மரு உதிர மருத்துவக் குறிப்புகள்!

மரு உதிர மருத்துவக் குறிப்புகள்!

உங்கள் அழகை கெடுக்கும் மருக்கள் உருவாவதற்கு காரணம், கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாவதே.

  • 1 ஸ்பூன் விளக்கெண்ணெயில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து, மருக்களின் மீது தடவி 30 நிமிடங்கள் கழித்து , வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், மருக்கள் உதிர்ந்துவிடும்.

  • வெங்காய சாற்றினை இரவில் தூங்கு முன் மருக்களின் மீது அப்ளை செய்து வந்தால் மருக்கள் விரைவில் உதிர்ந்து விடும்.

  • எலுமிச்சம் பழம் சாறில் மஞ்சள் தூள் கலந்து, இந்த கலவையை பஞ்சில் நனைத்து மருக்கள் மீது அப்ளை செய்து வந்தால் மருக்கள் விரைவில் உதிர்ந்து விடும்.

  • பூண்டை நீர்விடாமல் அரைத்து மருக்கள் மீது தடவி அரைமணி நேரம் காயவிட்டு எடுக்க வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் வரை செய்தால் மரு உதிர வாய்ப்புண்டு.

  • இஞ்சியை தோல் சீவி பேஸ்ட் போல் அரைத்து மரு உள்ள இடத்தில் தடவி வர வேண்டும். இஞ்சியின் காரத்தன்மை சருமத்தில் எரிச்சலை உண்டு செய்தாலும் கூட தொடர்ந்து செய்து வரும் போது மரு உதிர வாய்ப்புண்டு.

  • இரவு நேரத்தில் மரு இருக்கும் இடங்களில் வாழைப்பழத் தோலை கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். மருக்ஙள் உதிர்ந்து விழவும், புதிதாக மருக்கள் தோன்றாமல் இருக்கவும் வாழைப்பழத் தோல் உதவுகிறது.

  • உருளைக்கிழங்கு சாற்றை இரவில் மருக்கள் மீது தடவ வேண்டும். பின்னர் காலையில் கழுவி வந்தால் மருக்கள் நீங்கிவிடும்.

  • டீ ட்ரீ எசன்ஷியல் ஆயிலை மருக்களின் மீது தடவி வந்தால் குளிர்ச்சியாக  இருப்பதோடு, மரு இருந்த தழும்பு கூட தெரியாமல் உதிர்ந்து விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com