மனிதர்களின் அழிவு இவ்வளவு கொடூரமா இருக்குமா? நெனச்சி பாக்கவே பயமா இருக்கே!

Destruction of humans be so cruel.
Destruction of humans be so cruel.

சில ஆய்வு முடிவுகள் வழியாக உலகம் இப்படித்தான் அழியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

பல காலமாகவே உலகின் அழிவு எப்படி இருக்கும் என்ற பல கருத்துக்கள் சொல்லப்பட்டு வரும் நிலையில், இதை வைத்து உருவாக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படமான 2012 பயங்கர ஹிட் ஆனது. ஆனால் இது ஒரு கற்பனைதான் என்றாலும் உண்மையிலேயே உலகம் எப்படி அழியும் என்ற தெளிவு யாருக்கும் இல்லை. இதற்கிடையே இந்த உலகம் எப்படி அழிவுக்கு வரும் என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது. 

இது மூலமாக பூமியின் வளிமண்டலத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு உலகம் அழியும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சுமார் 2.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஏற்பட்ட திடீர் ஆக்சிஜனேற்ற நிகழ்வு காரணமாகவே உலகில் உயிர்கள் தோன்றியதாகக் கூறப்படுகிறது. அதாவது இந்த நிகழ்வின்போது பூமியின் ஒட்டுமொத்த ஆக்சிஜன் அளவு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகரித்தது. இருப்பினும் இந்த ஆக்சிஜன் தன்மை காலம் செல்லச் செல்ல கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்றும், பூமியில் ஆக்சிஜன் தன்மை நிரந்தரமாக இருக்காது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

அடுத்த ஒரு பில்லியன் ஆண்டுகளில் பூமியில் ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டு மீத்தேன் வாயுக்களின் ஆதிக்கம் அதிகரிக்குமாம். இதனால் சுமார் 2500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகம் எப்படி இருந்ததோ அதேபோன்ற நிலை மீண்டும் ஏற்படுமாம். இதனால் மனிதர்கள் உட்பட ஆக்ஸிஜனை சார்ந்து வாழும் அனைத்து உயிரினங்களும் அடியோடு அழியும். 

உலகின் வெப்பம் அதிகரித்து கார்பன்-டை-ஆக்சைடு அளவு குறைந்து ஒளிச்சேர்க்கையும் குறையும். இதன் காரணமாகவும் ஆக்சிஜன் அளவு கடுமையாக பாதிக்கப்படும். மேலும் சூரியனிலிருந்து வரும் கதிர்வீச்சு காரணமாக சுமார் 2 பில்லியன் ஆண்டுகளில் உலகில் உள்ள கடல்கள் ஆவியாகிவிடும். ஆனால் கடல் நீர் ஆவி ஆவதற்கு முன்பே ஆக்சிஜன் குறைவு நிகழ்வு நடந்து பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: கேப்டன் மில்லர்!
Destruction of humans be so cruel.

இந்த ஆய்வானது ஏலியன் குறித்த ஆய்வுகளிலும் மிக முக்கிய பங்காற்றும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமியைப் போலவே மற்ற கிரகங்களிலும் உயிர்கள் வாழ்ந்து வருகிறதா என்பது குறித்து ஆய்வு தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வேற்று கிரகங்களில் ஆக்சிஜன் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க தீவிரமாக முயன்று வருகின்றனர். ஆனால் தற்போது நடந்த ஆய்வில் ஒரு இடத்தில் இருக்கும் ஆக்சிஜன் என்பது எப்போதும் நிலையாக இருக்காது என்பதை தெரியப்படுத்தியுள்ளது. 

எனவே வேற்று கிரகத்தில் வாழும் ஏலியன்கள் முழுக்க முழுக்க ஆக்சிஜனை நம்பி மட்டுமே உயிர் வாழும் நிலையில் இருக்க சாத்தியமில்லை. மற்ற வாயுக்களை சுவாசித்து உயிர் வாழும் தன்மை கொண்டதாகவும் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com