மூட்டு வலியை முடக்கும் முருங்கை விதை.!

முருங்கை விதை
முருங்கை விதை

வயது ஆக எலும்பு தேய்மானமும் மூட்டு வலி, கால்சியம் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும். எலும்பு தேய்மானம் அதிகமாக இருந்தால் நடக்கக்கூட மிகவும் கஷ்டப்படுவார்கள் முதியவர்கள். முதியவர்களுக்கு மட்டுமல்ல 40 வயதை தாண்டி விட்டாலே எழும்பு தேய்மானமும் சரி, கால்சியம் பிரச்சனையும் , மூட்டு வலியும் சேர்ந்து வந்து வருகின்றது.

இப்போதைய சாப்பாடு எல்லாம் சத்து இல்லாததால் சிறு வயது குழந்தைகளுக்கு கூட மூட்டு வலி ஏற்படுவதை பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட மூட்டு வலியை போக்க இதை செய்தால் மட்டும் போதும். முருங்கை விதையில் கால்சியம் சத்து இருப்பதால் அது நிச்சயம் எலும்புக்கு அதிக பலம் தருகிறது.

முருங்கையின் பத்து விதைகளை இப்படி நீங்கள் பயன்படுத்தும் போது நிச்சயமாக எலும்பு தேய்மானம், கால்சியம் பிரச்சனை ஆகியவை ஓடியே விடும்.

தேவையான பொருட்கள்:

1. முருங்கை விதை- 5 gm

2. நெய் 1 ஸ்பூன்

3. பால்- 1 டம்ளர்

4. நாட்டு சர்க்கரை

செய்முறை:

முதலில் முருங்கை விதைகளை நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ளுங்கள். அப்படி இல்லையெனில் மிகவும் முத்திய முருங்கைக்காய் உங்கள் வீட்டில் இருந்தால் அந்த விதைகளை மட்டும் தனியே எடுத்து காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அந்த முருங்கை விதை உள்ளே பருப்பு இருக்கும் அந்த பருப்பை மட்டும் 5 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய்யை ஊற்றி இந்த முருங்கை விதைகளை போட்டு நன்கு வறுக்கவும். பிறகு இதனை பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இந்த பொடியை ஒரு ஸ்பூன் அளவிற்கு பாலில் சேர்த்து கொதிக்க வைத்து சுவைக்கு ஏற்ப நாட்டுச்சர்க்கரை கலந்து குடித்து வந்தால் அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். கண் பிரச்சனை கண் மங்குதல் கால்சியம் குறைபாடு எலும்பு பிரச்சனை எலும்பு தேய்மானம் கால் வீக்கம் கெட்ட கொழுப்பு ஆகிய அனைத்தும் நீங்கும்.

தினமும் காபி தூள் பயன்படுத்துவதற்கு பதில் இந்த முருங்கை விதை பொடியை பயன்படுத்தினால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com