வியப்பைத் தரும் சில விலங்கியல் உண்மைகள்!

யானை, பட்டுப்புழு, நாரை, பாம்பு,முதலை
யானை, பட்டுப்புழு, நாரை, பாம்பு,முதலை
Published on

தாயின் வயிற்றில் நீண்ட நாட்கள் இருக்கும் பிராணி ஆல்ப்பைன் சாலமண்டர் என்ற பிராணிதான். சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைகளில் 4500 அடி உயரமுள்ள பகுதியில் வாழும் இந்த பிராணி கருவுற்ற நான்காவது கோடைக்காலத்தில்தான் பிரசவிக்கிறது. ஒரு கரு வளர்ச்சியுற்று தாயின் வயிற்றிலிருந்து வெளிவர மூன்றேகால் ஆண்டுகள் ஆகின்றன. 2000 அடி உயரத்திற்கு கீழே இப்பிராணிகள் காணப்படுவதில்லை. தரைப்பகுதியில் வாழும் மிருகங்களில் ஆசிய யானையின் கர்ப்ப காலம் 25 மாதங்கள்.

தென் அமெரிக்காவில் வாழும் பிராணி ஆர்மடில்லோ. இது தனது கர்ப்ப காலத்தை தனது இஷ்டம் போல இரண்டாண்டு வரை ஒத்திப்போட்டு பிரசவத்திற்கு ஏற்ற காலம் இதுதான் என்று முடிவு செய்து கொள்ளுமாம்.

குட்டி போட்டு பாலூட்டும் பிராணிகளிலேயே மிகவும் சோம்பேறியான பிராணி ஸ்லோத் என்ற பிராணிதான். தென் அமெரிக்கா பகுதிகளில் இவை வாழ்கின்றன. இதற்குக் காது கேட்காது. மரங்களில் தலைகீழாக ஒரு நாளைக்கு 18 மணி நேரம் தொங்கியபடியே தூங்கிக் கொண்டிருக்கும். இதற்கு மிகக் குறைந்த உணவே போதுமானது. இதன் உடலில் படியும் புழு பூச்சிகளையே இது சாப்பிட்டு உயிர் வாழ்கிறது. இதன் தடிமனான தோல் மூலம் எந்த காயத்தையும் உண்டாக்குவது கடினம். அப்படி காயம் ஏற்பட்டாலும் உடனே காய்ந்து விடும். இது இயற்கையாகச் செத்துப்போனால் கூட அப்படியே மரத்தில் தொங்கியபடியே இருக்கும்.

தென் அமெரிக்காவில் உள்ள, ‘புபோ புபோ’ என்ற இன தவளைகளால் மனிதர்களால் பார்க்கக் கூடியதை விட எட்டு மடங்கு மங்கலான வெளிச்சத்தில் கூட தமது இரையை தேட முடியும்.

சாரைப்பாம்பால் அகச்சிவப்பு வெப்பக் கதிர்வீச்சைக் கொண்டு தனது இரையை பிடிக்க முடியும். தேனீக்களால் புற ஊதாக் கதிர்களைக் காண முடியும். வெளவால்களால் ரேடார் செவியுணர்வு மூலம் இரையை கண்டறிய முடியும். விட்டில் பூச்சிகளால்  வெப்ப அலைகளை உணர முடியும். நத்தைகளால் புவி காந்தப் புலத்தை உணர முடியும். தனக்குப் பின்புறம் உள்ள பொருட்களைக் கழுத்தைத் திருப்பாமல் பார்க்கும் ஆற்றல் ஒட்டகச்சிவிங்கிக்கு உண்டு.

யானையின் துதிக்கையில் எலும்பே கிடையாது. முழுவதும் தசையால் ஆனது. அது தனது துதிக்கை நுனியில் உள்ள கூர்மையான பகுதியைக் கொண்டு கீழே விழும் ஒரு ஊசியை கூட எடுத்து விட முடியும். யானைகளால் 100 ஆண்டுகள் வரை கூட வாழ முடியும். நில விலங்குகளில் யானைக்கு மிகப்பெரிய மூளை உள்ளது. அவற்றில் சுமார் 257 பில்லியன் நியூரான்கள் உள்ளன. இது மனித மூளையை விட மூன்று மடங்கு அதிகம்.

பொதுவாக, விலங்குகள் வாயைத் திறந்தால் கீழ்த்தாடைதான் கீழ் நோக்கி அசையும். ஆனால், முதலைகள் தனது வாயைத் திறந்தால் மேல் தாடைதான் மேல் நோக்கி அசையும். மேலும், முதலை கண்களைத் திறந்து கொண்டே தூங்கும். முதலைகளால் எலும்புகளை கூட  ஜீரணிக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் பரவும் எலிக்காய்ச்சலின் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்!
யானை, பட்டுப்புழு, நாரை, பாம்பு,முதலை

மீன்களுக்கு கண்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், காதும், மூக்கும் மீனுக்கு உண்டு என்பது தெரியுமா? மீன்களது காதுகள் வெளியே தெரியாத வகையில் அமைந்துள்ளது. தண்ணீருக்குள்ளும், தண்ணீருக்கு வெளியிலும்  தண்ணீர் அருகில் ஏற்படுகிற சத்தங்களை உணர்ந்து மீன்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடும். அதேபோல் மீன்களின் தலையின் மேற்பகுதியில் கண்களுக்கு முன்பாக இரு துளைகளாக மூக்கு இருக்கும். இதன் மூலம் தண்ணீரில் உள்ள பொருட்கள், உணவு ஆகியவற்றை மீன்கள் வாசம் பிடிக்கும்.

நாரை பறவைகள் கூட்டம் கூட்டமாக வாழும். ஒரே கூட்டத்தில் நூற்றுக்கணக்கான நாரைகள் இருக்கும். நாரையின் கழுத்தில் நெகிழ்வுத்தன்மை அதிகமாக   இருப்பதால் கழுத்தை எப்படி வேண்டுமானாலும் வளைத்து அதனால் இரை தேட முடியும். மேலும், நாரைக்கு உள்ள தனிச் சிறப்பு மற்ற பறவைகள் போல் இரையைக் கொத்தி அப்படியே விழுங்காது. நாரை இரையைத் தேடும்போது சகதியை அப்படியே விழுங்கி விடும். ஆனால், உடலுக்குள் செல்லும்போது தண்ணீரையும் சகதியையும் வடிகட்டி விடுகிறது.

வாசனைகளை நுகரும் ஆற்றலை மிக அதிகமாகக் கொண்ட உயிரினம் ஆண் பட்டுப்புழுதான். இது சுமார் 7 மைல் தொலைசில் உள்ள பெண் பட்டுப்புழு இருப்பதை நுகர்ந்து அறிந்துகொள்ளும்.

பாம்புகளுக்கு கண்களில் இமை கிடையாது. அதனால் எப்போது பார்த்தாலும் முழித்துக் கொண்டு இருப்பதுபோன்று தோன்றும். கண் இமைகளுக்கு பதிலாக கண்களின் மீது பாம்புகளுக்கு மெல்லிய சவ்வு உண்டு. இதுதான் இமை போல பாம்புகளின் கண்களைப் பாதுகாக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com