3 R சுற்றுச்சூழல் தத்துவம்!

3 R சுற்றுச்சூழல் தத்துவம்!
Updated on

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு நாம் 3 R - Reduce, Reuse, Recycle என்பதைப் பின்பற்ற வேண்டும். பொருட்கள் அதிகமாக நிலத்துக்குச் செல்வதால், நமது நிலம் மாசடைகிறது. நமது நிலத்தடி நீர், ஆறு, குளங்கள் போன்றவை மாசடைகின்றன. இவற்றை எரிப்பதன் மூலம், நமது காற்று மாசடைகிறது.

எனவே, நாம் இந்த ‘மூன்று ஆர்’ (3 R) விதியைப் பின்பற்ற வேண்டும்.

  1. Reduce - குறைத்துக் கொள் - பொருட்கள் வாங்குவதைக் குறைக்க வேண்டும். தேவைக்கு மட்டுமே பொருட்கள் வாங்க வேண்டும். தரமான நீண்ட நாட்கள் உழைக்கும் பொருட்களை வாங்க வேண்டும். உதாரணமாக, ஏற்கனவே, 10 சட்டை உள்ளவர், 11வது சட்டை வாங்குவதைத் தவிர்க்கலாம்.

  2. Reuse - மறுபடி பயன்படுத்து - பொருட்களை மறுபடி மறுபடி பயன்படுத்த வேண்டும். பொருட்களை வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, கண்ணாடி சீசாக்களை வீட்டில் பொருட்களை சேமிக்கப் பயன்படுத்தலாம்.

  3. Recycle - மறுசுழற்சி செய் - பொருட்களை மறுசுழற்சி செய்யலாம். பாதுகாப்பான முறையில், பொருட்களை மறுசுழற்சிக்கு அனுப்பலாம். உதாரணமாக, பழைய செய்தித்தாள்கள், இரும்பு, அலுமினிய பொருட்களை காயலான் கடைக்கு கொடுக்கலாம். பழைய பொருந்தாத துணிகளை ஆசிரமங்களுக்குக் கொடுத்து உதவலாம்.

 இவ்வாறு நாம் செய்வதன் மூலம், பொருட்கள் ஆரோக்கியமானதொரு முறையில், பயன்பாட்டில் உள்ளன. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில், பொருட்களின் பயன்பாடு உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com