கடலுக்கு அடியில் விளையும் தங்கம்! இரும்பை விட வலிமையான 'கடல் பட்டு' பற்றி தெரியுமா?


Gold under the sea
Gold under the sea
Published on

நோபல் பேனா ஷெல் (Noble pen shell) என்று அழைக்கப்படும் பின்னா நோபிலிஸ் (Pinna nobilis) மத்தியதரைக் கடலில் காணப்படும் மிகப்பெரிய இருவோட்டு (bivalve) கடல் வாழ் உயிரினமாகும். இது 1.2 மீட்டர் வரை வளரக்கூடிய கடலில் வாழும் ஒரு வகை ராட்சத கிளிஞ்சல்கள். இந்த கிளிஞ்சல்கள் பாறைகளில் தங்களை இறுக்கமாக பிடித்துக்கொள்ள ஒருவகை தங்கநிற நூலிழைகளை சுரக்கின்றன. இதுதான் 'கடல் பட்டு'. இது தங்கத்தைப்போல ஜொலிக்கும். மிகவும் லேசானது; ஆனால் இரும்பைவிட வலிமையானது. 

இவை நீர்நிலைகளில் வடிகட்டி உண்பவை (filter feeders), கடலோர நீர் தரத்தை பராமரிக்க உதவுகின்றன. இதன் வடிவம் அது வசிக்கும் பகுதியைப் பொறுத்து மாறுபடும். இவை பல பட்டு போன்ற நூல்களால் ஆன வலுவான பைசஸை (byssus) பயன்படுத்தி பாறைகளுடன் தன்னை இணைத்துக்கொள்கிறது. இந்த இழைகளை அதன் பைசஸ் சுரப்பியிலிருந்து சுரக்கிறது. அவை கெரட்டின் மற்றும் பிற புரதங்களை கொண்டிருக்கின்றன. இவை கடலோரத்தில் வாழ்கின்றன. இந்த இனம் கடல் பட்டின் பிறப்பிடமாகும். முக்கோண வடிவிலான நீண்ட ஓடுகளைக் கொண்டது, அதன் கூர்மையான முனை மணலில் புதைந்து காணப்படும்.

கடல் பட்டு மிகவும் நேர்த்தியான, அரிதான மற்றும் விலையுயர்ந்த பட்டு வகையாகும். கடல் பட்டு முதலில் மத்தியதரைக் கடல் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டது. இவை சிலந்திகள் மற்றும் புழுக்கள் போன்ற நிலை இனங்களால் உற்பத்தி செய்யப் படுவதில்லை. 'பின்னா நோபிலிஸ்' என்று அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட வகை 'இருவால்வ்' மொல்லஸ்க் (bivalve mollusk) மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த கடல் பட்டை உற்பத்தி செய்யும் குறிப்பிட்ட வகை மொல்லஸ்க் அழிந்து வரும் அபாயத்தில் உள்ளது. கடல் மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றத்தால் இந்த வகை கிளிஞ்சல்கள் அழியத் தொடங்கின. இதனால் இவற்றை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்தியதரைக் கடலில் அழிந்து வரும் உயிரினமாக பட்டியலிடப்பட்டுள்ளது. 

தென்கொரியாவின் போஸ்டெக் (POSTECH) பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதற்கு ஒரு மாற்று வழியை கண்டு பிடித்துள்ளனர். கொரிய கடலோரங்களில் உணவிற்காக வளர்க்கப்படும் சாதாரண கிளிஞ்சல்களும் அந்த பழைய கால கிளிஞ்சல்களைப் போலவே நூலிழைகளை சுரப்பதைக் கண்டறிந்தனர். இந்த பட்டு துணிக்கு சாயம் பூசப்படுவதில்லை. இதில் உள்ள புரதங்கள் இயற்கையாகவே ஒளியை பிரதிபலித்து தங்க நிறத்தை தருகின்றன.

இதையும் படியுங்கள்:
கரப்பான் பூச்சிகளை அழித்தால் உலக வெப்பமயம் ஆகுமாம்... திடுக்கிட வைக்கும் பின்னணி இதோ!

Gold under the sea

வரலாற்று ரீதியாக ஆடம்பரமான, இலகுரக துணிகளை உருவாக்க பயன்படுத்தப்படும் இந்த மென்மையான, கொலாஜனஸ் அல்லாத பொருள் கையால் அறுவடை செய்யப்படுகிறது. பின்பு சுத்தம் செய்யப்பட்டு நூற்கப்படுகிறது. இந்த இனங்கள் மிகவும் அழிந்து வரும் நிலையில், உற்பத்தி கிட்டத்தட்ட முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சர்தீனியா போன்ற அருங்காட்சியகங்களில் உள்ள பொருட்கள் நம்பமுடியாத அளவிற்கு மதிப்புமிக்கதாகின்றன.

பழங்காலத்தில் இது கையுறைகள், காலுறைகள், தாவணி போன்ற பொருட்களை தயாரிக்க பயன்படுத்தப்பட்டது. பாரம்பரிய உற்பத்தி பெருமளவில் நின்றுவிட்டாலும், இதன் பண்புகள் குறித்த ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதன் தனித்துவமான கொலாஜனஸ் இல்லாத மற்றும் அதிக எதிர்ப்புத் திறன்கொண்ட கலவையால் அதிக கவனம் பெறுகிறது.

இது அதன் மின்னும், தங்க-பழுப்பு நிறம், சிறந்த அமைப்பு மற்றும் அதிக நெகிழ்ச்சித்தன்மைக்காக பெயர் பெற்றது. இழைகள் கடல் நீர் மற்றும் நன்னீரில் கழுவப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு கையால் நூற்கப்படுகின்றன. அழிந்து வரும் இனமாக உள்ளதால் பல பகுதிகளில் அதன் பைசஸை அறுவடை செய்வது சட்ட விரோதமானதாக சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com