இயல்பான வாழ்க்கையே மகிழ்ச்சியின் அச்சாணி!

Normal life is the measure of happiness!
Lifestyle articles
Published on

வ்வொருவருக்கும் ஒரு குணம் உண்டு அந்த குணத்தை நாம் மற்ற இயலாது. சிலர் உதவவேண்டும் என்ற எண்ணத்தில் எப்பொழுதும் இருப்பார்கள். ஆனால் அதற்கு நேர்மறை கருத்துக் கொண்டவர்களும் நம்மோடுதான் இருப்பார்கள். நமக்கு வரும் சோதனைகளும் சிக்கல்களும் நம் குணத்தை மாற்ற முயற்சிக்கும் ஆனால் நாம் மாறக்கூடாது.

எந்த வகையிலும் சோதனையோ சிக்கல்களோ வந்தாலும், உங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளக்கூடாது. நீங்கள் இயல்பிலேயே மகிழ்ச்சியானவர்.உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புகிறீர்கள். அப்படியானால்!, ஒரு சிக்கல் வந்தால் ஏன் பதற்றம் அடைய வேண்டும்...? உங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளவேண்டும்...? 

ஓசோ சொல்கிறார், ’யாரோடும் உங்களை நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். ஒப்பிடுவது போட்டி மனப்பான்மையைத்தான் உருவாக்கும். நீங்கள் ஒருமுறை போட்டி போடத் தொடங்கிவிட்டால், அதற்கு முடிவே இருக்காது.

ஒரு மீன் தொட்டிக்கு அருகே ஒரு புத்த பிக்குவும் அவரது சீடரும் நின்று கொண்டிருந்தனர். அந்த தொட்டியின் விளிம்பிலிருந்த ஒரு தேள் தவறி தொட்டிக்குள் விழுந்தது.

உடனே அந்த புத்த பிக்கு தண்ணீருக்குள் கையை விட்டு தேளை எடுத்து வெளியே விட்டார். அப்போது அவரது கையில் தேள் கொட்டியது. மீண்டும் அந்த தேள் திரும்பி தொட்டிக்குள் விழுந்தது.

இதையும் படியுங்கள்:
வெற்றியாளர்கள் கடைபிடிக்கும் 7 விஷயங்கள்!
Normal life is the measure of happiness!

உடனே!, சற்றும் தாமதிக்காமல் கையை தொட்டிக்குள் விட்டு தேளை எடுத்து வெளியே விட்டார். இந்த முறையும் தேள் கொட்டாமல் இல்லை.

மறுபடியும் தேள் தொட்டிக்குள் விழ புத்த பிக்கு காப்பாற்றுகிறார். அப்போதும் தேள் கொட்டுகிறது பொறுக்க முடியாமல் புத்த பிக்குவின் சீடர் கேட்கிறார்.

அதுதான் உங்களை கொட்டுகிறதே அதை ஏன் காப்பாற்றுகிறீர்கள்...? என்று, அதற்கு புத்த பிக்கு கொட்டுவது என்பது தேளின் இயல்பு அதைக் காப்பாற்றுவது என்னுடைய இயல்பு, ஏன் என்னுடைய இயல்பை மாற்றிக்கொள்ள வேண்டும் எனக்கூறுகிறார். மனநிறைவிற்கான வழிமுறைகள் மனிதனுக்குள் இல்லாவிட்டால் மகிழ்ச்சிக்கான வாசற்கதவுகள் ஒருபோதும் திறக்காது.

தொடு வானத்திற்கு அப்பால் மாயத்தோற்றமிடும் மலர்களின் கூட்டத்தைக் கனவில் கண்டு மகிழ்வதைவிட, நம் வீட்டு சாரளத்திற்கு வெளியில் மலர்ந்து சிரிக்கும் மலர்களைக்கண்டு  மகிழ்ச்சி கொள்வதே வாழ்வின் மறைபொருள்.அடுத்தவருடன் நம்மை ஒப்பிட்டு அமைதி இழக்காமல், நம் இயல்புகளுடன் நாம் மகிழ்ச்சியாக இருப்போம். வாழ்க்கை, நாம் நினைப்பதைவிட குறைவான காலம் கொண்டது.

உன்னிடம் இருப்பதோடு நிறைவடைவாயாக!. ஒருவர் எல்லாவற்றிலும் முதல்வராக முடியாது. நம்முடைய இயல்பான வாழ்க்கையை நம் வாழ்க்கையின் அச்சாணியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com