சுவையான வெள்ளரி விதை அல்வா செய்வது எப்படி?

சுவையான வெள்ளரி விதை அல்வா செய்வது எப்படி?
எஸ்.ராஜம்

என் வயது 84. கல்கி இதழ் பிறந்ததிலிருந்தே என் தாயார் கல்கி இதழை படித்ததை பார்த்து, பார்த்து வளர்ந்ததால் எனக்கும் படிப்பார்வம் பிறந்தது. பின்னர் எழுத்தார்வம் உருவானது. கல்கி இதழுக்கு 16 வயதில் இருந்து என் படைப்புகளை அனுப்ப ஆரம்பித்தேன். பிறகு மங்கையர் மலர் பிறந்ததும் அதற்கு கதை, கவிதைகள், கட்டுரைகள் துணுக்குகள் ஜோக்ஸ், டிப்ஸ், கோலங்கள் என்று அனுப்பி கொண்டிருக்கிறேன். அவை பிரசுரமாகி எனக்கு உற்சாகமூட்டுகின்றன. கல்கி குழும இதழ்கள் நடத்திய போட்டிகளில் பங்கு கொண்டு பல பரிசுகள் பெற்றுள்ளேன். ராஜம் எனும் என் பெயரிலும் ராஜலட்சுமி பாரதி மகள் ஆகிய துணை பெயர்களிலும் இன்று வரை தொடர்ந்து எழுதி வருகிறேன். தலைமுறை தலைமுறையாக கல்கி குழுமத்துடன் நாங்கள் உறவு வைத்திருப்பது எனக்கு பெருமை தருகிறது.

Updated on

தேவையான பொருட்கள்:

வெள்ளரி விதை – 100 கிராம்,

சர்க்கரை – 200 கிராம்,

நெய் – 100 கிராம்,

ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,

பிஸ்தா தூள் – இரண்டு டீஸ்பூன்

முந்திரி - 6

குங்குமப்பூ – சிறிதளவு,

கேசரி பவுடர்– ஒரு ஸ்பூன்.

செய்முறை:

வெள்ளரி விதைகளை ஒரு மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து விழுதாக அரைக்கவும். வாணலியில் சர்க்கரை, கேசரி பவுடர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

நுரை வரும்போது அரைத்த வெள்ளரி விழுது, நெய் சேர்த்துக் கிளறி சுருண்டு வரும்போது இறக்கவும். பிறகு ஏலக்காய்த்தூள் , பிஸ்தா தூள் , குங்குமப்பூ , வறுத்த முந்திரி சேர்த்து இறக்கினால், சுவையான கம கம வெள்ளரி விதை அல்வா தயார். பசுமை நிறம் தேவை என்றால், கடையில் கிடைக்கும் கலர் பொடியை சிறிது தூவி கலக்கியபின் இறக்கிவிட வேண்டும். அதிகபட்சம் இருபது நிமிடத்தில் இந்த வேலை முடிந்தாலும் அதன் பிறகு, மூன்று மணி நேரத்துக்கு அந்தப் பாத்திரத்தை மூடி, அப்படியே ஆற வைக்க வேண்டும். மெதுவாக ஆறினால் மட்டுமே நெகிழ்வான நிலையில் அல்வா இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com