தவறவிட்ட தருணங்களை பற்றி வருந்துகிறீர்களா? இதோ உங்களுக்கான மறுவாய்ப்பு!

children...
children...Image credit - pixabay
Published on

ற்சாகம் மற்றும் மகிழ்ச்சிக்கு வயது வரம்பே கிடையாது. நாம் நினைத்தால் நம் மனதிற்கு பிடித்த விஷயத்தை என்றைக்கு வேண்டுமானாலும் நிகழ்த்தி காட்டலாம். இருந்தாலும் அந்தந்த வயதில் சில விஷயங்களை அனுபவித்தால்தான் சுவாரசியம் இருக்கும் என்பது அனைவராலும் கூறப்படும் ஒரு பொது அறிவுரை. வாய்ப்பு இருந்தும் பல பேர் அந்த சூழ்நிலையை அனுபவிக்காமல் காலத்தின் கட்டாயத்தின் பேரில் அந்த வயதை கடந்து விடுவார்கள். அப்படி நம் வாழ்க்கையில் காணாமல் அல்லது கை நழுவி போன விஷயங்களை இப்போது நாம் வாழும் சூழ்நிலைக்கேற்றவாறு எப்படி அனுபவிக்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

விளையாட்டு மற்றும் கற்பனையின் வயது

குழந்தைப் பருவம் என்பது எல்லையற்ற ஆற்றல் மற்றும் படைப்பாற்றல்கள் தொடங்கும் காலம். இதில் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது, இதனால் சமூக திறன்கள், சிக்கல் தீர்க்கும் திறன்கள் மேம்படுகின்றன. மற்றும் உடல் வளர்ச்சியை வளர்க்கிறது. கற்பனை வளமானது குழந்தைகளை எல்லையில்லா விஷயங்களை கற்க அனுமதிக்கிறது.

இப்படிப்பட்ட விளையாட்டுத்தனமான செயல்பாடுகளை நீங்கள் அனுபவிக்க தவறியிருந்தால், ஓவியம், எழுதுதல் அல்லது இசைக்கருவிகளை வாசிப்பது போன்ற படைப்பாற்றலைத் தூண்டும் பொழுதுபோக்குகளில் ஈடுபட துவங்குங்கள். இந்த நடவடிக்கைகள் குழந்தைப் பருவத்தின் மகிழ்ச்சியையும் அதிசயத்தையும் மீண்டும் உங்களுக்கு கொண்டு வரலாம்.

ஆய்வு மற்றும் ஆர்வத்தின் வயது

பருவ வயது என்பது ஆராய்தல் மற்றும் உங்களுக்கு தோன்றும் உணர்வுகளுக்கு ஏற்ப நீங்கள் வாழ்க்கையை பின் தொடர கூடிய வயது. இதில் புதிய விஷயங்களை முயற்சிக்கவும், நட்பை உருவாக்கவும், நீங்கள் யார் என்ற அடையாளத்தை உருவாக்குவதற்கான நேரம் இது.

இந்த அனுபவங்களை நீங்கள் தவறவிட்டதாக உணர்ந்தால் ஒருபோதும் தாமதம் இல்லை. புதிய ஆர்வங்களை ஆராய்வதற்கோ அல்லது உங்கள் ஆர்வத்துடன் ஒத்துப்போகும் சமுதாய குழுக்களோடு சேர பாருங்கள். தன்னார்வத் தொண்டு அல்லது சமூக ஈடுபாட்டோடு இருக்கும் பட்சத்தில், அந்த வயதில் நீங்கள் இழக்க நேரிட்டதை மீண்டும் அனுபவிக்க வாய்ப்பு வரலாம்.

சுதந்திரம் மற்றும் சாகசத்தின் வயது

இளமை பருவம் பெரும்பாலும் சுதந்திரம் மற்றும் சாகசம் செய்ய வாய்ப்பை கொடுக்கிறது. பயணம் செய்வது, உயர்கல்வியைத் தொடர்வது, தொழிலைக் மேம்படுத்துவது ஆகியவை பொதுவாக இந்த வயதில் நடப்பவை.

இந்த விஷயங்களை நீங்கள் தவறவிட்டதாக நினைத்தால், புதிய இடங்கள் மற்றும் கலாச்சாரங்களை ஆராயுங்கள். அதற்கு முதலில் உள்ளூர் பயணங்களோடு திட்டமிடுங்கள். மேலும், தொடர் கல்வி படிப்புகள் அல்லது ஆன்லைன் வகுப்புகளால் நீங்கள் புதிய திறன்களையும் அறிவையும் பெறலாம். இது எதையோ சாதித்த உணர்வை மீண்டும் பெற உதவும்.

நிலைத்தன்மை மற்றும் நம்முடைய பங்களிப்பின் வயது

நடுத்தர வயதுப் பருவம் நிலைத்தன்மை மற்றும் பங்களிப்புக்கான நேரம். ஒரு குடும்பத்தை நிர்வகித்தல், ஒரு தொழிலில் முன்னேறுதல் மற்றும் சமூகத்திற்கு உங்களாலான பங்களிப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாகும்.

இந்த அனுபவங்களை நீங்கள் தவறவிட்டதாக உணர்ந்தால், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் வலுவான உறவுகளை இனி இருக்க போகும் காலம் வரை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள். காரணம் பிறருக்கான வழிகாட்டுதல் மூலமும் நீங்கள் இழந்த ஒன்றை அவர்கள் மூலம் காண இயலும்.

பிரதிபலிப்பு மற்றும் ஞானத்தின் வயது

இளமைப் பருவத்தின் பிற்பகுதி பிரதிபலிப்பு மற்றும் ஞானத்தின் காலம். உங்கள் உழைப்பின் பலன் மற்றும் உங்கள் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான நேரம் இது.

ஆனால் வாழ்க்கையின் பல காரணங்களால் நீங்கள் இந்த அம்சங்களை தவறவிட்டதாக உணர்ந்தால், சில நினைவுக் குறிப்புகளை எழுதுவதலாம்; அல்லது உங்கள் அனுபவங்களை பிறரிடம் சொல்லலாம். இப்படி உங்கள் அறிவு மற்றும் அனுபவங்களைப் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், நீங்கள் அவர்களுக்கு முன்னிலை படுத்தி காட்டிய தடைகளை தாண்டி அவர்கள் வெற்றி பெற்று மகிழ்ச்சி அடையும் போது, ஏதோ நீங்களே வெற்றி பெற்றது போல் உங்களை உணரவைக்கும்.

இதையும் படியுங்கள்:
அரிஸ்டாட்டில் எனும் நடமாடும் பல்கலைக்கழகம் பகிர்ந்த பொன்மொழிகள்!
children...

இந்த வாய்ப்பை பயன்படுத்த நம்மிடம் இருக்க வேண்டிய விஷயங்கள்:

ஆர்வமாக இருங்கள்: தொடர்ந்து புதிய அனுபவங்களையும் அறிவையும் தேடுங்கள்.

இணைப்புகளை உருவாக்குங்கள்: எல்லா வயதினருடன் உறவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

பொழுதுபோக்குகளில் ஈடுபடுங்கள்: மகிழ்ச்சியையும் திருப்தியையும் தரும் செயல்களைத் தொடருங்கள்.

ஆக, வாழ்க்கை ஒரு தொடர்ச்சியான பயணம். அதில் உள்ள ஒவ்வொரு கணமும் புதிய அனுபவங்களையும் மறு வாய்ப்புகளையும் நமக்கு வழங்குகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com