அமைதியானச் சூழலில் பணியாற்ற விருப்பமா? இதோ உங்களுக்கான தெளிவான 6 பாதைகள்!

Peaceful works
Peaceful works
Published on

வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் இன்றைய உலகில், பலரும் அமைதியும் மன நிம்மதியும் தரக்கூடிய பணிகளில் அமரவே விரும்புகின்றனர். அப்படி அமைதியான சூழலில் வளர்ந்தவர்களுக்கோ அல்லது அமைதியை விரும்புவோருக்கோ பல்வேறு துறைகளில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அப்படிப்பட்ட நபர்களுக்கான சில சிறந்த வழிகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

1) ரிமோட் மற்றும் ஃப்ரீலான்ஸ் (Freelance) வேலை:

தனிமையையும் அமைதியையும் விரும்புவோர்க்கு ஏற்றது ஃப்ரீலான்ஸ் வேலை. எழுத்து, கிராஃபிக் வடிவமைப்பு, மென்பொருள் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகியவற்றில் உள்ள பணிகள் தனிநபர்கள் தங்கள் வீடுகளில் அல்லது அவர்கள் விரும்பும் அமைதியான இடத்தில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கின்றன. இந்த வேலைகள் பெரும்பாலும் நேரம் மற்றும் சுற்றுச்சூழலின் அடிப்படையில் சில சலுகைகளையும் வழங்குகின்றன. இவை சிந்தனையாளர்களுக்கும் அமைதியை மதிக்கிறவர்களுக்கும் ஏற்றதாக அமைகின்றன.

2) இயற்கை மற்றும் வனவிலங்கு வாழ்க்கை:

வெளிப்புறங்களை விரும்புவோர் மற்றும் குறைந்தபட்ச மனித தொடர்புகளை விரும்புவோருக்கு, இயற்கை மற்றும் வன விலங்குகள் ஆராய்ச்சி. சார்ந்த தொழில்கள் நம்பமுடியாத அளவிற்கு அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும். பூங்கா ரேஞ்சர்கள், வனவிலங்கு உயிரியலாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் போன்ற வேலைகள் அமைதியான இயற்கை அமைப்புகளில் பணிபுரியும் அனுபவத்தைத் தரும். இவை அமைதியான பணிச்சூழலை வழங்குவதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குப் பங்களித்த திருப்தியையும் பெற்று தரும். .

3) நூலகம் மற்றும் காப்பகப்(Archival) பணிகள்:

நூலகங்களும், காப்பகங்களும்தான் அனைவராலும் அறியப்பட்ட அமைதியான இடங்கள். மௌனத்தையும் ஒழுங்கையும் நேசிக்கும் நபர்களுக்கு நூலகம், காப்பக அறிவியல் மற்றும் அருங்காட்சியகக் கண்காணிப்புத் தொழில்கள் ஏற்றவை.

4) சுகாதாரத் தொழில்கள்:

தொழில்சார்(occupational) சிகிச்சை, மசாஜ் சிகிச்சை மற்றும் குத்தூசி(acupuncture) மருத்துவம் போன்ற சில சுகாதாரத் தொழில்கள் அமைதியான மற்றும் அதிக கவனம் செலுத்த வேண்டிய பணிகள். இந்த வேலைகளில் நோயாளிகளுடன் தொடர்புகொண்டு அவர்களின் வலிகளைப் போக்குவதே உங்களின் பணி.

இதையும் படியுங்கள்:
9AM to 9PM 6 days a week - சீனாவின் 996 வேலை நேர முறை!
Peaceful works

5) கிரியேட்டிவ் ஆர்ட்ஸ்:

தனிமையை விரும்புவோருக்கு படைப்புக் கலைகள் பல வாய்ப்புகளை வழங்குகின்றன. எழுத்து, ஓவியம், சிற்பம் மற்றும் இசை அமைப்பில் உள்ள தொழில்கள் தனிநபர்களை அமைதியான ஸ்டுடியோக்கள் அல்லது வீட்டு அலுவலகங்களில் முழு கவனத்தோடு வேலை செய்ய அனுமதிக்கின்றன. இந்தத் தொழில்கள் மூலம் உங்கள் ஏதார்த்த கலையை எந்த ஒரு கவனச்சிதறல்கள் இன்றி ஓர் அமைதியான சூழ்நிலையில் ஆக்கப்பூர்வமான படைப்புகளை உங்களால் வெளிக்காட்ட முடியும்.

6) மற்றும் கல்வித்துறை:

கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையில் உள்ள தொழில்கள் மிகவும் பலனளிக்கும். ஆராய்ச்சி விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் மற்றும் கல்வி எழுத்தாளர்கள் போன்ற பதவிகள் பெரும்பாலும் அமைதியான ஆய்வகங்கள், நூலகங்கள் அல்லது அதனுடன் சேர்ந்த அலுவலகங்களை சார்ந்துதான் இருக்கும். இந்த வேலைகளுக்கு ஆழ்ந்த சிந்தனை மற்றும் புத்தம் புதிய யோசனைகள்தான் அதிகம் தேவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com