கவிதை - டேய் தம்பி...

Awarness kavithai
kavithaiImage credit - imagefinder.com
Published on

டேய் தம்பி.....

விதியின்னு வந்துபுட்டா

வழியேதுமில்லையின்னு

சொல்லி வச்சான் பாரு ஊருக்குள்ள

மதி வெச்சி எட்டு வெச்சா

விதி ஒன்னு மாறுமுன்னு

சொல்லித் தாரேன் கேளுகண்ணு...

பொல்லாத உலகமடா - இது

போட்டி போட்டு உருளுதடா

கண்ணு ரெண்ட மூடிக்கிட்டா காலம் நின்னு போகுமுன்னு

நெனப்பால அளக்காத நீயும்

பொழப்பத்து திரியாத...

டேய் தம்பி, விதி ஒன்னு மாறுமுன்னு சொல்லித்தரேன் நீ கேளுகண்ணு...

கூட்டத்தோட ஓடாதே - கொள்க

ஒன்னு நெனப்புல இருந்தா

உன் கூரை மேல ஆகாசம் வரும்

என்ன சொன்னா என்னான்னு

நிக்காம நீட்டி நடந்தா

விதிகூட மண்ணாட்டம் தான்

டேய் தம்பி...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com