தெருநாய்களிடம் சிக்கிக்கொண்டால் தப்பிப்பது எப்படி? உயிர் காக்கும் வழிகள்!

 caught by stray dogs
caught by stray dogsAI Image
Published on

இன்றைய சூழலில், வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டுப் பத்திரமாகத் திரும்பி வருவதற்குள் நமக்குப் பல சவால்கள் காத்திருக்கின்றன. அதில் மிக முக்கியமான ஒன்று, 'தெருநாய்களின் தொல்லை'. முன்பு கிராமங்களில் மட்டுமே இருந்த இந்த அச்சம், இன்று பெருநகரங்கள் முதல் சிறிய சந்து பொந்துகள் வரை பரவியுள்ளது. 

தனியாகச் செல்லும் பெண்கள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், ஏன் நடைப்பயிற்சிக்குச் செல்லும் முதியவர்கள் கூட நாய்களின் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழக்கும் செய்திகள் நம் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றன. நாயைக் கண்டால் பயம் வருவது இயற்கைதான். ஆனால், அந்தப் பயத்தின் காரணமாக நாம் செய்யும் சில அவசரச் செயல்களே, விபரீதத்தை விலை கொடுத்து வாங்குவது போலாகிவிடுகிறது. 

ஓடுவது தற்கொலைக்குச் சமம்!

நாய் நம்மை நோக்கி குலைத்துக்கொண்டு வரும்போது, நம் மூளை நமக்கு இடும் முதல் கட்டளை "ஓடு" என்பதுதான். ஆனால், நிபுணர்கள் சொல்வது என்னவென்றால், "தயவுசெய்து ஓடாதீர்கள்". விலங்குகளின் உளவியல் படி, எதிரில் இருப்பவர் பயந்து ஓடினால், நாய்க்குள் இருக்கும் 'வேட்டை குணம்' தூண்டப்படுகிறது. உங்களை ஒரு இரையாக நினைத்து அது இன்னும் வேகமாகத் துரத்த ஆரம்பிக்கும்.

அதற்குப் பதிலாக, நாய் குலைக்கும்போது அப்படியே சிலையாய் உறைந்து நில்லுங்கள். கைகளை அசைக்காமல், உடலை இறுக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். மிக முக்கியமாக, நாயின் கண்களை நேருக்கு நேர் பார்க்காதீர்கள். அது நாய்க்கு சவால் விடுவது போன்ற உணர்வைத் தரும். நீங்கள் பயப்படவில்லை, அதே சமயம் அதைத் தாக்க வரவில்லை என்பதை நாய் உணர்ந்தால், தானாகவே விலகிச் சென்றுவிடும்.

இருசக்கர வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!

பல விபத்துகள் நாய் கடிப்பதை விட, நாய் துரத்தும்போது பைக்கை வேகமாக ஓட்டி கீழே விழுவதால்தான் நடக்கின்றன. பைக்கில் செல்லும்போது நாய் துரத்தினால், ஆக்ஸிலரேட்டரை முறுக்காதீர்கள். உடனடியாக வண்டியை ஓரமாக நிறுத்திவிடுங்கள். நாய் துரத்துவதற்குக் காரணமே, சக்கரங்களின் இயக்கம் மற்றும் வண்டியின் சத்தம் தான். வண்டி நின்றவுடன், சுவாரஸ்யம் இழந்த நாய் அங்கிருந்து சென்றுவிடும். அவசரப்பட்டு வேகத்தை கூட்டினால், அது விபத்தில் தான் முடியும்.

நடைப்பயிற்சிக்குச் செல்பவர்கள் கையில் எப்போதும் ஒரு ஸ்ட்ராங்கான குச்சி அல்லது குடையை வைத்திருப்பது அவசியம். நாய் அருகில் வரும்போது, குச்சியால் தரையில் தட்டி சத்தம் எழுப்பலாம் அல்லது குடையை விரித்து அதைப் பயமுறுத்தலாம். இது ஒரு தடுப்புச் சுவராகச் செயல்படும். கையில் பிஸ்கட் அல்லது வேறு உணவுப் பொருட்கள் இருந்தால், அதைத் தூக்கி தூரமாக எறிந்துவிட்டு, நாய் கவனத்தைத் திசைதிருப்பலாம்.

இதையும் படியுங்கள்:
அதிக நேரம் தூக்கத்தை விரும்பும் 5 வகை நாய் இனங்கள்!
 caught by stray dogs

நாய் கடித்தால் மட்டும்தான் ஆபத்து என்று நினைக்காதீர்கள். தடுப்பூசி போடப்படாத தெருநாய் உங்கள் மீது கீறினாலோ அல்லது காயங்கள் உள்ள இடத்தில் நக்கினாலோ கூட Rabies என்னும் வெறிநோய் பரவ வாய்ப்புள்ளது. இது உயிருக்கே உலை வைக்கும் கொடிய நோய். எனவே, சிறிய கீறல் தானே என்று அலட்சியமாக இருக்காமல், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்வதே புத்திசாலித்தனம்.

நாய், மனிதர்களோடு ஒன்றிணைந்து வாழும் ஒரு விலங்கு. சில நேரங்களில் பசி, பயம் அல்லது தன் எல்லையைப் பாதுகாக்கும் உணர்வால் அது ஆக்ரோஷமாக மாறுகிறது. அந்தச் சமயத்தில் நாம் காட்டும் பதற்றம் தான் நிலைமையை மோசமாக்குகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com