உளவியல் படி, கல் நெஞ்சம் கொண்டவர்களின் 7 குணங்கள்!

Cold Heart person
Cold Heart person
Published on

உலகத்துல சிலபேரை நாம "கல் நெஞ்சம் கொண்டவங்க"னு சொல்வோம். அவங்ககிட்ட ஒரு உணர்ச்சியையும் பார்க்க முடியாது. சிரிப்பு, கோபம், வருத்தம்னு எதுவுமே அவங்க முகத்துல இருக்காது. மத்தவங்க கஷ்டப்படும்போது கூட, அவங்களுக்கு இரக்கம் வராது. இந்த மாதிரி ஆளுங்க ரொம்பவே ஆபத்தானவங்க. அவங்க மேலோட்டமா பார்க்கும்போது, சாதாரணமா தெரியலாம். ஆனா, அவங்களுக்கு சில ரகசியமான குணங்கள் இருக்கும்னு உளவியல் நிபுணர்கள் சொல்றாங்க. 

1. உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள மாட்டாங்க. மத்தவங்க சிரிக்கிறத, அழறத பார்த்து, அவங்க ஏன் அப்படி பண்றாங்கன்னு அவங்களுக்கு புரியாது. அவங்க கண்ணுக்கு இது ஒரு விசித்திரமான செயல் மாதிரி தெரியும். உணர்ச்சிப்பூர்வமான ஒரு சூழல் வந்தா, அவங்க அதுல இருந்து தப்பிக்க முயற்சி செய்வாங்க.

2. எப்பவுமே எல்லாமே எனக்கு தான் முக்கியம்னு நினைப்பாங்க. மத்தவங்க உணர்வுகளுக்கோ, தேவைகளுக்கோ அவங்க மதிப்பளிக்க மாட்டாங்க. அவங்களோட ஆசைகள், தேவைகள் தான் முக்கியம்னு நினைப்பாங்க. மத்தவங்களை ஒரு கருவியா பயன்படுத்தவும் தயங்க மாட்டாங்க.

3. தவறு செஞ்சாலும் ஒத்துக்க மாட்டாங்க. தான் செஞ்சது தான் சரி, மத்தவங்க செஞ்சது தான் தப்புன்னு நினைப்பாங்க. ஒருவேளை அவங்க தப்பு செஞ்சா கூட, அதை மறைக்க, மத்தவங்க மேல பழி போடுவாங்க. மன்னிப்பு கேட்கிறதுங்கறது அவங்க அகராதியில இருக்காது.

4. பொய்யும், ஏமாற்றுதலும் அவங்க சகஜமா செய்வாங்க. தன்னோட தேவைக்காக, அவங்க எந்தவித குற்ற உணர்வும் இல்லாம பொய் சொல்லுவாங்க. மத்தவங்களை ஏமாத்தி அவங்க காரியத்தை சாதிச்சுப்பாங்க. அவங்களோட பேச்சிலயும், நடத்தையிலயும் உண்மை இருக்காது.

இதையும் படியுங்கள்:
புகழ் அதிகாரத்தை ஒரு போதும் நம்பாதீர்கள்!
Cold Heart person

5. அதிகாரத்தை விரும்புவாங்க. மத்தவங்களை கட்டுப்படுத்தணும், அவங்க சொல்றதுதான் கேட்கணும்னு விரும்புவாங்க. இது அவங்களுக்கு ஒரு திருப்தியை கொடுக்கும். அவங்க அதிகாரத்தை வெச்சு மத்தவங்களை அடிமையா நடத்தவும் தயங்க மாட்டாங்க.

6. எப்பவுமே வெற்றிதான் முக்கியம்னு நினைப்பாங்க. ஒரு விஷயத்துல வெற்றி பெற, எந்த எல்லைக்கும் போவாங்க. நேர்மையா இருக்கணுமா, இல்லைனா பொய் சொல்லணுமானு யோசிக்க மாட்டாங்க. வெற்றிதான் அவங்களுக்கு முக்கியம். மத்தவங்களை தோற்கடிச்சு வெற்றி பெறவும் தயங்க மாட்டாங்க.

7. ஆரம்பத்துல நல்லவங்க மாதிரி நடிப்பாங்க. அவங்க சுலபமா மத்தவங்க மனசுல இடம் பிடிப்பாங்க. ஆனா, அவங்களோட சுயரூபம் மெதுவா வெளியே வரும். அப்போ அவங்க உண்மையான முகத்தை பார்த்தா, நமக்கு அதிர்ச்சியா இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com