மின்னல் வேகத்தில் முன்னேற முதலில் ஒரு 'பிரேக்' எடுங்கள்!

வெற்றிக்கு முட்டுக்கட்டையாகும் கடும் உழைப்பு! நீங்கள் செய்யும் தவறு என்ன தெரியுமா?
A man take Rest in the evening
Rest motivation article
Published on

முன்னேற வேண்டியைதைக் குறிக்கோளாகக் கொண்டு அதற்கு ஏற்ப செயல் பட வேண்டியது அவசியம். அதே சமயத்தில் இடைவிடாது பாடுபடுவது, இலக்கை நோக்கி சிந்தனைகளை வளர்த்துக் கொள்வது தேவை என்றாலும், அதிகபடியாக அழுத்தம் கொடுத்து செயல்படுவது எதிர்பார்த்த ரிஸல்டுகளுக்கு பதிலாக, எதிர் மறையான முடிவுகளுக்கு வழி வகுக்கும்.

உழைப்பு, செயல்படுத்தும் திறமை ஆகியவற்றில் தொய்வு ஏற்படவும், அலுப்பு, சலிப்பிற்கு வழிகாட்டி தன்னம்பிக்கையிலும் பின்னடைவு ஏற்படுத்தும்.

இதற்கு முக்கிய காரணம் தொடர் சிந்தனை, கவலை கொள்வது சக்திக்கு மீறி ஒரேயடியாக இடைவிடாமல் உழைப்பது. உடலையும், மனதையும் வருத்திக் கொள்வது.

இத்தகையை சூழ்நிலையில் வெற்றி இலக்கை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று சரிவர உறக்கம் இன்மை, அதிக படியான தேவையில்லாத பதட்டங்களை அதிகப் படுத்திக் கொள்வது... இவை நன்மை பயக்குவதற்கு மாறாக தடங்கல்களாக உருவாக அதிக வாய்ப்புக்கள் உள்ளன.

இதில் வருத்தப்பட வேண்டியது என்னவென்றால், வெற்றி இலக்கை அடைய வேண்டும் என்று இடைவிடாமல் கவனம் செலுத்தி உழைத்து வரும் தனிபட்ட நபரின் செயல்பாடே பின்னடைவிற்கு காரணம்.

இதையும் படியுங்கள்:
ரிஸ்க் எடுக்க பயமா இருக்கா? இந்த சீக்ரெட் உங்களுக்குத்தான்!
A man take Rest in the evening

இதை உரிய நேரத்தில் கை மீறி செல்வதற்கு முன்னால், சரிவர கண்டு அறிந்து, கண்டுபிடித்து தடுத்து நிறுத்த அத்தியாவசியமான நடவடிக்கைகள் எடுப்பது முக்கியம்.

இது சாத்தியம். அதற்கு தேவை பிரேக். ஆம் ஓய்வு. வெற்றி இலக்கை குறிக்கோளாக நோக்கி பயணிப்பவர் ஆரோக்கியத்துடன் இருந்தால் தான், ஒரு முகப்படுத்தி சிந்திக்கவும், உரிய முடிவுகள் எடுக்கவும், தேவையான செயல்பாடுகளில் முழு வேகத்தோடு ஈடு படவும் முடியும்.

அவ்வாறு செய்தால் தான் தரத்திலும், எண்ணிகையிலும் குறைபாடுகள் இல்லாமல் ரிசல்ட்டுக்களை பெற முடியும்.

அத்தகைய ரிசல்ட்டுக்கள் நேர்மறை எண்ணங்களை மேம்படுத்திக் கொள்ள வழி வகுப்பதுடன் மகிழ்ச்சிகரமான சூழ்நிலைக்கு மாற்றும். அது உத்வேகம் எடுக்க உதவும். அதிக படியான முடிவுகள் பெறுவதும் சாத்தியம்.

இவற்றிற்கு தேவை இடையில் ஓய்வு எடுத்துக் கொள்வதை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். தேவையான அளவு ஓய்வு உடலுக்கு மட்டும் அல்லாமல் குறிப்பாக மனதிற்கும் தேவை.

அந்த ஓய்வு காலத்தில் உடல் ஓய்வுக்கு அளிக்கும் முக்கியத்துவம் சிந்திப்பதற்கும் (வெற்றி இலக்கை விட்டு விலகி இருக்க வேண்டியது மிகவும் அவசியம்) ஒதுக்க வேண்டும்.

இல்லாவிட்டால் இந்த ஓய்வு எதிர் பார்க்கும் ரிசல்ட்டை தரவே தராது. வெற்றி இலக்கில் இருந்து ஒதுங்கி (மறந்து) பூர்ண ஓய்வு எடுத்துக் கொள்வதால் நன்மைகள் உண்டாகும்.

முக்கியமாக, புத்துணர்ச்சி ஏற்படும். சிந்திக்கும் திறமை பட்டை தீட்டப்பட்டு தன்னம்பிக்கை அதிகரித்து ஆர்வம் வேகம் உயர்ந்து ரீசார்ஜ் ஆனப்படியால் முடிவுகள் சாதகமாக அமையும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com