AI உடன் இப்படி இணைந்து செயல்பட்டால் 100% வெற்றி உறுதி!

Success Tips
Success Tips
Published on

இன்றைய வேகமான உலகில், தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் நாம், சாதாரண வளர்ச்சியைத் தாண்டி 100 மடங்கு வளர்ச்சியை அடைய வேண்டுமானால், நம்முடைய சிந்தனை முறையிலும் வேலை செய்யும் விதத்திலும் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். செயற்கை நுண்ணறிவு என்பது மனித இனத்திற்கு ஒரு சவாலாகத் தோன்றினாலும், அதைச் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கு அது ஒரு மாபெரும் வரப்பிரசாதமாகும்.

AIன் சிறப்பு

AI-ஐ சரியாகப் பயன்படுத்தாதவர்களை விட, அதைப் பயன்படுத்தத் தெரிந்த ஒரு மனிதன் 100 பேரின் வேலையைத் திறம்படச் செய்து முடிக்க முடியும். இந்தத் தொழில்நுட்பப் புரட்சியில் நாம் பின்தங்கிவிடாமல் இருக்க, மனிதர்களுக்கே உரிய சில தனித்துவமான பண்புகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இமாலய  வளர்ச்சிக்கான நான்கு பண்புகள்

தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேறினாலும், இயந்திரங்களால் ஈடு செய்ய முடியாத நான்கு முக்கியமான மனிதப் பண்புகளை நாம் மேம்படுத்த வேண்டும்:

1. உணர்ச்சிசார் அறிவு (Emotional Intelligence): இயந்திரங்களால் தகவல்களைச் சேகரிக்க முடியுமே தவிர, உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாது. ஒரு சூழலில் எப்போது பேச வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும், மற்றவர்களின் மனநிலையை அறிந்து எப்படிச் செயல்பட வேண்டும் என்பது போன்ற திறன்கள் மனிதர்களுக்கே உரியவை. சமூகத் தொடர்புகளைப் பலப்படுத்துவதும், மற்றவர்களுடன் இணக்கமாகச் செயல்படுவதும் எதிர்காலப் பொருளாதாரத்தில் மிக முக்கியமான திறனாகக் கருதப்படும்.

2. ரசனை மற்றும் தரம்: AI ஒரு நொடியில் ஆயிரம் கவிதைகளை எழுதலாம் அல்லது நூறு படங்களை வரையலாம். ஆனால், அதில் எது சிறந்தது, எது மக்களின் மனதைத் தொடும் என்று தீர்மானிக்கும் 'ரசனை' மனிதர்களிடம் மட்டுமே உள்ளது. ஒரு படைப்பின் ஆன்மாவைத் தீர்மானிப்பதும், அதில் உள்ள குறைகளை நீக்கி அதை முழுமையாக்குவதும் ஒரு சிறந்த ரசனை கொண்ட மனிதனால் மட்டுமே சாத்தியம்.

3. ஆழ்ந்த அறிவு/ சரியான Inputs:

AI-யிடம் இருந்து சிறந்த முடிவுகளைப் பெற, அதற்குச் சரியான கேள்விகளைக் கேட்கத் தெரிய வேண்டும். ஒரு துறையில் உங்களுக்கு ஆழமான அறிவு  இருந்தால் மட்டுமே, உங்களால் சரியான 'புராம்ப்ட்களை' (Prompts) வழங்க முடியும். ஏனோ தானோ என்று கேள்விகளைக் கேட்டால் குப்பையான பதில்களே கிடைக்கும்.

4. மாற்றத்திற்குத் தயாராதல்: முந்தைய தலைமுறையினரால் ஒரே வேலையில் 30 அல்லது 40 ஆண்டுகள் நீடித்திருக்க முடிந்தது. ஆனால், இனிவரும் காலங்களில் அது சாத்தியமில்லை. புதிய தொழில்நுட்பங்கள் வரும்போது பழைய முறைகளைத் துணிச்சலுடன் கைவிட்டு, புதியவற்றைக் கற்கத் தயாராக இருக்க வேண்டும். தேக்கநிலையைத் தவிர்த்து, ஓடும் நதிபோல நம்மைத் தகவமைத்துக் கொள்வதே வெற்றியின் ரகசியம்.

இதையும் படியுங்கள்:
'பின்னோக்கி நடை' (Backward walking) யின் ரகசியங்கள்!
Success Tips

நடைமுறைப்படுத்த வேண்டிய மாற்றங்கள்!

  • தினசரி பயிற்சி: தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது புதிய AI கருவிகளுடன் நேரத்தைச் செலவிடுங்கள். அதனிடம் உரையாடுவது, கேள்விகள் கேட்பது மற்றும் புதிய விஷயங்களை உருவாக்க முயற்சிப்பது உங்களை முன்னிலையில் வைக்கும்.

  • கடினமான பாதையைத் தேர்ந்தெடுங்கள்: எளிதான இலக்குகளை நோக்கி அனைவரும் ஓடுவார்கள், அங்கே போட்டி அதிகமாக இருக்கும். ஆனால், கடினமான மற்றும் சிக்கலான விஷயங்களைக் கற்றுக்கொள்ள முயற்சிப்பவர்களுக்குப் போட்டி மிகவும் குறைவாக இருக்கும். போட்டி இல்லாத இடத்தில் வெற்றி பெறுவதும், அந்த வெற்றியின் பலனும் பலமடங்காக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
தொடர் வெற்றிக்குத் தேவையான நான்கு பண்புகள்!
Success Tips
  • தொடர் கற்றல்: உலகத்தரம் வாய்ந்த புத்தகங்களைப் படிப்பது, புதிய திறன்களை வளர்த்துக் கொள்வது என உங்களை நீங்களே தொடர்ந்து மெருகேற்றிக் கொள்ள வேண்டும்.

தொழில்நுட்பத்தைச் சரியாகக் கையாளுவதும், அதே சமயம் மனிதர்களுக்கே உரிய அன்பு, ரசனை, மற்றும் ஆழமான புரிதலை வளர்த்துக் கொள்வதும் உங்களை ஒரு 'சூப்பர் ஹியூமனாக' மாற்றும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com