இந்த குணாதிசயங்கள் உங்களிடம் இருந்தால் உங்களுக்கு IQ லெவல் அதிகம்னு அர்த்தம்!

IQ Level
IQ Level
Published on

IQ அதிகமுள்ளவர்கள் பிறரால் மிகவும் வியந்து பார்க்கப்படுவார்கள். இந்தப் பதிவில் ஐ.க்யூ. லெவல் அதிக உள்ளவர்களுடைய குணாதிசயங்கள் பற்றி பார்ப்போம்.

1. அனுதாப குணம்: இவர்கள் பிறருடைய தேவைகள், உணர்வுகளை நன்றாகப் புரிந்து கொண்டு அவர்கள் மீது அனுதாபம் காட்டுவார்கள். மனிதர்கள் மீது மிகுந்த அக்கறை உள்ளவர்கள் இவர்கள்.

2. தனிமை விரும்பிகள்: இவர்கள் பொதுவாக தனிமையை விரும்பக் கூடியவர்கள். தனியாக இருக்கும்போது தங்களுடைய ஆற்றல் அதிகரிப்பதாக உணர்வார்கள். எனவே. அதிக நேரம் தனிமையில் இருப்பார்கள். இவர்கள் தனக்குத்தானே அடிக்கடி பேசிக்கொள்வதால் ஞாபக சக்தி அதிகரிக்கிறது.

3. பன்மொழி வித்தகர்: நிறைய மொழிகள் தெரிந்திருக்கும். பிறருடன் எளிதாக தொடர்பு கொள்வதற்கு பல மொழிகள் தெரிந்திருப்பது மிகவும் அவசியம்.‌

4. தன் உணர்வு மிக்கவர்கள்: இவர்கள் தன்னைப் பற்றி மிகுந்த கவனம் எடுத்துக் கொள்வார்கள். சுயமரியாதை அதிகமாக இருக்கும். அதேபோல தன்னுடைய விருப்பங்கள் மற்றும் உடல், மன ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்வார்கள்.

5. அறிவதில் ஆர்வம்: புதிய விஷயங்களை எப்போதும் தேடித்தேடி அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். எவ்வளவு அறிந்து கொண்டாலும் இன்னும் இன்னும் நிறைய அறிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள்.

6. கவனிக்கும் தன்மை: இவர்கள் எதையும் உற்றுக் கவனிக்கும் தன்மை படைத்தவர்கள். சுற்றிலும் நடப்பவற்றை கவனிப்பது, பிறர் பேசுவதையும் உற்றுக் கவனிப்பார்கள்.

7. படைப்பாற்றல்: ஐக்யூ லெவல் அதிகம் உள்ளவர்களுக்கு படைப்பாற்றல் அதிகமாக இருக்கும். இவர்கள் மூளையின் எதிர்ப்புறத்தால் கண்ட்ரோல் செய்யப்படுவதால் இவர்கள் அதிகமாகப் படைப்பாற்றலில் ஈடுபடுவார்கள். தங்களுடைய இலக்குகளை அடைய தீவிரமாக உழைக்கும் அதே நேரத்தில் எழுதுதல், வரைதல் போன்றவற்றிலும் ஈடுபடுவார்கள்.

8. கவலைப்படுதல்: அதிக புத்திசாலியாக இருப்பவர்கள் குடும்பம், நட்பு, பணி குறித்து கவலைப்படுவார்கள். இது எதிர்மறை குணம் அல்ல. கவலைப்படுவதன் மூலம் தங்கள் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வுகளை கண்டுபிடிக்கிறார்கள். மேலும், உறவுகளை, நட்புகளையும் சிறந்த முறையில் கையாள்வார்கள்.

9. குழப்பமான சுற்றுப்புறம்: இவர்களுடைய சுற்றுப்புறம் எப்போதும் குழப்பம் மிகுந்ததாக இருக்கும். பொருட்களை கலைத்துப் போட்டிருப்பார்கள். அவற்றை எடுத்து வைப்பதில் அவ்வளவாக ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

10. பணிவு: அதிகமான புத்திசாலிகள் எப்போதும் பணிவாகத்தான் இருப்பார்கள்.  வாழ்க்கையில் நிறைய சாதித்தாலும் தன்னடக்கத்துடன் இருப்பார்கள்.

11. வாசிப்பு: அதிகமாக புத்தகங்களை வாசிப்பார்கள். புத்தகங்களிலிருந்து நிறைய கற்றுக்கொண்டே இருப்பதால் அறிவுத்திறனும் அதிகரிக்கிறது.

12. உணர்ச்சி நுண்ணறிவு: தங்களுடைய உணர்வுகளை மிக அழகாக கையாளத் தெரிந்தவர்கள். இவர்கள் கோபம், ஆத்திரம். அழுகை போன்றவற்றை மிகச் சரியாக கையாள்வார்கள். தன்னுடைய உணர்வுகளை சட்டென வெளிப்படுத்த மாட்டார்கள்.

13. துணிச்சல்: சவால்களை எதிர்கொள்ளும் திறன்மிக்கவர்கள். எதற்கும் அஞ்சி பின்வாங்க மாட்டார்கள். தங்களுடைய காரியத்தில் உறுதியாக இருந்து தைரியமாக சவால்களை எதிர்கொள்கிறார்கள். புதிய சூழ்நிலையில் தங்களை மிக எளிதாக பொறுத்திக் கொள்வார்கள்.

14. சிந்தனை: வித்தியாசமாக சிந்திப்பார்கள். எப்போதும் ஒரே கோணத்தில் சிந்திக்காமல், ‘அவுட் ஆப் தி பாக்ஸ்’ என்கிற ரீதியில் மிகவும் ஸ்மார்ட் ஆக சிந்திக்கும் திறன் பெற்றவர்கள். வேடிக்கைகள் மற்றும் கேளிக்கைகளை விரும்புபவர்களாக இருப்பார்கள்.

15. இரவில் சுறுசுறுப்பு: இவர்கள் இரவு ஆந்தைகளைப் போல இரவில் கண் விழித்து வேலை செய்வதை மிகவும் விரும்புவார்கள். பகலில் விட இரவில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். மேலும் இவர்கள் குடும்பத்தில் மூத்த பிள்ளைகளாக இருப்பார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com