பாதாம் பூரி!

பாதாம் பூரி!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தேவையான பொருட்கள்:

மைதா மாவு /கிலோ, சர்க்கரை – ¼ கிலோ, அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன், கெட்டி நெய் - 3 ஸ்பூன், பாதாமி -3(பொடி செய்தது) ஏலக்காய்-4 (பொடி செய்தது) டால்டா (அ) ரிபைன்ட் ஆயில் - பொரிப்பதற்கு.

செய்முறை :

முதலில் மைதா மாவை பூரிக்குப் பிசைவதுபோல் பிசைந்துகொள்ள வேண்டும். அதை 2  (அ) 3 மணி நேரம் ஊறவைக்கவும். அரிசி மாவையும், கெட்டி நெய்யையும் பிசைந்து, குழைத்து வைத்துக்கொள்ள வேண்டும். மைதா மாவை 5 அல்லது 6 பெரிய அப்பளமாக இட்டுக்கொள்ள வேண்டும். சர்க்கரையைப் பாகாக கம்பிப் பதத்திற்கு செய்துகொள்ள வேண்டும். மைதா மாவு அப்பளங்கள் ஒவ்வொன்றின் மேலும் சர்க்கரைப் பாகு கலவையை ஒரு பக்கம் தடவ வேண்டும். பின் எல்லா அப்பளங்களையும் ஒன்றன் மேல் ஒன்றாக வைத்துச் சுருட்டி வைக்கவும். பின் இவ்வாறு சுற்றப்பட்ட மைதா அப்பளக்கலவையை சிறு சிறு துண்டுகளாகச் செய்து சின்ன அப்பளமாகக் குழவியில் இட்டுக்கொள்ளவும். அடுப்பில் வாணலியில் ரிபைன்ட் ஆயிலைச் சுட வைக்கவும். சின்ன அப்பளங்களை வாணலியில் பொரித்து எடுக்கவும். இவ்வாறு பொரிக்கப்பட்டவைகளைச் சர்க்கரைப் பாகில் நனைத்து, தனியாக எடுத்து தாம்பாளத்தில் அடுக்கவும். பின் ஒவ்வொரு பூரியின் மீதும், பொடி செய்த ஏலக்காய், பாதாமி கலவையைத் தூவ வேண்டும். இதுவே பாதாமி பூரிஆகும்.

logo
Kalki Online
kalkionline.com