ருசியான பச்சை மிளகாய் ஊறுகாய் செய்வது எப்படி ?

ருசியான பச்சை மிளகாய் ஊறுகாய் செய்வது எப்படி ?
ஜெயகாந்தி மகாதேவன்

என் பெயர் ஜெயகாந்தி. விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து பள்ளி இறுதி வகுப்பு வரை அங்கு பயின்று வந்தேன். பிறகு என் பதினெட்டாவது வயதில் சென்னைக்கு குடி பெயர்ந்தேன். அங்கு தட்டெழுத்து சுருக்கெழுத்து பயின்று சுமார் நாற்பது ஆண்டுகள் வெவ்வேறு இடங்களில் பணி புரிந்து, ஓய்வு பெற்றுள்ளேன். அதன் பின் எழுத்தில் ஆர்வம் கொண்டு சில பெண்கள் பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பித்தேன். கல்கி குழுமத்தினரின் ஊக்குவிப்பால் சிறுகதை, கவிதை, கட்டுரை என பல தலைப்புகளிலும் எழுதியுள்ளேன். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

Updated on

தேவை:

பச்சை மிளகாய் ½ கிலோ

சுத்தம் செய்த கெட்டிப் புளிக் கரைசல் ½ கப்,

கடுகு 25 கிராம்,

வெந்தயம் 25 கிராம்,

கருப்பு எள் 50 கிராம்,

மஞ்சள் தூள் 1டீஸ்பூன்,

எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்,

கல் உப்பு தேவையான அளவு.

செய்முறை:

வாணலியை சூடாக்கி, எள், கடுகு, வெந்தயம் ஆகியவற்றை மிதமான தீயில் வறுத்தெடுக்கவும்(dry roast). ஆறியதும், மூன்றையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு பவுடராக்கவும்.

பின் மிளகாயை காம்பை கிள்ளிவிட்டு ஒரு இன்ச் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாயைப் போட்டு வதக்கவும்.

வதங்கியதும் புளிக் கரைசலை ஊற்றி உப்புப் போடவும். கொதி வந்ததும் மசாலா பவுடர், மஞ்சள் தூள் சேர்த்து ஒன்று சேர கலந்து விடவும். இரண்டு நிமிடம் கழித்து இறக்கிவிடவும்.

ஆறியதும் கண்ணாடி ஜாடியில் போட்டு மூடவும். தயிர் சாதத்துக்கு அருமையான காம்பினேஷன்

இப்போது பச்சை மிளகாய் ஊறுகாய் ரெடி இது மூன்று மாதம் வரை கெடாமல் இருக்கும் இதை ஸ்டோர் செய்து வைத்து சாப்பிடலாம்.

logo
Kalki Online
kalkionline.com