பிரபலங்களுக்காக சண்டை போடுறீங்களா? நீங்க 'Mass Psychosis'ல மாட்டிட்டீங்க!

Mass Psychosis
Mass Psychosis
Published on

நாம எல்லாருமே நமக்குச் சுயமா சிந்திக்கிற திறமை இருக்கு, நம்ம வாழ்க்கையில நாம எடுக்கிற எல்லா முடிவும் நமக்குப் பிடிச்சுதான் எடுக்குறோம்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம். ஆனா, நான் இப்போ உங்ககிட்ட வந்து, நீங்க பிறந்ததுல இருந்து இப்போ வரைக்கும் நம்புற, செய்ற எல்லா விஷயங்களுமே, ஏற்கெனவே யாரோ ஒருத்தரால உங்களுக்காக முடிவு செய்யப்பட்டதுன்னு சொன்னா நம்புவீங்களா? இந்த ஒரு விஷயம்தான் "மாஸ் சைக்கோசிஸ் (Mass Psychosis)"னு சொல்லப்படுது.

சுய சிந்தனையின் மாயை!

உண்மை என்னன்னா, மனுஷங்க யாருமே நமக்கான கருத்துக்களை நாமளே உருவாக்குறது கிடையாது. ஏற்கெனவே யாரோ ஒருத்தரால உருவாக்கப்பட்ட கருத்துக்களைத்தான் நாம நம்ம கருத்துக்களா நம்பிட்டு இருக்கோம். அரசியல்வாதிகள், மீடியாக்கள், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்னு இவங்க எல்லாரும் பல நூற்றாண்டுகளா இந்த "மாஸ் சைக்கோடிக்" வழிகளைப் பயன்படுத்தி, மனுஷங்களை அவங்களுக்கு ஏத்த மாதிரி கட்டுப்படுத்திட்டுதான் இருக்காங்க.

நாம பார்க்குற, கேட்கிற விஷயங்களோட உண்மைத்தன்மையை நாம ஆராயறதே கிடையாது. ஒரு விஷயம் பொய்யாவே இருந்தாலும், அது நமக்குக் கேட்கப் பிடிச்சிருந்தா, அதை நம்ப ஆரம்பிக்கிறோம். நம்மள மாதிரியே சுத்தி இருக்கிற எல்லாரும் ஒரு விஷயத்தை நம்பும்போது, அது உண்மையா பொய்யான்னு யோசிக்காம, நாமளும் அதைக் கண்மூடித்தனமா நம்ப ஆரம்பிக்கிறோம். இதுதான் இந்த கூட்ட மனநோயோட ஆரம்பம்.

குழப்பமும் கட்டுப்பாடும்!

இந்த நவீன சர்வாதிகாரிகள் நம்மளை எப்படி கட்டுப்படுத்துறாங்க தெரியுமா? முதல்ல, நம்ம மன அமைதியைக் கெடுக்கிற மாதிரி பயத்தையும், குழப்பத்தையும் உருவாக்குவாங்க. உதாரணத்துக்கு, மதத்தின் பெயர்ல, ஜாதி பெயர்ல சண்டைகளை உருவாக்குறது, போர் பயத்தை விதைக்கிறது, இதெல்லாம் செஞ்சு நம்மளை ஒரு குழப்பமான மனநிலையிலேயே வச்சிப்பாங்க.

அடுத்து, அந்த குழப்பத்துலேருந்து நம்ம கவனத்தை திசை திருப்புறதுக்கு, ஒரு தேவையே இல்லாத பொழுதுபோக்கை நம்மகிட்ட திணிப்பாங்க. அந்தப் பொழுதுபோக்கு நம்மளைக் கொஞ்ச நேரத்துக்கு நம்ம வாழ்க்கைப் பிரச்சனைகளை மறக்க வச்சு, ஒரு பொய்யான சந்தோஷத்தைக் கொடுக்கும். அப்புறம், மறுபடியும் ஒரு குழப்பம், மறுபடியும் ஒரு திசைதிருப்பல்னு இது ஒரு சுழற்சி மாதிரி நடந்துகிட்டே இருக்கும்.

இதைவிட முக்கியமான ஒரு யுக்தி, மனுஷங்களை ஒருத்தருக்கு ஒருத்தர் பழக விடாம, பேச விடாம தனிமைப்படுத்துறது. எல்லாரும் தனித்தனியா இருக்கும்போது, அவங்களோட சிந்தனைகளை எளிதா கட்டுப்படுத்த முடியும். ஸ்கிரீனுக்கு அந்தப் பக்கம் இருக்கிற, நம்மளைப் பத்தி துளியும் கவலைப்படாத ஆட்களோட கருத்துக்களை கேட்டுக்கிட்டு, அவங்களுக்காக நம்ம வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருப்போம்.

 தப்பிக்க வழி என்ன? 

இந்த மாதிரி பொய்யான கற்பனைகள்ல இருந்து நாம வெளியே வரணும். நாம நம்புற விஷயங்களை, பார்க்குற செய்திகளைக் கேள்வி கேட்க ஆரம்பிக்கணும். சுயமா சிந்திக்கணும். நம்ம வாழ்க்கையில இருந்து நம்ம கவனத்தை திசை திருப்புற தேவையற்ற விஷயங்களை நம்ம வாழ்க்கையிலிருந்து முழுமையா அகற்றணும்.

உண்மை என்னன்னா, உங்க வாழ்க்கையை மாத்தணும்னு நீங்க முடிவு பண்ணா, அதுக்கு என்ன செய்யணும்னு உங்களுக்கே நல்லாத் தெரியும். உங்க வாழ்க்கையை நீங்க வாழ ஆரம்பிங்க. மத்தவங்களோட கருத்துக்களுக்காக இல்லாம, உங்களுக்காக வாழுங்க. அதுதான் இந்த "மாஸ் சைக்கோசிஸ்"ல இருந்து தப்பிக்க ஒரே வழி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com