சுவையான மற்றும் அருமையான காலை நேர உணவுகள்!

Delicious and delicious breakfast dishes!
healthy food recipesImage cedit - youtube.com
Published on

புதினா மசாலா இடியாப்பம்

புதினா மசாலா இடியாப்பம் ஒரு சுவையான மற்றும் அருமையான காலை உணவு.

தேவை:

வெந்த இடியாப்பம் – 2 கப்

புதினாஇலை – 1 கப்

பச்சைமிளகாய் – 2

வெங்காயம் – 1 நறுக்கியது

பூண்டு – 2 பற்கள்

இஞ்சி – 1 சிறிய துண்டு

நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

மிளகுதூள் – ½ டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

புதினாஇலை, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டை சேர்த்து மிக்சியில் அரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் சூடாக்கி வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதில் புதினா மசாலா சேர்த்து 2-3 நிமிடம் நன்றாக வதக்கவும். வெந்த இடியாப்பத்தை அதில் சேர்த்து நன்கு கலக்கவும். மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி இறக்கி. சூடாக பரிமாறவும். புதினா இடியாப்பம் சுவையானது, துரிதமானது, மற்றும் ஆரோக்கியமானது.

கேழ்வரகு கட்லட்;

கேழ்வரகு கட்லெட் ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான ஸ்நாக்ஸ் ஆகும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது.

தேவை:

கேழ்வரகு மாவு – 1 கப்

உருளைக்கிழங்கு – 2 வேகவைத்து மசித்தது

காய்கறிகள் (கேரட், பீன்ஸ், வெங்காயம்) – 1 கப் (நறுக்கி வேகவைத்தது)

பச்சைமிளகாய் – 2 பொடியாக நறுக்கியது.

இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

மிளகுதூள் – ½ டீஸ்பூன்

மல்லிஇலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

பொட்டுக்கடலை மாவு அல்லது அரிசிமாவு – 2 டேபிள் ஸ்பூன்

ரொட்டித்தூள் – 1 கப்

எண்ணெய் –  பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

பெரிய பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, மசித்த உருளைக்கிழங்கு, வேகவைத்த காய்கறிகள், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, மிளகுதூள், உப்பு, கொத்தமல்லி இலை மற்றும் பொட்டுகடலை மாவு சேர்த்து நன்றாக கலக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து இலகுவான பொதி போன்ற பதத்திற்கு பிசையவும்.

பிசைந்த கலவையை சிறிய உருண்டைகளாக வடிவமைத்து கட்லட் வடிவத்தில் தட்டவும். கட்லட்டுகளை ரொட்டித்தூளில் மறைந்து, ஒவ்வொரு பக்கத்தையும் நன்றாக தடவவும். காய்ந்த எண்ணெயில் கட்லட்டுகளை பொன்னிறமாக பொரிக்கவும். மொறு மொறுப்பான கேழ்வரகு கட்லெட்களை சட்னி அல்லது கெட்சப்புடன் பரிமாறவும். சுவையான, ஆரோக்கியமான கேழ்வரகு கட்லெட் ரெடி!

சேப்பங்கிழங்கு மசாலா

தேவை:

சேப்பங்கிழங்கு – 250 கிராம்

வெங்காயம் – 1 நறுக்கியது

தக்காளி – 1 நறுக்கியது

பூண்டு – 4 பற்கள்  (அரைத்தது)

இஞ்சி – 1 இன்ச் துண்டு (விழுது)

பச்சைமிளகாய் – 2 நறுக்கியது

மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்

சாம்பார்பொடி – 1 டீஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – சில

மல்லிஇலை – சிறிதளவு

செய்முறை:

சேப்பங்கிழங்கு கிழங்குகளை தண்ணீரில் வேகவைத்து, தோலுரித்து சதுரமாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சூடான பிறகு கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி விழுது சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும மஞ்சள்தூள், மிளகாய்தூள், சாம்பார்பொடி மற்றும் உப்பு சேர்த்து 2-3 நிமிடங்கள் வேகவைக்கவும். வேகவைத்த சேப்பங்கிழங்கு துண்டுகளை இதில் சேர்த்து நன்கு கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மிதமான சூட்டில் மசாலா நன்றாக சேரும்வரை 5-7 நிமிடங்கள் வேகவைக்கவும்.

இறுதியில் மல்லிஇலை சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும். சாம்பார்சாதம், ரசம் சாதம் அல்லது தேங்காய்சாதம் போன்றவற்றுடன் இந்த மசாலா மிகச் சிறப்பாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com