விருந்தாளி வராங்கனு அலற வேண்டாம்... இந்த ஈஸி டிப்ஸ் பாருங்க!

Home organizing tips
Home organizing tips
Published on

நாம் அனைவருக்குமே நம் வீடு எப்போதும் சுத்தமாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால் வேலைப்பளு மற்றும் நேரமின்மை காரணமாக அது பல நேரங்களில் சாத்தியப்படுவதில்லை. சிலரது வீட்டிற்குச் செல்லும்போது மட்டும், அங்கு ஒரு தூசி கூட இல்லாமல் எப்படி இவ்வளவு நேர்த்தியாக வைத்திருக்கிறார்கள் என்று நாம் வியப்போம். 

அவர்கள் நாள் முழுவதும் கையில் துடைப்பத்துடன் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. அவர்கள் புத்திசாலித்தனமாகச் சில பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதே உண்மை. வீட்டைப் பளிச்சென்று வைத்திருப்பவர்கள் ஒருபோதும் செய்யாத சில தவறுகளைத் தவிர்த்தாலே, நம் வீடும் சொர்க்கமாக மாறும். அதைப்பற்றி இங்கே காண்போம்.

பாத்திரங்களைச் சேர்த்து வைக்கும் பழக்கம்!

சமையலறையில் சிங்க் நிரம்பப் பாத்திரங்கள் இருந்தால், வீடே அலங்கோலமாகக் காட்சியளிக்கும். சுத்தமான வீடு வைத்திருப்பவர்கள் சாப்பிட்ட தட்டுகளையோ அல்லது சமைத்த பாத்திரங்களையோ சிங்க்கில் போட்டு ஊற வைப்பதில்லை. சமைக்கும் இடைவேளையிலேயே பாத்திரங்களைக் கழுவி வைப்பது மற்றும் சாப்பிட்ட உடனே தட்டைக் கழுவி வைப்பது போன்ற பழக்கங்கள் சமையலறையை எப்போதும் சுத்தமாகக் காட்டும்.

விடுமுறையில் சுத்தம் செய்! 

வாரம் முழுவதும் குப்பையைச் சேர்த்து வைத்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை மொத்தமாகச் சுத்தம் செய்யலாம் என்று நினைப்பது மிகப்பெரிய தவறு. இது வார இறுதியில் நமக்குக் களைப்பைத் தருவதோடு, வாரம் முழுவதும் வீட்டை அசுத்தமாக வைத்திருக்கும். தினமும் அந்தந்த அறையைக் கடக்கும்போது கண்ணில் படும் குப்பையை எடுத்துப் போடுவது அல்லது பொருட்களைச் சீர்படுத்துவது போன்ற சிறு வேலைகளைச் செய்தாலே வீடு எப்போதும் நேர்த்தியாக இருக்கும்.

படுக்கையை கவனி!

காலையில் எழுந்தவுடன் படுக்கையைச் சீர்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டுச் செல்வது சோம்பேறித்தனத்தின் அடையாளம். படுக்கையை விரித்து, தலையணையை ஒழுங்குபடுத்தினாலே படுக்கையறை பாதி சுத்தம் ஆனது போலத் தெரியும். இது மனதிற்கு ஒரு சுறுசுறுப்பைத் தருவதோடு, நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
ஜாக்கிரதை! போனில் இந்த 4 விஷயங்கள் இருந்தால் போலீஸ் உங்கள் வீடு தேடி வரும்!
Home organizing tips

நறுமணம்!

வீடு பார்ப்பதற்கு அழகாக இருந்தால் மட்டும் போதாது, அது நறுமணமாகவும் இருக்க வேண்டும். குப்பைத் தொட்டி நிரம்பும் வரை காத்திருக்காமல் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். ஃப்ரிட்ஜ் மற்றும் சிங்க்கில் இருந்து துர்நாற்றம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் நறுமண மெழுகுவர்த்திகள் அல்லது ஊதுவத்திகளைப் பயன்படுத்துவது விருந்தினர்களுக்கு ஒரு நல்ல உணர்வைத் தரும்.

காகிதக் குப்பைகள்!

வீட்டுக்கு வரும் தபால்கள், ரசீதுகள் மற்றும் துண்டுச் சீட்டுகளை மேஜை மீது போட்டு வைப்பது வீட்டை அலங்கோலமாகக் காட்டும். தேவையான காகிதங்களை ஒரு கோப்பில் வைப்பதும், தேவையற்றதை உடனே கிழித்துப் போடுவதும் அவசியம். அதேபோல, ஒரு பொருளை எடுத்தால் அதை மீண்டும் அதே இடத்தில் வைப்பதுதான் ஒழுங்கு. அலமாரியில் துணிகளைத் திணித்து வைப்பதை விட, தேவையற்ற பொருட்களை அவ்வப்போது அப்புறப்படுத்துவது வீட்டை விசாலமாகக் காட்டும்.

மேலும், துவைத்த துணிகளை மடிக்காமல் சோபாவிலோ அல்லது நாற்காலியிலோ மலைபோல் குவித்து வைப்பது பல வீடுகளில் நடக்கும் கதை. இது பார்ப்பதற்கு அசிங்கமாக இருப்பது மட்டுமல்லாமல், துணிகளில் சுருக்கத்தை உண்டாக்கும். துணி காய்ந்தவுடனே அதை மடித்து அலமாரியில் வைப்பதே சிறந்தது.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: கனவு கண்ட சிறிய விதை!
Home organizing tips

இன்றே இந்தச் சிறிய மாற்றங்களைத் தொடங்கிப் பாருங்கள், உங்கள் வீட்டில் பெரிய மாற்றம் தெரியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com