வேலை செய்யும் இடத்தில் ரொம்ப நல்லவராக இருப்பதில் உள்ள 5 ஆபத்துக்கள்!

office Work
office Work
Published on

வேலை செய்யும் இடத்தில் நல்லவராக இருப்பது நல்லதுன்னு நினைக்கிறீங்களா? அது சில சமயங்களில் ஆபத்தாகவும் முடியலாம். நம்ம சுபாவம் நல்லதா இருக்கலாம், ஆனால் வேலை செய்யும் இடத்துல ரொம்பவே நல்லவங்களா இருந்தா என்னென்ன சிக்கல்கள் வரும்னு ஒரு அஞ்சு விஷயத்தை இந்தப் பதிவுல பார்ப்போம்

1. நீங்க எப்பவுமே நல்லவர்னு பெயர் எடுத்தா, எல்லோரும் உங்ககிட்டதான் வந்து வேலைகளைக் கொடுப்பாங்க. "அவர் நல்லவரு, மறுக்க மாட்டாரு"னு சொல்லி சொல்லி, உங்களோட தலையில பாரத்தைக் கட்டிடுவாங்க. உங்க மேல திணிக்கப்படும் வேலைகள் அதிகமாகி, ஒருகட்டத்துல உங்களுக்கே நேரமில்லாம, மன அழுத்தமும் அதிகரிக்க வாய்ப்பிருக்கு. இதுதான் முதல் ஆபத்து.

2. நீங்க யாருக்கும் "No" சொல்ல மாட்டீங்க. உதவி கேட்டு யார் வந்தாலும் சரி, உங்களால முடியுதோ இல்லையோ, "சரி"னு சொல்லிடுவீங்க. இதனால உங்க தனிப்பட்ட வேலைகள் பாதிக்கப்படும். "No" சொல்லத் தெரியாம, மத்தவங்களுக்காகவே உங்களோட நேரத்தையும் உழைப்பையும் வீணாக்குவீங்க. இது ரொம்பவே கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்.

3. நீங்க ரொம்பவே நல்லவரா இருக்கிறதுனால, மத்தவங்க உங்களோட நல்ல குணத்தை பயன்படுத்திக்கவும் வாய்ப்பிருக்கு. நீங்க ஒரு விஷயத்துல மறுக்க மாட்டீங்கனு தெரிஞ்சா, உங்களோட சம்மதமில்லாமலே சில முடிவுகளை எடுத்து, உங்க மேல பழி போடவும் தயங்க மாட்டாங்க. 

4. உங்க நல்ல குணம் உங்க வளர்ச்சிக்கு தடையா அமையலாம். உங்க திறமைகளை வெளிப்படுத்த, உங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்க, சில சமயங்களில் கொஞ்சம் துணிச்சலும் உறுதியும் தேவைப்படும். "அவர் எதுக்கும் சண்டை போட மாட்டாரு, அமைதியானவரு"னு உங்க மேல ஒரு இமேஜ் வந்திடுச்சுனா, உங்களோட கருத்துக்களுக்கு மதிப்பிருக்காது, உங்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வுகளும் தாமதமாகலாம்.

இதையும் படியுங்கள்:
உங்களுக்கு சுயமரியாதை இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள சில வழிகள்!
office Work

5. கடைசியா, நீங்க எப்பவுமே எல்லோருக்கும் நல்லவராக இருக்கணும்னு நினைக்கும்போது, உங்களுக்கான சுயமரியாதை குறைய வாய்ப்பிருக்கு. மத்தவங்க என்ன நினைப்பாங்கனு யோசிச்சு யோசிச்சு, உங்களுக்கான நியாயமான உரிமைகளை கூட விட்டுக்கொடுத்துடுவீங்க. ஒரு கட்டத்துல, உங்களுக்கே உங்க மேல மதிப்பு குறைஞ்ச மாதிரி ஒரு உணர்வு வரலாம்.

நல்லவரா இருப்பது நல்லதுதான், ஆனால் அது எதுவரைக்கும் இருக்கணும்னு ஒரு எல்லை கோடு போட்டுக்கணும். இல்லனா, ஆபத்துக்கள் சூழ்ந்துகொள்ளும். பணிபுரியும் இடத்தில் புத்திசாலித்தனமாவும், சமயோசிதமாவும் நடந்து கொண்டால் மட்டுமே நிம்மதியா வேலை செய்ய முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com