கனத்த இதயம்: ஒறு குருவியின் சுமை!

A bird flying with stones
motivation story
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

சிலர் தங்கள் வாழ்க்கையில் நடந்த கடந்த கால விஷயங்களை மறக்காமல், அவற்றைத் தூக்கி சுமந்துக் கொண்டே செல்வார்கள். ஆனால், நடந்ததை மாற்ற முடியாது என்பதை புரிந்துக் கொண்டு இன்றைக்கான வாழ்க்கையை வாழ முயற்சிப்பதே சிறந்தது. இதைப் புரிந்துக் கொள்ள ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்.

ஒரு ஊரில் வாழ்ந்து வந்த அழகான குருவிக்கு விசித்திரமான பழக்கம் இருந்தது. அது என்னவென்றால், அந்த குருவி தினந்தோறும் தன் வாழ்க்கையில் சந்திக்கும் நல்ல விஷயத்தையும், கெட்ட விஷயத்தையும் சின்ன சின்ன கற்களில் எழுதிக்கொண்டே வந்தது. இந்த பழக்கத்தை குருவி தினமும் செய்வது மட்டுமில்லாமல் அது போகும் இடத்திற்கும் அந்த கற்களை ஒரு பையிலே போட்டு எடுத்துச் சென்றது.

ஆரம்பத்தில் இது நன்றாக இருந்தாலும், போக போக அந்த பையும் கனமானது; குருவியின் வேகமும் குறைந்தது. ஒரு நாள் பெரிய ஆந்தை ஒன்று குருவியைப் பார்த்து, 'நீ எங்கே போனாலும் எதற்காக அந்த பையையும் சேர்த்து சுமந்து செல்கிறாய்?' என்று கேட்க, அதற்கு அந்த குருவி, 'என் வாழ்க்கையில் நடந்த எல்லா நிகழ்வுகளும் என் கூடவே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அப்போ தான் நான் எதையும் மறக்க மாட்டேன்' என்று கூறியது.

இதைக்கேட்ட ஆந்தை சிரித்துக் கொண்டே சொன்னது, 'இன்றைய நாளை நீ சந்தோஷமாக வாழ்கிறாயா? அல்லது நேற்று நடந்ததை உன் முதுகில் சுமந்துக்கொண்டு பறக்கிறாயா?' என்று கேட்டது. அந்த குருவியோ, ஆந்தை சொன்னது எதுவுமே புரியாமல் அங்கிருந்து பறந்து சென்றது. சில வாரங்களில் குருவியின் பை நிரம்பி வழிகிறது. கடைசியாக குருவியால் அந்த பையை தூக்க தெம்பில்லாமல், பறக்க முடியாமல் கீழே விழுந்து இறந்து விடுகிறது.

அன்றைக்கு இரவு ஆந்தை குருவியின் உடலைப் பார்த்து, 'நீ எல்லாவற்றையும் சுமக்க முயற்சி செய்தாயே தவிர, வாழ முயற்சி செய்யவில்லை!' என்று கூறியது.

இந்தக் கதையில் வந்ததுப் போல நாம் தினந்தோறும் நம் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்களையும், கெட்ட விஷயங்களையும் நினைத்துப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

இதையும் படியுங்கள்:
எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பது எப்படி?
A bird flying with stones

ஆனால், கடந்து செல்வது தானே வாழ்க்கை. நேற்று நடந்ததை நம்மால் மாற்ற முடியாது. ஆனால், இன்று நடப்பதை நம்மால் மாற்ற முடியும். எனவே, தலையில் இருக்கும் பாரத்தை இறக்கி வைத்துவிட்டு Forgive, Forget and Move on.

logo
Kalki Online
kalkionline.com