தேவையான பொருட்கள்:
வெள்ளை தாமரைப்பூ - 2
உளுந்த மாவு - 100 கிராம்
பெருங்காயத் தூள் - 1 ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 ஸ்பூன்
சீரகம் சிறிது
இந்துப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
தாமரைப்பூவின் இதழ்களைத் தனித் தனியாகப் பிரித்துக்கொள்ளுங்கள். உளுந்த மாவில் பெருங்காயத் தூள், சீரகம், தேவையான அளவு இந்துப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்துக்கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாமரைப்பூவின் ஒவ்வோர் இதழாக மாவில் தோய்த்துப் பொரித்தெடுங்கள். சுவையான, சத்தான மொறு மொறு வெண்தாமரைப்பூ அப்பளம் தயார்.