தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

Tree
Tree
Updated on

தாவரங்கள் பகலில் ஒளிச்சேர்க்கை மூலம் கார்பன் டை ஆக்சைடை உட்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன என்ற கருத்து நம்மில் பலருக்குத் தெரியும். அதேபோல இவை இரவிலும் ஆக்சிஜனை வெளியிடும் என பலர் சொல்வதை கேட்டு இருப்பீர்கள். இது உண்மையா?. தாவரங்களும் நம்மைப் போலவே சுவாசிக்கின்றன. ஆனால், அவை ஆக்ஸிஜனை உட்கொண்டு கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகின்றன. இந்த செயல்முறை பகல் மற்றும் இரவு என எல்லா நேரங்களிலும் நடைபெறுகிறது.

ஒளிச்சேர்க்கை: ஒளிச்சேர்க்கை என்பது தாவரங்கள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான உணவைத் தயாரிக்கும் செயல்முறையாகும். இந்த செயல்முறையில் தாவரங்கள் கார்பன் டை ஆக்சைடை உட்கொண்டு, நீரைப் பயன்படுத்தி சர்க்கரையை உற்பத்தி செய்கின்றன. இந்த செயல்பாட்டின் துணை விளைபொருளாக ஆக்ஸிஜன் வெளியிடப்படுகிறது. ஒளிச்சேர்க்கை முழுமையாக சூரிய ஒளியைச் சார்ந்தது என்பதால், இது பொதுவாக பகலில் நடைபெறுகிறது.

இரவில் தாவரங்கள் என்ன செய்கின்றன?

இரவில் சூரிய ஒளி இல்லாததால், தாவரங்கள் ஒளிச்சேர்க்கையை மேற்கொள்ள முடியாது. ஆனால், அவை சுவாச செயல்பாட்டை தொடர்ந்து மேற்கொள்கின்றன. அதாவது, அவை ஆக்ஸிஜனை உட்கொண்டு கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகின்றன.

சில தாவரங்கள் விதிவிலக்கு: சில குறிப்பிட்ட தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டவை. இவற்றில் பெரும்பாலானவை CAM (Crassulacean Acid Metabolism) எனப்படும் ஒரு தனித்துவமான ஒளிச்சேர்க்கை முறையைக் கொண்டுள்ளன. இந்த தாவரங்கள் பொதுவாக வறண்ட பகுதிகளில் காணப்படுகின்றன. இவை பகலில் தங்கள் இலைத்துவாரங்களை மூடி நீர் இழப்பைத் தடுத்து, இரவில் இலைத்துவாரங்களைத் திறந்து கார்பன் டை ஆக்சைடை உட்கொள்கின்றன.

இதையும் படியுங்கள்:
AI உங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டால்? அச்சச்சோ! 
Tree

இரவில் தாவரங்கள் ஆக்ஸிஜனை வெளியிடும் என்ற கூற்று முற்றிலும் உண்மை அல்ல. பெரும்பாலான தாவரங்கள் இரவில் சுவாசிக்கின்றன, அதாவது ஆக்ஸிஜனை உட்கொண்டு கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகின்றன. ஆனால், சில குறிப்பிட்ட தாவரங்கள் CAM முறையைக் கொண்டுள்ளதால் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டவை. இதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 

logo
Kalki Online
kalkionline.com