செல்லப்பிராணிகளும், வாஸ்து சாஸ்திரமும்: வீட்டில் மகிழ்ச்சி பொங்க என்ன வளர்க்கலாம்?

Pet Animal
Pet Animal
கிரி கணபதி

வணக்கம், என் பெயர் கிரி கணபதி. என்னைப் பற்றி அறிய ஆர்வம் காட்டியமைக்கு நன்றி! கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக Content Creation துறையில் இருக்கிறேன். Writing, Video Content, Podcast போன்றவற்றில் அனுபவம் உண்டு. உள்ளடக்க ஆராய்ச்சி மற்றும் AI கருவிகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். ஆரோக்கியம், மோட்டிவேஷன், டெக்னாலஜி, சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். டிஜிட்டல் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நான், நிலையான வசீகரிக்கும் உள்ளடக்கங்கள் மூலமாக வாசகர்களையும், பார்வையாளர்களையும் கவர முடியும் என முழுமையாக நம்புகிறேன்.

Updated on

இன்றைய அவசர உலகில், மன அமைதி தேடி பல வழிகளை நாம் நாடுகிறோம். அதில் ஒன்று செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்ப்பது. நாய், பூனை, பறவை, மீன் என பல உயிரினங்களை தங்கள் வீடுகளில் ஒரு உறுப்பினராகவே கருதி அன்போடு கவனித்து வளர்க்கும் பழக்கம் பலரிடம் உண்டு. செல்லப்பிராணிகள் மன அழுத்தத்தை குறைத்து, சந்தோஷத்தை தருவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், சிலரோ வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில செல்லப்பிராணிகளை வளர்ப்பதன் மூலம் வீட்டில் அதிர்ஷ்டம் பெருகும், செல்வம் செழிக்கும் என்று நம்புகிறார்கள். அப்படி வாஸ்து சாஸ்திரப்படி எந்தெந்த செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்த்தால் நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

பொதுவாக பூனைகள் குறுக்கே போனால் அபசகுனம் என்று சொல்வதுண்டு. ஆனால் வாஸ்து சாஸ்திரமோ, பூனைகள் அதிர்ஷ்டத்தின் சின்னம் என்கிறது. குறிப்பாக, தங்க நிற பூனைகளை வீட்டில் வளர்ப்பது மிகவும் மங்களகரமானது என்றும், அதனால் வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மதுரை மீனாட்சி அம்மன் தோளில் கிளி இருப்பது ஏன் தெரியுமா?
Pet Animal

அதேபோல, கிளி வளர்ப்பது வீட்டில் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கச் செய்யும் என்கிறார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவ கிளி வளர்ப்பு உதவும். கிளியை வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைப்பது நல்லது. கிளி சந்தோஷமாக இருந்தால் வீட்டில் செழிப்பு அதிகரிக்கும் என்றும், கிளி மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என்றும் வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. எனவே, கிளியை அன்போடு கவனித்துக்கொள்வது முக்கியம்.

மீன் தொட்டி வீட்டின் அழகை கூட்டுவதோடு மட்டுமல்லாமல், வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தரக்கூடியது. வாஸ்து மீன் என்று கடைகளில் தனியாகவே மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை வீட்டில் வளர்ப்பது நல்லது.

பசுவுக்கு இந்து மதத்தில் உயர்ந்த இடம் உண்டு. பசுவை கோமாதா என்று தெய்வமாகவே வழிபடுகிறோம். வீட்டில் பசுவை வளர்ப்பது தெய்வங்களின் ஆசீர்வாதத்தை பெற்றுத்தரும் என்பது நம்பிக்கை. பசுவை நேரடியாக வளர்க்க முடியாதவர்கள், பசுவுக்கு உணவளிப்பதன் மூலமாவது புண்ணியம் பெறலாம்.

இதையும் படியுங்கள்:
செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!
Pet Animal

ஆக, செல்லப்பிராணிகள் மன அமைதிக்கு மட்டுமல்ல, வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும் பெருகச் செய்யக்கூடியவை. ஆனால், எந்த செல்லப்பிராணியாக இருந்தாலும், அவற்றை அன்போடு கவனித்துக்கொள்வதும், அவை சந்தோஷமாக இருப்பதை உறுதி செய்வதும் மிக முக்கியம். 

வாஸ்து சாஸ்திரம் என்பது நம்பிக்கையின் அடிப்படையிலானது. எது எப்படியோ, செல்லப்பிராணிகள் நம் வாழ்வில் ஒருவிதமான சந்தோஷத்தையும், நிறைவையும் தருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

logo
Kalki Online
kalkionline.com