நம்பிக்கையும் சவால்களும் நிறைந்த மழைக்கால உழவர் வாழ்க்கை!

Farmer's life during the rainy season
Farming industry
Published on

ழவர்கள் என்பவர் நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லப்படும் அளவுக்கு முக்கியமானவராவர். அவர்களின் உழைப்பால்தான் நாம் தினமும் உணவு கிடைக்கப் பெறுகிறோம். அவர்களின் வாழ்க்கை நிலை நம் சமூகத்தின் அடித்தளத்தைப் பிரதிபலிக்கிறது.

உழவர்கள் தங்கள் வயல்களில் அதிகாலை முதல் மாலை வரை கடின உழைப்பில் ஈடுபடுகின்றனர். மழை, வெயில், காற்று எதையும் பொருட்படுத்தாமல் விதை போடுதல், நீர் பாய்ச்சுதல், அறுவடை செய்வது போன்ற பணிகளைச் செய்கின்றனர். இவர்கள் உழைப்பால்தான் அரிசி, கோதுமை, காய்கறி, பழம், பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தியாகின்றன.

ஆனால், இன்றைய நிலையில் பல உழவர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். மழையின்மை, நிலத்தடி நீர் மட்டம் குறைவு, உரம் மற்றும் விதைகள் விலை உயர்வு, சந்தை விலை மாற்றம் ஆகியவை அவர்களின் வாழ்க்கையை பாதிக்கின்றன. கடன் சுமையால் சிலர் மன அழுத்தத்திலும் சிக்குகின்றனர். உழவர்கள் தங்கள் பணியை தெய்வீகக் கடமையாகக் கருதி அயராது உழைக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
நல்லவேளை, பூமி (Earth) தட்டையானதாக இல்லை... ஒருவேளை அப்படி இருந்திருந்தால்... ஐயோ ஆபத்து!
Farmer's life during the rainy season

புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விளைச்சலை அதிகரிக்க முயல்கிறார்கள். அரசாங்கமும் பல்வேறு நிவாரணத் திட்டங்கள் மற்றும் உதவித் திட்டங்கள் மூலம் அவர்களின் நிலையை மேம்படுத்த முயல்கிறது. உழவர்களின் உழைப்பே நாட்டின் உணவுப் பாதுகாப்பின் அடிப்படை. அவர்களின் நலனே நம் நாட்டின் வளர்ச்சி. எனவே, ஒவ்வொருவரும் உழவர்களுக்கு மரியாதை அளித்து, அவர்களின் உழைப்பின் மதிப்பை உணர வேண்டும்.

மழைக்காலமும் உழவர் வாழ்க்கை நிலையும்: மழை என்பது இயற்கையின் அருளாகும். குறிப்பாக, உழவர்களுக்கு மழைக்காலம் மிகவும் முக்கியமானது. மழை இல்லாமல் விவசாயம் சாத்தியமே இல்லை. எனவே, மழைக்காலம் வந்தால் உழவர்கள் மிகுந்த நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் தங்கள் பணிகளைத் தொடங்குகிறார்கள். மழைக்காலம் தொடங்கியவுடன் உழவர்கள் தங்கள் நிலங்களை உழவிற்கு தயாராக்குகிறார்கள். நிலத்தை உழுது விதை போடுவதற்கும், நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும் செய்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
மண் வளத்தை மீட்டெடுக்கும் பசுந்தாள் உரப் பயிர் ரகசியம்!
Farmer's life during the rainy season

மழை பெய்யும் நாட்களில் வயலில் மண் ஈரமாக இருப்பதால், உழவர்களுக்கு சில நேரங்களில் சிரமமாக இருந்தாலும் அவர்களின் முகத்தில் உற்சாகம் குறையாது. அவர்கள் மழையில் நனைந்தும், சேற்று மண்ணில் கால் பதித்தும் உழைக்கிறார்கள். விதை போடுதல், செடிகளுக்கு உரமிடுதல், நீர் கட்டுதல் போன்ற வேலைகளில் முழுமையாக ஈடுபடுகிறார்கள். மழை நன்றாகப் பெய்தால் விளைச்சல் நன்றாக வரும் என்ற நம்பிக்கையுடன் உழவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

ஆனால், மழை மிகுந்து பெய்தால் வயல்கள் நீரில் மூழ்கி, பயிர்கள் அழிகின்றன. இதனால் சில சமயங்களில் அவர்கள் பெரும் இழப்பையும் சந்திக்கிறார்கள். அதேசமயம் மழை குறைவாக இருந்தால் பயிர்கள் வாடிப்போகும். எனவே, மழை சமமாகப் பெய்ய வேண்டும் என்பதே அவர்களின் மிகப்பெரிய விருப்பமாகும்.

மழைக்காலம் உழவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையும் சவால்களும் நிறைந்தது. எனவே, மழையின் அருள்தான் உழவர்தம் வாழ்க்கையின் அடிப்படை என்று சொல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com