சாறு பிழிந்து அதில் கால்களை ஊறவைத்து, கால் களுக்குத் தேய்க்கும் பிரஷ் அல்லது ப்யூமிக் ஸ்டோன் கொண்டு தேயுங்கள். பின் துடைத்துவிட்டு ஃபுட் க்ரீம் போட்டு மசாஜ் செய்யவும்.

* ஒருநாள் விட்டு ஒருநாள் எலுமிச்சம் பழத்தோலால் பாதங்களை நன்றாகக் தேய்த்துக் கழுவ வேண்டும். இது கால்வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி பாதங்களைச் சுத்தமாக்கும். கிருமிகளையும் அழிக்கும்.

* கடுகு எண்ணெயை தினமும் கால், பாதம் மற்றும் கைகளில் தேய்த்துக் கழுவி வந்தால் சொர சொரப்புத் தன்மை நீங்கி, மிருதுவாகும்.

* முதல்நாள் பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரைத் தொட்டுத் தேய்க்க வேண்டும். மறுநாள் தண்ணீரில் உப்பைப் போட்டு நாரில் தொட்டுத் தேயுங்கள். தொடர்ந்து இப்படிச் செய்துவர, பாதம் மெத்தென்று ஆகும்.

* வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் தேய்த்துவிட்டு 15 நிமிடங்கள் கழித்துக் கழுவி வந்தால், முரட்டுத்தன்மை நீங்கி கை-கால்கள் பளிச்சென்று மென்மையாகும்.

* மருதாணிப் பவுடருடன், டீத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்துக்கொண்டால் கால்வெடிப்பு நீங்கி உடல் குளிர்ச்சியாய் இருக்க உதவும். மருதாணி இலையுடன் எலுமிச்சைச் சாறுவிட்டு விழுதாக அரைத்து, கால் வெடிப்பில் பூசி வர, கால் வெடிப்பு குணமாகும்.

* கற்றாழையில் இருக்கும் ஜெல்லி போன்ற திரவத்தைத் தினமும் இரண்டு முறை பூசி வந்தால் இரண்டு மாதங்களில் வெடிப்பு சரியாகிவிடும்.

* உருளைக்கிழங்கைக் காயவைத்து, மாவு போன்று அரைத்துத் தண்ணீரில் குழைத்து, பூசி வந்தால், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும்.

* வெங்காயத்தை அரைத்து கால் பாதங்களில் தடவி வந்தால் வெடிப்பு மறையும்.

குறிப்பு: கால் வெடிப்பு தோல் வறட்சியால் ஏற்படுகிறது. துணி துவைக்கும்போது சோப்பு நீரில் நிற்காமல் பார்த்துக்கொள்ளவும். காலுறைகளையும் அழுக்கின்றி அணியவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com