பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

Compound eyes of insects!
Compound eyes of insects!
Updated on

பூச்சிகளின் உலகம் என்றுமே நம்மை வியப்பில் அழ்த்தத் தவறியதில்லை. அவற்றின் சிறிய உடலில் எத்தனையோ அற்புதமான உறுப்புகள் இருக்கின்றன. அத்தகைய அற்புத உறுப்புகளில் ஒன்றுதான் கூட்டுக்கண். கொசு, தும்பி, ஈ போன்றவற்றின் கண்களைப் பார்த்ததுண்டா? அவை பார்ப்பதற்கே வித்தியாசமாக இருக்கும். பல ஆயிரம் கண்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு கண் உருவாகி இருக்கும். பூச்சிகளின் கூட்டுக்கண்கள் அவற்றின் வாழ்க்கை முறைக்கு மிகவும் முக்கியமானவை. 

நமது கண்களில் ஒரே ஒரு லென்ஸ் மட்டுமே இருக்கும். ஆனால், பூச்சிகளின் கண்கள் ஆயிரக்கணக்கான சிறிய லென்ஸ்காளால் ஆனவை. இந்த ஒவ்வொரு சிறிய லென்சையும் ஒம்மாடிடிய (Ommatidia) என்று அழைப்பார்கள். ஒவ்வொரு ஒம்மாட்டிடியமும் தனித்தனியாக ஒளியை உணர்ந்து மூளைக்கு சமிக்ஞை அனுப்பும். இந்த ஆயிரக்கணக்கான சிக்னல்களும் மூளையில் இணைந்து ஒரு முழுமையான படத்தை உருவாக்கும். 

கூட்டுக்கண்களின் செயல்பாடு: ஒவ்வொரு ஒம்மாட்டிடியமும் ஒரு சிறிய தொலைநோக்கி போல செயல்படும். அது ஒளியை உள்வாங்கி, அதை ஒரு ஒளியுணர் உயிரணுவில் குவிக்கும். இந்த உயிரிணு ஒளியின் தீவிரம் மற்றும் நிறத்தைப் பற்றிய தகவல்களை ஒரு நரம்பு செல்லுக்கு அனுப்பும். இந்த நரம்பு செல்கள் மூளையுடன் இணைந்து ஒரு சிக்கலான நரம்பு வலையமைப்பை உருவாக்குகின்றன.‌ இந்த வளையமைப்புதான் ஒவ்வொரு ஒம்மாடிடியதிலிருந்து வரும் தகவல்களை ஒருங்கிணைத்து ஒரு முழுமையான படத்தை உருவாக்குகிறது. 

கூட்டுக்கண்களின் சிறப்புகள்: 

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் அவற்றுக்கு மிகவும் விரிந்த பார்வையை அளிக்கின்றன. இதனால், அவை எல்லா திசைகளிலும் உள்ள பொருட்களை ஒரே நேரத்தில் பார்க்க முடியும். இது அவற்றுக்கு வேட்டையாடுதல், எதிரிகளிடமிருந்து தப்பித்து ஓடுதல் போன்ற செயல்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். 

இந்தக் கூட்டுக்கண்கள் மிகவும் வேகமாக இயக்கத்தை உணரும் திறன் கொண்டவை. இதனால், அவை பறக்கும் பூச்சிகளைப் பிடிக்கவும், வேகமாக நகரும் எதிரிகளிடமிருந்து தப்பி ஓடவும் உதவுகிறது.‌ சில பூச்சிகளின் கூட்டுக்கண்கள் மிகவும் குறைந்த அதிர்வெண் ஒளியையும் உணரும் திறன் கொண்டவை. இதனால், அவை இருட்டில் கூட பார்க்க முடியும். 

இதையும் படியுங்கள்:
Acanthaspis Petax: முதுகில் சவங்களை சுமக்கும் கொலைகாரப் பூச்சி! 
Compound eyes of insects!

மேலும், இவை மனிதர்களை விட பல வண்ணங்களை உணரும் திறன் கொண்டவை. இதனால், அவை பூக்களின் நிறத்தை வேறுபடுத்தி அடையாளம் காண முடியும். இது அவற்றுக்கு மகரந்தச் சேர்க்கை செய்ய உதவுகிறது. பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றிய ஆய்வுகள் பல துறைகளில் பயன்படுகின்றன.

உதாரணமாக ரோபோடிக்ஸ் துறையில் பூச்சிகளின் கூட்டுக் கண்களைப் போன்ற கண்கள் கொண்ட ரோபோக்களை உருவாக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. இது போன்ற ரோபோக்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படலாம். மேலும், பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றிய ஆய்வுகள் கணினி பார்வை தொழில்நுட்பத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. 

பூச்சிகளின் இந்த கூட்டுக்கண் அமைப்பு இயற்கையின் ஒரு அற்புதமான படைப்பு. இது பூச்சிகளின் வாழ்க்கை முறைக்கு மிகவும் முக்கியமானவை. இது பற்றிய ஆய்வுகள் பல துறைகளில் புதிய வாய்ப்புகளைத் திறந்து வருகின்றன. இன்னும் பல ஆய்வுகள் மூலம் பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி நாம் மேலும் தெரிந்துகொள்ளலாம். 

logo
Kalki Online
kalkionline.com