ஆண்டு முழுவதும் இலைகளை உதிர்க்காத பசுமைமாறா மரங்களின் மர்மம் என்ன?

The secret of evergreen trees
Evergreen trees
Published on

பொதுவாக, மரங்கள் மழைக்காலத்தில் செழிப்பாகவும், கோடைக் காலத்தில் இலைகளை உதிர்த்து வறட்சியாகவும் காணப்படும். இதற்குக் காரணம் மரங்கள் காலநிலையை சார்ந்தே வாழ்கின்றன. மரங்கள் மழை நீரை மட்டுமே நம்பி இருக்குமானால் மழைக்காலத்தில் மட்டும் செழிப்பாகக் காணப்படும். கோடைக் காலத்தில் போதிய நீர் கிடைக்காமல் இலை உதிர்ந்து வறண்டு விடும். ஆனால், கோடைக் காலத்திலும் இலை உதிராத மரங்கள் பல உள்ளன.

பசுமைமாறா மரங்கள்: இலைகள் உதிராத மரங்கள் பொதுவாக, 'பசுமைமாறா மரங்கள்' என அழைக்கப்படுகின்றன. இவை ஆண்டு முழுவதும் பசுமையாக இருக்கும். ஏனெனில், அவை தங்கள் இலைகளை ஓராண்டில் உதிர்க்காமல் தொடர்ந்து வளர்கின்றன. ரப்பர், ஏலக்காய், தேக்கு, பனை, மூங்கில் மற்றும் ஊசி இலை மரங்களான பைன், ஸ்ப்ரூஸ், சிடார் மற்றும் சில வகையான அத்தி மரங்கள் போன்றவை இலை உதிராமல் இருக்கும். பல மரங்கள் வறட்சியைத் தாங்கிக் கொள்ளவும், தண்ணீரை சேமிக்கவும் இலைகளை உதிர்க்கின்றன. இலை உதிராத மரங்கள் தங்கள் இலைகளை ஆண்டு முழுவதும் பராமரிப்பதன் மூலம் எப்பொழுதுமே பசுமையாகக் காட்சியளிக்கும்.

இதையும் படியுங்கள்:
சூரியனே தேவையில்லை! இருட்டில் உணவைத் 'திருடி' வாழும் ஜப்பானின் 'பேய்' மலர்கள்!
The secret of evergreen trees

பசுமைமாறா மரங்களின் பண்புகள்: பைன், தேவதாரு போன்ற ஊசி இலை மரங்கள் பொதுவாக இலை உதிர்வதில்லை. இவை தங்கள் இலைகள் அல்லது ஊசிகளை ஆண்டுதோறும் குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றிக்கொண்டே இருக்கும். ஆனால், அவை எப்போதும் இலைகளுடன் காணப்படும். இலைகள் உதிராத மரங்கள் தங்கள் பசுமையை ஆண்டு முழுவதும் தக்க வைத்துக் கொள்கின்றன. பசுமை மாறாத் தன்மையுடைய இந்த மரங்கள் பொதுவாக ஆண்டு முழுவதும் பச்சை நிறத்தில் இருக்கும். இவை இலையுதிர் தாவரங்களைப் போலல்லாமல் குளிர்காலம் அல்லது உலர் காலங்களிலும் கூட தங்கள் இலைகளை முழுமையாக இழப்பதில்லை. பொதுவாக, வெப்ப மண்டல மழைக்காடுகள், ஓக், மரமல்லி மற்றும் நாவல் போன்ற பல பசுமைமாறா மரங்களைக் கொண்டுள்ளன.

நிலநடுக்கோட்டை சுற்றியுள்ள வெப்ப மண்டல மழைக்காடுகளில் பசுமைமாறா மரங்கள் செழித்து வளர்க்கின்றன. இங்கு அதிக வெப்பமும், கனத்த மழைப்பொழிவும் காரணமாக, பருவ காலங்கள் தெளிவாக இருப்பதில்லை. அதனால் மரங்கள் பசுமையுடன் காணப்படுகின்றன. வெள்ளி தேவதாரு இலைகள் மூன்று ஆண்டுகள் வரை பசுமையாக இருக்கும். கிறிஸ்துமஸ் மரமாக பயன்படுத்தப்படும் ஓக் மரம் ஒரு வகை பசுமைமாறா மரமாகும்.

இதையும் படியுங்கள்:
தனது இன அழிவுக்கு தானே காரணமாகும் ஆப்பிரிக்க மழைப்பறவையின் விசித்திர வாழ்க்கை முறை!
The secret of evergreen trees

பருவ காலங்கள் மாறினாலும் இந்த மரங்கள் இலைகளை உதிர்ப்பதில்லை. அடர்த்தியான மற்றும் பரந்த கிளைகளைக் கொண்டிருக்கும் இவை, பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் வளரும் தன்மையுடையவை. விரைவாக வளரக்கூடிய தன்மை பெற்றவை. சில மரங்கள் (உதாரணத்திற்கு இந்திய பீச் மரம்) நீடித்ததாகவும், சிதைவை எதிர்க்கும் தன்மையுடனும், நீர் எதிர்ப்பு பண்புகளுடனும் இருக்கும்.

பல பசுமைமாறா மரங்களின் இலைகள் தடிமனாகவும், தோல் போன்ற அமைப்பைக் கொண்டதாகவும் இருக்கும். இது நீர் இழப்பை குறைக்கவும், கடினமான காலநிலையைத் தாங்கவும் உதவுகிறது. ஊசியிலை அல்லது கூம்பு மரங்கள் போன்ற பல வகையான பசுமைமாறா மரங்கள் ஊசி அல்லது செதில் வடிவ இலைகளைக் கொண்டுள்ளன. இது பனி மற்றும் வறண்ட காலநிலையை சமாளிக்க உதவுகிறது. இவை பல்வேறு காலநிலைகளுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனை கொண்டுள்ளன. வெப்பமண்டல மழைக்காடுகள் முதல் குளிர்ந்த, மிதமான பகுதிகள் வரை இவற்றைக் காணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com