மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்.
தேவை:
சாமைஅரிசி-4டேபிள்ஸ்பூன்,
தனியா-2டேபிள்ஸ்பூன்,
கடலைப்பருப்பு-1டேபிள்ஸ்பூன்,
வரமிளகாய்–நான்கு,
பெருங்காயப்பொடி.,1 சிட்டிகை
செய்முறை: மேற்கூறியவற்றை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து ப் பொரிக்கவும்.
அவல் உப்புமாசெய்ய:
சிகப்பு அவல்-4கப்
,மஞ்சள் பொடி–1/2டீஸ்பூன்,
உப்பு – சுவைக்கு
நீர்க்க கரைத்த புளிகரைசல்–அவல் ஊற விட,
வெல்லம்–சிறிய துண்டு.
தாளிக்க:கடுகு,உளுத்தம் பருப்பு,கிள்ளிய மிளகாய் -2,
ப மிளகாய்-4,
துருவிய தேங்காய்–1/2 கப்,
கறிவேப்பிலை.
செய்முறை அவலைக் கழுவி ,தண்ணீரை வடிகட்டவும் புளிகரைசலைக். கொதிக்க வைத்து அதில் அவல்,மஞ்சள் பொடி போட்டுக் கலந்து மூடி ஊற விடவும்.அகலமான அடிகனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ளவற்றை போட்டு த்தாளித்து பின்பு ஊறிய அவல் சேர்த்து ,அடுப்பை சிம்மில் வைத்து க் கிளறவும்.ஒரு மூடி போட்டு ஐந்து நிமிடம் வைக்கவும். பின் அரைத்து வைத்த மேல் பொடியைத் தூவி தேவைக்கேற்ப உப்பு ,வெல்லம் சேர்த்து ஐந்து நிமிடம் வைக்கவும். பின் நன்கு கலந்து சூடாக்கிஒரு பரிமாறவும்.