மகிழ்ச்சியான வாழ்வுக்கு மனைவியர் மாற்றிக்கொள்ள வேண்டிய 3 பழக்கங்கள்!

மனவேற்றுமை தம்பதியர்
Infidel couplehttps://astrotalk.com
Published on

திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆக கருதப்படுகிறது. குறிப்பாக, திருமணத்திற்கு முன்பான சூழ்நிலைகள் வித்தியாசமாக இருக்கும். திருமணத்திற்குப் பிறகு தனது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறார்கள், ஆனால், சில நேரங்களில் இருவரின் அல்லது ஒருவரின் தவறு காரணமாக, திருமண வாழ்க்கை முற்றிலும் மோசமானதாகி விடுகிறது.

திருமணத்திற்குப் பிறகு கணவன்-மனைவி இடையே சிறுசிறு சண்டைகள் வருவது சகஜம். அதில் யார் மீதும் தவறு இருக்கலாம். ஆனால், கணவன் தவறு செய்யும் ஒவ்வொரு முறையும், மனைவியும் பல சமயங்களில் உறவைக் கெடுக்கும் இதுபோன்ற செயல்களைச் செய்வது அவசியமில்லை. ஒரு மனைவியாக கணவனிடம் பெண்கள் எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

மனைவியர் மாற்றிக்கொள்ள வேண்டி 3 பழக்கங்கள்:

1. எல்லாவற்றிலும் சந்தேகம்: நம்பிக்கை என்பது எந்தவொரு உறவுக்கும் வலுவான அடித்தளமாகும். மேலும், கணவன் மற்றும் மனைவிக்கு இடையிலான உறவில் இது கூடுதல் முக்கியமானது. ஏனெனில், இந்த உறவு வாழ்நாள் முழுவதும் பராமரிக்கப்பட வேண்டும். பல சமயங்களில் மனைவிக்கு கணவன் மீது சந்தேகம் வரும். ஒரு பெண் தோழி அல்லது சக ஊழியரிடம் கணவன் சாவகாசமாக பேசுவது அல்லது நண்பர்களுடன் கேலி செய்வது போன்றவை மனைவிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும்.

இதற்காக, பல பெண்கள் தங்கள் கணவரின் தொலைபேசியை சரிபார்க்கிறார்கள் அல்லது அவரைப் பின்தொடரவும் தயங்குவதில்லை. கணவன் விவகாரமாக இல்லாதபோதும், இன்னும் நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் கணவரின் நம்பிக்கையை அவமதிக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்த சந்தேகப் பழக்கத்தை விரைவில் கைவிட வேண்டியது அவசியம்.

இதையும் படியுங்கள்:
‘Parchment Paper’ எனப்படும் காகிதத் தோலின் 9 பயன்கள்!
மனவேற்றுமை தம்பதியர்

2. அதிகமாகக் கோரிக்கை வைப்பது: திருமணத்திற்குப் பிறகு, மனைவி தனது கணவனை ஒரு ராஜாவைப் போல நடத்துகிறாள். அதாவது தனக்கு வேண்டியதை அவரிடம் கேட்டு பொற்றுக்கொள்கிறார். இது முற்றிலும் தவறு அல்ல. ஆனால், அவள் அவனிடம் அதிக விஷயங்களைக் கோரினால், அது உறவைக் கெடுக்கும். தம்பதிகளுக்கு இடையே பதற்றத்தை அதிகரிக்கும். கணவனின் நிதி வரம்பு என்ன என்பதையும், எதிர்காலப் பொறுப்பிற்காக அவர் எவ்வளவு சேமிக்கிறார் என்பதையும் நீங்கள் உணர்ந்திருக்க வேண்டும். அதற்கேற்ப செலவு செய்ய முடியும்.

3. கணவனை ஒருவருடன் ஒப்பிடுதல்: சில மனைவியர் தனது கணவனை தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அல்லது வெளியாட்களுடன் ஒப்பிடுவது அடிக்கடி நிகழும் ஒன்றாகும். கணவருக்கு இந்தப் பழக்கம் பிடிக்காது. அது அவர்களின் சொந்த உறவில் விரிசலை உருவாக்குகிறது. மனைவியின் இந்த செயல் கணவனின் ஈகோவை புண்படுத்தும். ஏனென்றால். மனைவி அவனை வேறொரு நபருடன் ஒப்பிடுவதை ஆண்கள் விரும்புவதில்லை. ஒவ்வொரு நபரும் தனக்குள் வித்தியாசமானவர் என்பதை மனைவிகள் மனதில் கொள்ள வேண்டும். மற்றவர் எவ்வளவு நல்லவராக இருந்தாலும், உங்கள் கணவரின் இடத்தை அவரால் நிரப்ப முடியாது.

திருமண பந்தம் எவ்வளவு உயர்வானது, எவ்வளவு புனிதமானது என்பதை உணர்ந்து இருப்பீர்கள். மேற்சொன்ன இந்த மூன்று பழக்கங்களையும் நீங்கள் மாற்றிக் கண்டால் உங்கள் வாழ்க்கையில் என்றைக்கும் வசந்தம் வீசிக்கொண்டே  இருக்கும் குடும்பமும் குதூகலமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com