அறிஞர்களின் அர்த்தமுள்ள பொன்மொழிகள்..!

Meaningful sayings
Motivational articles
கோவீ.ராஜேந்திரன்

வணக்கம், அடிப்படையில் நான் ஓர் ஆட்டோமொபைல் இன்ஜினியர், ரிலாக்சேஷனுக்காக பத்திரிகைகளில் ஆரம்பத்தில் துணுக்குகள் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வந்துள்ளேன். தமிழகத்தில் வரும் முன்னணி பத்திரிகைகளில் என்னுடைய கட்டுரைகள் 500க்கும் மேற்பட்டவைகள் வந்துள்ளது. பொது அறிவு சம்பந்தமாக இது வரை 12 புத்தகங்கள் எழுதியுள்ளேன். கல்கி ஆன்லைன் பத்திரிகை குழு நிர்வாகம் மற்றும் அதன் ஆசிரியர் குழு அன்பாலும், ஆதரவாலும் இது வரை 300 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி உள்ளேன் என்பதை நன்றியடன் தெரிவித்துக் கொள்கிறேன். வித்தியாமான தகவல்கள் அடங்கிய படைப்புகள் வழங்க வேண்டும் என்பது என் விருப்பம்.

Updated on

ங்களிடம் ஆலோசனை கேட்க வருபவன், நீங்கள் அவனை புகழ்ந்து பேசவே விரும்புகிறான்.

-செஸ்டர்ஃபீல்ட்

உலகத்திலேயே மிகப்பெரிய மனிதன் யார்? ஒரு வேர்க்கடலையை சாப்பிட்டுவிட்டு, அத்துடன் நிறுத்திக் கொள்ளும் மனோபலம் உள்ளவன்.

-பாலக்

கோபம் என்பது தற்காலிகப் பைத்தியம்.

-ஹொரேஸ்

தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியமும், அதனை திருத்திக் கொள்வதற்கான பலமும்தான் வெற்றி பெறுவதற்கு சிறந்த குணாதிசயமாகும்.

-லெனின்

தவறை ஒப்புக்கொள்ள வெட்கப்படாதீர்கள். நேற்றை விட இன்று நீங்கள் புத்திசாலி என்பதைக் காட்ட ஒரு சந்தர்ப்பம் அது.

- அலெக்ஸாண்டர் போப்

உன்னுடைய பயத்தை உன்னிடமே புதைத்து வைத்துக்கொள். உன்னுடைய தைரியத்தை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்.

-ஸ்டீவன்சன்

பேசும் முன்னால் கவனமாகக்கேள். எழுதும் முன்னால் யோசிக்கத் தவறாதே. செலவழிக்கும் முன்னால் சம்பாதிக்கப்பார். பிறரை விமர்சிக்கும் முன்னால் உன்னை எண்ணிப்பார். ஓய்வு பெறும் முன்னால் சேமித்துவை. மரிக்கும் முன்னால் கொடுத்துவிடு.

-ராபர்ட் கார்டு வெல்

உரிய சமயத்தில் கண்டிக்கத் தெரியாதவனுக்கு, மற்றவர்களிடம் கருணை காட்டவும் தெரியாது.

-கார்லைல்

ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் விசுவாசமாக வேலை செய்யுங்கள்.வாழ்க்கையில்உயர்ந்து,, முதலாளியாகிய பிறகு ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்யலாம்.

-ராபர்ட் ஃபிராஸ்ட்

இயற்கையிலேயே உண்டாகும் பிரச்னை எப்போதும் பிரச்னையாக இருக்காமல், சிலர் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது விடுகிறது.

-எரிக் எரிக்சன்

நமது வருமானங்கள் நமது காணிகளைப் போன்றதே. சிறியதாக இருக்குமானால் நம்மைக் கடிக்கிறது. மிகப் பெரிதாக இருக்குமானால் தடுக்கி வழிச்செய்கிறது. -கால்டன்

கற்க வேண்டும் என்ற ஆர்வ உந்துதலை மாணாக்கர்களிடம் ஏற்படுத்தாமல் போதனை செய்ய முயலும் ஆசிரியர், சூடில்லாத இரும்பை சுத்தியல் கொண்டு அடிப்பவராவார்.

- ஜோர்ஜ் மன்

முதுமையை அடைந்த பிறகே நீ சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளாததால் பற்றி சிந்திக்க ஆரம்பிக்கிறார்.

- ஜேம்ஸ் சீன்

ஒருவனின் தன்னம்பிக்கையும், சொந்த ஒழுக்கமுமே அவனது அதிர்ஷ்டத்தை தீர்மானிக்கின்றன.

-பைரன்

இதையும் படியுங்கள்:
கருணாநிதி பேரன் என்பதை தவிர உதயநிதிக்கு வேறு என்ன தகுதி உள்ளது – சீமான்!
Meaningful sayings

புத்தகங்களோடு வாழ்க்கையும் சேர்த்து படிப்பவன்தான் உண்மையான அறிவாளி.

- லின் யுடவ்

நீங்கள் உங்கள் பையன்களுக்கு ஒரே ஒரு பொருளைத்தான் கொடுக்க முடியும் என்றால்... உற்சாகத்தைத் கொடுங்கள்.

-பாட்டர்ஸன் புருஸ்

உலகம் ஒரு தொட்டில் அல்ல என்பதை, அனுபவத்தை தவிர உனக்கு வேறு எதனாலும் போதிக்க முடியாது. -சிக்மண்ட் ஃபிராய்டு

எதற்கும் தயாராக இருப்பவனை நோக்கிதான் வாய்ப்புகள் வரும்.

- லூயிஸ் பாய்சர்

ஏழை அடுத்தவேளை உணவைப் பற்றி சிந்திப்பான். சீமான் சென்ற வேளை உணவினால் அவதிப்படுவான்-

-காங்கி

எல்லா குணங்களிலும் சிறந்தது "மெளனம்" இதன் மூலம் பிறர் குறைகளை அறியவும், நம் குறைகளை மறைக்கவும் முடியும்.

- ஜினோ

logo
Kalki Online
kalkionline.com